தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்’.
இவருடன் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான் நடிகரால் இப்படத்திற்கு தற்போது மிரட்டல் வந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், இப்படத்தை 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு ராஜ்தாக்கரே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், படத்தை இயக்கிய இயக்குனர் கரண் ஜோகர், தயாரிப்பாளர் முகேஷ் பட் மற்றும் விஜய் சிங் ஆகியோர் மும்பை போலீஸில் இப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.
எனவே போலீஸ் பாதுகாப்புடன் இப்படம் வெளியாக உள்ளது.