தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் விஜய்சேதுபதி.
விரைவில் இவரது நடிப்பில் ‘மெல்லிசை’ மற்றும் ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இமான் இசையமைக்க, இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.
இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்படத்தில் நடிக்க முடியாமல் போன கீர்த்தி, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.