தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமான முறையில் நடை பெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆா்.ரகுமான், சங்கர், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த இசை வெளியீட்டு விழா துபாயில் நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.
12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் ஏஆர்.ரகுமானும், ஷங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா்.
ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் வரும்போது முத்து படத்தில் இடம் பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலின் தீம் சாங் ஒலிக்கப்பட்டது.
ரஜினி மேடைக்கு ஏறியபோது கரவொலி அடங்க வெகு நேரமானது.
லதா ரஜினி, சௌந்தர்யா ரஜினி மற்றும் தனுஷ் உடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் குடும்பத்துடன் இந்த விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார்.
மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தார்.
இதனைத் தொடா்ந்து 2.0 படத்தில உள்ள இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டது.
பாடல் வெளியான சில மணித்துளிகளிலேயே பாடல்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.
தற்போது வரை அக். 28ல் வரை ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.