தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியை நேரில் காண வருமாறு நடிகர் ரஜினிகாந்த்தை மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைத்து இருந்தார்.
என்னுடைய அழைப்பை ஏற்று ரஜினி இங்கு வந்தது மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப்பிறகு ரஜினி வான்கடே மைதானத்திற்கு வந்தது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம்” எனவும் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து அமோல் கலேவுடன் இணைந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், இன்று இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார் ரஜினி.
அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Super Star Rainikanth met indian cricketers