தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது (ஜூலை 28 இரவு 9.30) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது..
உங்கள் அன்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி கலாநிதி மாறன்.. உங்கள் பேச்சின் மூலம் நீங்கள் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.
இயக்குநர் நெல்சன் எதற்காகவும் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அவருக்கு திருப்தி ஆகும் வரை படமாக்கிக் கொண்டே இருந்தார்.
வசனக் காட்சிகளை படமாக்கிய பின்னர் ‘காவலா…’ பாடல் படமாக்கி கொண்டிருந்தபோது என்னுடைய கால்ஷீட் ஆறு நாட்கள் மட்டுமே மீதம் இருந்த
மூன்று நாட்கள் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஆனால் என்னை அழைக்கவே இல்லை.. பின்னர் கண்ணா இங்கே வா.. ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.
உங்களுக்கு ஸ்டெப் இருக்கு சார் ஆனால் ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றார்கள்..
(பின்னர் சிரித்தபடியே ரஜினி பேசியதாவது) தமன்னாவும் டான்ஸ் மாஸ்டர் ஜானியும் இணைந்து அந்த பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்கள். பெரும் சூப்பர்ஹிட் ஆகிவிட்டது.
ஹுக்கும்… தலைவர் அலப்பறை பாடல் வரிகளை பார்த்தேன். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை நீக்க சொன்னேன்.. சூப்பர் ஸ்டார் டைட்டில் என்றைக்குமே தொல்லை தான்.
சில வருடங்களுக்கு முன்பே நான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்க சொன்னேன்.. அப்போது நான் பயந்துவிட்டேன் என்றார்கள்.. நான் இருவருக்கு மட்டும்தான் பயப்படுவேன்.. ஒருவர் கடவுள் மற்றவர் மக்கள்.
நான் காக்கா கழுகு என்று சொன்னா அவரைத்தான் சொல்றாங்க இவரைத்தான் சொல்றாங்கன்னு சோசியல் மீடியாவுல போடுவாங்க.
குறைக்காத நாயும் இல்ல.. குறை சொல்லாத வாயும் இல்ல.. ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல.. நாம நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்.. அர்த்தமாயிந்தா ராஜா..
10 வருடங்களுக்கு முன்பு கன்னடம் படங்களை பற்றி அதிகம் வெளியே தெரியாது.. தற்போது கேஜிஎப், காந்தாரா படங்கள் கன்னட படங்களுக்கு பெரிய அறிமுகம் கொடுத்துள்ளது.
அதுபோல தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா ஆகிய படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
தமிழிலும் அதுபோல பிரம்மாண்ட படங்கள் வரவேண்டும். பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் தியேட்டருக்கு நிறைய லாபம் கிடைக்கும். எல்லோரும் சம்பாதிக்கலாம்.. எல்லாரும் நம்முடைய சகோதரர்கள் தான்.
சிவராஜ்குமார் பற்றி பேசும்போது..
ஒருத்தர பெரிய ஆளோட பிள்ளைன்னு சொல்றது ஈசி ஆனா அந்த பேர காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்..
மோகன்லால் பற்றி பேசும்போது..
அவர் எளிய மனிதர்.. சிறந்த நடிகர் என புகழ்ந்து பேசினார்..
தமன்னாவை பற்றி பேசும்போது அவர் ஆன்மீக பற்று உள்ளவர்.. என்று பாராட்டினார்.
ரஜினிகாந்த் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மேடை ஏறி ய ரம்யா கிருஷ்ணன் மைக்கை பற்றி கொண்டு பேசியதாவது..
“வயசானாலும் உங்க ஸ்டைல் உங்கள விட்டு போகாது.. என படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி வசனத்தை பேசி காட்டினார். அப்போது ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது..
இறுதியாக மதுபானம் பற்றி ஒரு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார். எப்போதாவது குடிக்கலாம்.. ஆனால் எப்பொழுதும் குடித்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கெடுக்காதீர்கள் என்றார் ரஜினிகாந்த்.
Rajini open talk about SuperStar title issue