தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘கோடியில் ஒருவன்’.
ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் கவனித்துள்ளார்.
இந்த படத்தின் எடிட்டிங்கை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார்.
இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
விஜய் ஆண்டனி…
”கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார்.
எதிர்காலத்திலும் அவருடன் பணிபுரிவேன்.
ஆத்மிகா திறமையான நடிகை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.
நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.
இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது” என்றார்.
ஆனந்த் கிருஷ்ணன்…
‘மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார் விஜய் ஆண்டனி.
கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டராக நடித்துள்ளார்.
இந்த அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினையை மாற்றும் கேரக்டரில் நடித்துள்ளார்.” என்றார்.
ஆத்மிகா…
”கொரோன காலத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க வந்தார்.
அவர் ஒரு ரியல் லைப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
தனஞ்செயன் கூறுகையில்…
”கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.
ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்”
இவ்வாறு கலைஞர்கள் (படக்குழுவினர்) பேசினர்.
Actress Aathmika praises vijay antony