ரங்கன் வாத்தியார் வர்றார்.; பசுபதியுடன் இணையும் ரோகிணி & அம்மு அபிராமி

ரங்கன் வாத்தியார் வர்றார்.; பசுபதியுடன் இணையும் ரோகிணி & அம்மு அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சார் பட்டா பரம்பரை’ படத்தில் ரங்கன் வாத்தியாராக கலக்கியவர் பசுபதி. அவரின் அடுத்த படம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் நெ#6-வது படைப்பாக தயாரிக்கிறார்.

ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் இன்று இனிதே துவங்கியுள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசாமி

எடிட்டிங் ; சிவ நந்தீஸ்வரன்

நிர்வாகத் தயாரிப்பு ; கிருபாகரன் ராமசாமி

தயாரிப்பு மேற்பார்வை ; A. பால் பாண்டியன்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

இப்படம், சம கால மனிதர்கள், வாழ்வதற்கான போராட்ட சூழலில் சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஆக்க்ஷன் கலந்து சொல்கிறது.

தனித்துவமான கதையம்சம் கொண்ட களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் பசுபதி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மற்றும் பிற நடிக நடிகையர், டெக்னிஷியன்கள் விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

Actor Pasupathy’s next film announced

அற்ப விஷயங்களுக்காக மனிதன்..; விக்டர் இயக்கத்தில் இலக்கியா குலுக்கும் ‘மரபு’

அற்ப விஷயங்களுக்காக மனிதன்..; விக்டர் இயக்கத்தில் இலக்கியா குலுக்கும் ‘மரபு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம்.

தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு.

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி “மரபு” என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிறங்குகிறது.

இப்படத்தில் அனுபவமுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தியேட்டர்கள் திறக்காத பட்சத்தில் ஆன்லைன் தளங்களிலும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இப்படத்தின் 50% படபிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

*Cast & Crew*

Hero : Victor

Heroine : Elakiya

Villian : Anand Babu

Hero mother character : Karuthama Rajasree

Producer
Story
Screen play
Dialouge
Direction : Victor Immanuel

VIP films productions new film Marabhu first look released

JUST IN ‘அவன் இவன்’ சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு.; பொய் வழக்கில் விடுதலை கிடைத்தது என பாலா பரவசம்

JUST IN ‘அவன் இவன்’ சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு.; பொய் வழக்கில் விடுதலை கிடைத்தது என பாலா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த படம் ‘அவன் இவன்’.

கடந்த 2011ல் இந்த படம் ரிலீசானது.

இப்படத்தில் நெல்லை மாவட்ட சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் மன்னிப்பு தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக இருந்த நிலையிலும் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை.

எனவே இன்று பாலா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக பாலா பேசும்போது…” பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு நன்றி” என்றார்

ஆனால், சிங்கம்பட்டி இளைய ஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

Director Bala released in Avan Ivan movie case

கருணாஸ் மகன் கென்னின் அடுத்த அவதாரம்..; கைகொடுக்கும் தனுஷ் – வெற்றி மாறன்

கருணாஸ் மகன் கென்னின் அடுத்த அவதாரம்..; கைகொடுக்கும் தனுஷ் – வெற்றி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். இவரது மனைவி & மகன் ஆகியோரும் கலைத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவரது மகன் கென், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்தார்.

இப்படத்தில் கென் நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து ‘வாடா ராசா….’ என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

இப்பாடலை வெங்கி என்பவர் இயக்க சாண்டி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இப்பாடலை கருணாஸ் மனைவி கிரேஸ் பாடியும் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் பாடலில் சித்தி 2 புகழ் ப்ரீத்தி சர்மாவும் நடித்துள்ளார்.

இந்தப் பாடல் இன்று 19 ஆகஸ்ட் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்தப் பாடலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும், வெற்றிமாறன் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட உள்ளனர்.

Ken Karunaas in Vaada Raasa out today at 5PM!

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா ( K.C.Pokadia ) மீண்டும் தமிழுக்கு வருகிறார். BMB புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல பிரமாண்ட படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார்.

சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில்
மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார்.

அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5 படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் இந்த மூன்று கான்களும் நடித்தார்கள்.

மேலும் 5 படங்களில் அட்சயகுமாரும் மற்ற படங்களில் பிரபல நடிகர்கள் நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

இவர் இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகதென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலரை இந்தியில் அறிமுகப்பபடுத்தியுள்ளார்.

இவர் இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த B.M.B. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்களாக ஒரு அங்கமாக இருக்கும் தமிழ் தயாரிப்பாளர், நடிகர் தமிழ்மணியின் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் கே.சி.பொக்காடியா.

அவரிடம், தமிழில் பல படங்களை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

எனவே விரைவில் புதுப்பட அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

Famous producer KC Pokadia to produce films in Tamil again

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு.; ரூ 5 லட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்த கோர்ட்

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு.; ரூ 5 லட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் நடிகர் விஷால் ‘மருது’ திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்று இருந்தாராம்.

அதனை திருப்பி செலுத்த முடியாததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார்.

அதன்படி, லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லைகா உடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்திய தொகைக்கு 30% வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் மாதத்தில் 7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பருக்குள் செலுத்தி விடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது

இந்த நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும், மொத்தமாக 30,05,68,137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் என்பவர் ‘துப்பறிவாளன் 2’ படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்பு கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது என தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

High Court fines Lyca Productions for filing case against Vishal

More Articles
Follows