தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிக்கும் அவரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார். அவர் விலகினார் என்பதை விட நீக்கப்பட்டார் என்பதே சரியானதாக இருக்கும்.
இதனையடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ யார்.? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.. அது யாருக்கான பதிவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது..
இதோ அந்த பதிவு..
“என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களை சுவாசிக்கவும், உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.
#neverevergiveup அடுத்த படத்திற்கு தயாராகிறேன். கடவுளுக்கும், என்னுடைய கடினமான இந்த காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கும் நன்றி.
என் மீதான உங்களின் நம்பிக்கை நான் யாரென்று என்னை அடையாளம் காண மட்டும் உதவவில்லை.
எதிர்பாராத தருணங்களில் உறுதியுடன் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களால் நான் மகிழ்ச்சியாக எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறேன்” என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
Vignesh Shivan thanks god for ‘AK 62’ controversy after overcoming the pain