பாட்ஷா தம்பி நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’

பாட்ஷா தம்பி நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் பாட்ஷா.

பாட்ஷாவில் அவரது தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார்.

கன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரது மகன் அக்ஷித்தும் தந்தையை போலவே ‘சீதாயணம்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தை பிரபாகர் ஆரிபாக இயக்கியுள்ளார்.

கலர் கிளவுட்ஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில்
லலிதா ராஜ்யலக்ஷ்மி தயாரித்துள்ள மும்மொழிப் படத்தை ரோஹன் பரத்வாஜ் வழங்குகிறார்.

இப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷண் நடிக்க, முக்கிய வேடங்களில் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹீரோவின் காதல் விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.. இதன் விளைவு என்ன?

ஹீரோ யாருக்கு எதிராக போராடுகிறார்?

அவர் என்ன செய்தார் ? எதற்காக செய்தார்? என்ற சில திருப்பங்களுடன் பெண்களை மதிக்க வேண்டும் என்கிற கருத்துடன் உருவாகியுள்ளது சீதாயணம்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

புகழ்பெற்ற தமிழ் மற்றும் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரின் வாரிசான இசைமைப்பாளர் பத்மநாப பரத்வாஜ், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் முதல் முறையாக திருமண அழைப்பிதழில் இருக்கும் ஒரு ஸ்லோகத்தை பாடல் வடிவத்தில் உருவாக்கியுள்ளார்.

தெலுங்கு கன்னடத்தில்,ஸ்வேதா மோகன் இந்தப் பாடலை பாட…

தமிழில், பிரபல பின்னணிக் குரல் S.N.சுரேந்தர் மகளும், நடிகர் இளைய தளபதி விஜய்யின் உறவினர் பாடகி பல்லவி வினோத் தமிழில் மூச்சு விடாமல் முதல் முறையாக பாடி இருக்கிறார்…

பாங்காங், மங்களூர், அகும்பே, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் 63 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

அதை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன..

*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் oகலைஞர்கள் விபரம்*

நடிகர்கள் ; அக்ஷீத் . அனாஹிதா பூஷண், வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா,
அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா மற்றும் பலர்.

நடனம் ‘ அனீஸ்

சண்டைப்பயிற்சி ; ரியல் சுரேஷ்

பாடல்கள் ; பழனிபாரதி

இசை ; பத்மநாபா பரத்வாஜ்

ஒளிப்பதிவு ; கொல்லி துர்கபிரசாத்

படத்தொகுப்பு ; பிரவீன் புடி

இயக்குனர் ; பிரபாகர் ஆரிபாக

தயாரிப்பு ; லலிதா ராஜ்யலக்ஷ்மி

நிர்வாக தயாரிப்பு ; ப்ருத்வி பொலவரப்பு

sasi kumar

முருகதாஸ் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் மீண்டும் ‘சுறா’ ஜோடி..?

முருகதாஸ் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் மீண்டும் ‘சுறா’ ஜோடி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamanna in thalapathy 65மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு தளபதி 65 படத்திற்காக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தர்பார் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் தமன் இசையமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய்யின் 50வது படமான ’சுறா’ என்ற படத்தில் விஜய் தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர்.

ஆனால் சுறா படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியால் விறுவிறுப்பு.. மாஸ்டர் படம் பார்த்து வியந்த விஜய்

விஜய்சேதுபதியால் விறுவிறுப்பு.. மாஸ்டர் படம் பார்த்து வியந்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vijay sethupathiலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர்.

கடந்தாண்டு 2019 ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய இப்பட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இதனால் மாஸ்டர் படத்தில் சில திருத்தங்களை செய்திருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

எனவே இந்தப் பணிகளை முடித்துவிட்டு படக்குழுவினருக்கு படத்தை திரையிட்டுள்ளனர்.

இந்த படத்தை பார்த்த விஜய் ஒவ்வொரு காட்சியை ரசித்து பாராட்டினாராம்.

சில காட்சிகளில் ‘உண்மையில் இது நான்தானா ?’ எனவும் கேட்டாராம்.

வில்லன் விஜய்சேதுபதி தோன்றும் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதாக தெரிவித்தாராம்.

வா மச்சி நம்பர் கேட்போம்..; திருமணமாகியும் அடங்காத சதீஷ்

வா மச்சி நம்பர் கேட்போம்..; திருமணமாகியும் அடங்காத சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathishசின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினி ரம்யா. இவர் ’ஓகே கண்மணி’ மற்றும் ‘ஆடை’ உள்ளிட்ட ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரம்யா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தனது சின்ன வயது போட்டோவை பதிவு செய்து இவர் யாரென்று கண்டுபிடியுங்கள் என கேட்டிருந்தார்.

இந்த போட்டோவை பார்த்த நடிகர் சதீஷ், அவரின் நண்பருடன் உள்ள சின்ன வயது போட்டோவை போட்டு ’வா மச்சி நம்பர் கேட்டுப் பார்ப்போம்’ என கமெண்ட் அடித்துள்ளார்.

ட்விட்டரில் புளூ டிக்…: பெருந்தலைவர் பாணியில் சேரன் நெத்தியடி பதில்

ட்விட்டரில் புளூ டிக்…: பெருந்தலைவர் பாணியில் சேரன் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheran twitter20 வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் என்ற சமூக வலைத்தளமே பிரபலமாக இருந்தது. அதில் அக்கௌண்ட் இல்லையென்றால் ஏதோ வங்கி கணக்கு இல்லாத போல சமூகம் பார்க்க தொடங்கியது.

அதன்பின்னர் ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களும் இந்தியாவில் பிரபலமாக தொடங்கியது.

இதில் தற்போது பல பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரபலங்கள் பெயரில் பலர் போலி அக்கௌண்ட் தொடங்குவதால் சம்பந்தப்பட்ட அக்கௌண்ட்டுக்கு மட்டும் புளு டிக் கொடுப்பது ட்விட்டர் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

அதுபோல் மீடியாக்கள் பெயரிலும் நிறுவனங்கள் பெயரில் நிறைய போலி அக்கௌண்ட்டுக்கள் உருவாவதால் இதை நடைமுறை தொடர்ந்து வருகிறது.

ஆனால் ஒரு சிலர் இதை வைத்து பெரியளவில் பிசினஸ் செய்து வருகின்றனர்.

முதலில் கஷ்டப்பட்டு நல்ல பெயரை சம்பாதிக்கும் அவர்கள் நாளடைவில் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய் பிரச்சாரங்களுக்கு துணை போகின்றனர்.

மேலும் சிலர் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்ஸ் போட்டு கூட சில்லரை பார்த்து வருகின்றனர். ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு என படத்தயாரிப்பாளர்களிடம் கறந்தும் வருகின்றனர்.

இது தெரியாமல் இவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி ரசிகர்கள் அதை பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர் ட்விட்டரில் புளூ டிக் வைத்திருப்பார்கள். அதாவது VERIFIED ACCOUNT (அதிகாரப்பூர்வ அக்கௌண்ட்) என்ற பெயரில் இதை சிலர் அசால்லட்டாக செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புளூ டிக் குறித்து நடிகரும் இயக்குனருமான சேரன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..

இங்கே பதில் வருவதற்கும் லைக் வாங்குவதற்கும் ரீடுவீட்டுக்கும் புளூ டிக் தேவையென சிலர் எனக்கு அறிவுரை சொன்னார்கள்… அப்படி ஒரு டிக்கே வேணாம்ன்றேன்…. எனக்கு ரசிகர்கள் மக்களிடம் இருந்து கிடைக்கும் டிக் போதும்ன்றேன்….

இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சேரன்.

வேணாம்ன்றேன்…. போதும்ன்றேன்…. என்ற வார்த்தைகளை மறைந்த தமிழக முதல்வர் காமராஜர் கூறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annamalai cm rajiniகர்நாடகா போலீஸ் சிங்கம் என அழைக்கப்பட்ட அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து தற்சார்பு விவசாயம் செய்ய போவதாக அறிவித்தார்.

எனவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையில் அவர் ரஜினி கட்சியில் இணைய போகிறார். அவரை தான் ரஜினி தன் கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்போகிறார் என இவர்களே (சில மீடியாக்கள்) செய்திகளை பரப்பிவிட்டனர்.

ஆனால் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் அண்ணாமலை அவர்கள் பாஜக.வில் இணைந்தார். மோடிக்கு ஆதரவாக பேசினார்.

இது செய்தியை பல்வேறு இணையத்தள மீடியாக்கள் திரித்து செய்தியாக வெளியிட்டனர்.

அதாவது.. ரஜினிக்கு அண்ணாமலை கல்தா… ரஜினி வேட்பாளர் பாஜக.வில் இணைந்தார்… ரஜினியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை எஸ்கேப் என பல்வேறு தலைப்புகளில் செய்தியாக வெளியிட்டனர்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் குறித்து ரஜினி எதுவுமே பேசாத நிலையில் இவர்களே ஒரு கட்டுக்கதை தொடங்கி அந்த பொய்கதையை இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் தெரியவில்லை.

இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்…

ஒரு முறை சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளினி கேள்வி கேட்டார்.

அதாவது உங்களுகு பிடித்த உணவகம் எது? என்றார்.

அதற்கு சிவகார்த்திகேயனோ… தன் சொந்த ஊர் திருச்சியில் உள்ள ஒரு சிறிய உணவகத்தை பெயரை சொன்னார்.

அதற்கு தொகுப்பாளினியோ.. என்ன சார்? நீங்க சென்னையிலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் (லீ மெரிடியன், சோழா.. பார்க்) பெயர்களை சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன் என்றார்.

அதற்கு சிவாவோ… நீங்களே ஒரு பதிலை எதிர்பார்த்து அதை நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? என கேட்டார்.

அதுபோல்தான்.. இவர்களே ரஜினியை பற்றி ஒரு யூகத்தை வைத்துக் கொள்வார்கள். அது நடக்கவில்லை என்றாலும் அதை மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை குழப்ப பார்க்கிறார்கள்.

ரஜினி சொன்னது போல.. மீடியாக்கள் நடுநிலையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

 

 

Fake medias spreading Rajini Political Partys CM Candidate

More Articles
Follows