தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’.
ஷங்கர் இயக்கிய இப்படத்தை ரூ. 600 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 திரைகளில் வெளியாகி இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் படம் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளது லைகா.
இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
“சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தொடர்ந்து சீனாவில் வெளியிட்டு வரும் HY நிறுவனம், லைகாவுடன் இணைந்து 2.0 படத்தை சீனாவில் வெளியிடுகிறது..
2019-ம் ஆண்டு மே மாதம் இப்படம் 10000 திரையரங்குகளில், 57000 திரைகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும்.
இதில் சுமார் 47000 திரைகள் 3டி திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் படங்களில் சீனாவில் மிக அதிகமாக 3டி திரையில் வெளியாகும் படமாக ‘2.0’ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்கள்.