தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது ‘கொரோனா’.
இந்த வைரசை கொல்ல மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும் மருத்துவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஞாயிறு மார்ச் 22ம் தேதி, நாடு முழுவதும், ‘மக்கள் ஊரடங்கு’ நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டுள்ளார்
இது தொடர்பாக கமல்ஹாசன் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை பார்ட்டி வைத்து பரப்பிய பாடகி கனிகா
பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எனது ரசிகர்கள், நண்பர்கள், மக்களை கேட்டு கொள்கிறேன். மக்கள் ஊரடங்கு என்ற பிரதமரின் அழைப்பிற்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.
தற்போதைய மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலையில், நாம், அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒற்றுமையாக, வீட்டிற்குள் இருக்கும் போது, பாதுகாப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த டுவிட்டரில், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம்,தனுஷ், சிம்பு, விஜயசேதுபதி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், ஜிவிபிரகாஷ், ஜிப்ரான் ஆகியோரையும் கமல் டேக் செய்துள்ளார்.
அதாவது அவர்களும் இதில் இணைய வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
I call upon my fans,my friends and my people in support of the cause on 22nd March Sunday, 7am to 9pm #JantaCurfew (2/2)@rajinikanth #Ajith @actorvijay @Suriya_offl #Vikram @dhanushkraja #Simbu @VijaySethuOffl #Ilayaraja, @anirudhofficial @gvprakash @GhibranOfficial @ThisIsDSP — Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020