பட்டைய கிளப்பும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைலர்

பட்டைய கிளப்பும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களை அடுத்து தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது.

அதில் அதர்வா முரளியின் ‘பட்டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குடும்பத்தின் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி, விளையாட்டு மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி 100% எண்டர்டெயினர் படமாக வெளியாக இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களுக்குப் பிடித்த விதமான படங்களை எடுப்பதில் இயக்குநர் சற்குணம் திறமையானவர். அந்த வரிசையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படமும் நிச்சயம் கவனம் பெறும்.

’பட்டத்து அரசன்’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதர்வா முரளியின் ஒவ்வொரு படத்தேர்வும் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

அந்த வகையில், இந்தத் திரைப்படமும் அவரது திறமையையும் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாகவும் அமையும். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை சற்குணம் இயக்க, G.K.M. தமிழ்க்குமரன் (லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத் தலைவர்) இந்த படத்தை மேற்பார்வை செய்துள்ளார்.

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,
படத்தொகுப்பு: ராஜா முகமது,
கலை இயக்கம்: அந்தோணி,
பாடல் வரிகள்: விவேக்-மணி அமுதவன்-A,
ஆடை வடிவமைப்பு: நட்ராஜ்,
ஒப்பனை: சசி குமார்,
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,
நடன இயக்குநர்: பாபி ஆண்டனி ஷெரிஃப்,
தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,
படங்கள்: மூர்த்தி மெளலி,
நிர்வாகத் தயாரிப்பாளர்: நாராயணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

Trailer – https://youtu.be/BopMbDpJmy0

நான் கர்ப்பமா? எனக்கே தெரியல.. டெலிவரி தேதி சொல்லுங்க.; நிக்கி கல்ராணி கலாய்

நான் கர்ப்பமா? எனக்கே தெரியல.. டெலிவரி தேதி சொல்லுங்க.; நிக்கி கல்ராணி கலாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரகத நாணயம் & யாகவராயினும் நாகாக்க
ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் ஆதி & நிக்கி கல்ராணி.

அப்போது இருவருக்கும் காதல் மலரவே இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது.

எனவே தன் இன்ஸ்டா ஸ்டோரியில் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் நிக்கி கல்ராணி. அதில்…

“நான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி. அப்படியானால் டெலிவரி தேதியை சொல்லுங்கள்.

அப்படி பரவும் செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தியே.

நான் கர்ப்பமானால் அது குறித்த செய்தியை வெளியிடுவேன். அதைவிட எனக்கு சந்தோசமான விஷயம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.

இரத்த தானம் செய்து ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண்விஜய்

இரத்த தானம் செய்து ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2022 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.

மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் பலருக்கு முன்னுதாரணமாக மாற்றியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2022 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்.

அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

I Can’t Express My Feelings.. மோடிக்கு எப்படி தோனுச்சி தெரியல? – இளையராஜா

I Can’t Express My Feelings.. மோடிக்கு எப்படி தோனுச்சி தெரியல? – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே உள்ள கலாச்சாரத்தை மீண்டும் புதுப்பித்து கொண்டாட காசி தமிழ்ச் சங்கம் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து செய்துள்ளன.

இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருடன் இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்றைய நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்து பாடினார்.

ஓம் சிவோஹம்…ஓம் சிவோஹம்… என்ற பாடலை பாடினார். அவரின் இசையை மெய் சிலிர்த்து பார்த்து ரசித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன்பின்னர் இளையராஜா பேசும்போது…

“I Can’t Express My Feelings”.. பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்.

அவர் நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.”

இவ்வாறு இளையராஜா பேசினார்.

அஜித்தின் ‘துணிவு’ படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் & லைக்கா

அஜித்தின் ‘துணிவு’ படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் & லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ’துணிவு’ படம் வரும் 2023 பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது நாம் அறிந்த ஒன்றுதான்.

அஜித்தின் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாஷ் சந்திர போஸை நான் தாக்கல.. துஷ்பிரயோகம் செய்யல.. – பார்வதி நாயர்

சுபாஷ் சந்திர போஸை நான் தாக்கல.. துஷ்பிரயோகம் செய்யல.. – பார்வதி நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…!

கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரைகளும், காணொளிகளும் வெளியாகின.

இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற்கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன்.

எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20. 10. 2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தேன்.

நான் சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளை பெறுவதற்காக சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன்.

சுபாஷ் சந்திர போசை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது.

அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில் எங்களுடைய வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளின் பராமரிப்பாளராகவும் இருந்தார்.

திருட்டு சம்பவத்தில் நான் அவர் மீது சந்தேகம் கொள்வதற்கு சரியான காரணம் இருந்தாலும், காவல்துறையில் புகார் அளிப்பதற்கும் முன், என்னுடைய சந்தேகத்தினை அவரிடம் கேட்டேன். அவர் பதிலைக் கூறாமல் தட்டிக் கழித்தார். இதனால் எனது உடைமைகளை மீட்டுத் தருமாறு காவல்துறையின் புகார் அளித்தேன்.

அவர் என் மீது வெறுக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான அவதூறான செய்திகளையும், தவறான தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அவருடைய நேர்காணல் மற்றும் அவரது அறிக்கை முற்றிலும் தவறானது.

அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன். அவரது நேர்காணல்களும், ஊடக தந்திரங்களும், மேற்கூறிய நடவடிக்கைகளில் சந்தேக நபராக இருந்து குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, கவனத்தை திசை திருப்பவும், என்னை களங்கப்படுத்தவும் நோக்கமாக கொண்டிருந்தது.

மேலும் ஷெல்டன் ஜார்ஜ் அளித்த நேர்காணல் மற்றும் அறிக்கை குறித்தும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அவர் ஒப்பனை கலைஞராக இருந்தார்.

மேலும் அவர் எனக்கு எதிரான கூறும் புகார்கள் அனைத்தும் உண்மைக்கு அப்பாற்பட்டது. என்னை மோசமாக சித்தரிக்கும் வகையில் பத்திரிகைகளில் அவர் அளித்த பேட்டி தேவையற்றது. மேலும் என் மீது அவதூறு பரப்பி அதனூடாக புகழ்பெறும் நோக்கம் கொண்டது.

அவர் கூறியது போல் படப்பிடிப்பு 5. 9. 2022 அன்று நடந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது.., சரியான காரணம் இல்லை.

மேலும் அவரது நேர்காணலில் அவருடைய கையடக்க மொபைல் சாதனத்தில் அங்கீகரிக்கப்படாத காணொளியை வெளியிட்டார். இது என்னுடைய தனி உரிமைக்கு எதிரானது. வீடியோ எடுக்கவோ அல்லது அத்தகைய வீடியோவை வெளியிடவோ அவருக்கு அதிகாரம் இல்லை.

சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் எனது நலன்களை சட்டபூர்வமாக பாதுகாக்க பின்வரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

1) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஷெல்டன் ஜார்ஜ் ஆகியோர் மீது தனித்தனியாக புகார் அளித்துள்ளேன்.

2) தேசிய மகளிர் ஆணையத்திலும் இவர்கள் மீது புகார் அளித்துள்ளேன்.

3) இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுவதை தடுக்க கோரியும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் காணொளிகளையும், பிரசுரிக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளையும் நீக்க கோரியும், இதற்கு தடை கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.

நான் சட்டத்தை முற்றிலுமாக பின்பற்றுகிறேன். அத்துடன் நீதி வழங்குவதற்கான சட்ட அமைப்பின் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

என்னை மோசமாக சித்தரிக்கும் பிரசுரங்களும், செய்திகளும், காணொளிகளும், எனக்கு கடுமையான மன அழுத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளன.

எனது நண்பர்கள் மற்றும் நல விரும்பிகள் மற்றும் அனைவரின் ஆதரவுடன் நான் விரும்பி தேர்ந்தெடுத்த துறையில் எனக்கென ஒரு நற்பெயரை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதாலும், என் மீதான குற்றம் சுமத்தி வெளியான பிரசுரங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதாலும், இந்த பிரச்சனையில் எனது நிலைப்பாட்டை வலுவாக வலியுறுத்துகிறேன்.

நான் கடினமாக உழைத்து சம்பாதித்த சொத்து திருடப்பட்டதால், காவல்துறையில் புகார் அளித்தேன். அதேபோல் எனக்கு எதிராக பரப்பப்படும் இது போன்ற தவறான தகவல்களை அகற்றுவதற்காகவும் நான் புகார் அளித்தேன்.

நான் தொடர்ந்து சரியான போராட்டத்தில் ஈடுபடுவேன். எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சோதனையான காலகட்டத்தில், எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள்…. ஆகியோர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

நடிகை பார்வதி நாயர்.

More Articles
Follows