தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மே 19ஆம் தேதி 5வது நாளாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.
சந்திப்புக்கு முன் ரஜினிகாந்த் மேடையில் பேசினார்.
அப்போது அவர் ஸ்டாலின்-அன்புமணி-திருமாவளவன்-சீமான் ஆகியோர் பற்றி கூறியதாவது…
தளபதி முக. ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சொல்வார், அவர்கிட்ட சுதந்திரமா செயல்பட விட்டா நல்லா செயல்படுவார்னு சொல்வாங்க.
அன்புமணி ராமதாஸ் நன்றாக படித்தவர். மாற்றத்தை கொண்டு வர நினைப்பவர். நல்ல கருத்துகள் வச்சிருக்கவர். மாடர்னா சிந்திக்கிறவர்.
திருமாவளன் தலித்துக்கு ஆதரவா குரல் கொடுத்து உழைச்சிட்டிருக்கார்.
சீமான் கடும் போராளி. அவர் கருத்துகள் கேட்டு நானே பலமுறை பிரமிச்சுப் போயிருக்கேன்.
அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.” என்று பேசினார் ரஜினிகாந்த்.
Rajini talks about Stalin Anbumani Thirumavalavan Seeman