தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவி சீரியல்களில் பிரபலமானவர் நடிகர் ராஜ்கமல். இவர் டிவி நடிகை லதாராவ்வின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சண்டி குதிரை என்ற படத்தை தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள மேல்நாட்டு மருமகன் என்ற திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
எனவே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது…
பல மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் இங்கு ஒரு நடிகராக உங்கள் நண்பனாக, தம்பியாக, மகனாக இங்கு வந்துள்ளேன்.
சினிமாதான் என் வாழ்க்கை. அது தவிர எனக்கு எதுவும் தெரியாது.
நான் டிவி சீரியல்களில் நடித்தது பெரும் குறையாக போய்விட்டது. இப்போதும் கூட 40 சீரியல்கள் வாய்ப்புகள் வந்தன.
ஆனால் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதால் அதை மறுத்துவிட்டேன்.
நிறைய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு என் போட்டோக்களை அனுப்புவேன்.
மிஷ்கின் ஒருமுறை என்னை திட்டியே விட்டார். டேய் உனக்கு வேற வேலையே இல்லையடா? என்று கூட திட்டி இருக்கிறார்.
நான் நடிகன். நான் வாய்ப்புத்தானே கேட்க முடியும். வேற என்ன செய்ய முடியும்.” என்று உருக்கமாக பேசினார்.