தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.
இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசும்போது…
நான் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தேன். அவரிடம் பணிபுரிந்தால் அடுத்து தப்பான படங்களை நிச்சயம் யாரும் எடுக்க மாட்டார்கள். அது போல தான் நீலம் ப்ரொடக்ஷன் நீலம் ப்ரொடக்ஷனில் ஒரு படம் செய்துவிட்டால் அதன் பிறகு யாரும் தப்பான படம் எடுக்க மாட்டார்கள்.
தற்போது ‘வாழை’ என்றொரு படத்தை முடித்துள்ளேன். அதற்கான வாய்ப்பு வந்த போது ரஞ்சித் இடம் சொன்னேன். போய் முடித்துவிட்டு வா என்றார். அதை முடித்துவிட்டேன். தற்போது மீண்டும் நீலம் ப்ரொடக்ஷனுக்காக ஒரு படம் செய்ய ரெடியாகி வருகிறேன்.
நானும் சரி தப்பான படங்களை என்னைக்குமே எடுக்க மாட்டேன். மாரி செல்வராஜ் வந்தா இப்படித்தான் படம் எடுப்பாருன்னு தெரிஞ்சு என்னை கூப்பிட்டா அதுவே போதுமானது.
இப்படியான படங்கள் தான் எடுப்பேன்.. இப்படியான விஷயங்கள் தான் பேசுவேன் அப்படிங்குற ஆணித்தரமா நிரூபிச்சதுனால எனக்கு அது இன்னும் பெரிய சப்போர்ட் ஆகி எனக்காக வெயிட் பண்ணக்கூடிய ஆட்கள் இருக்காங்க.
எனக்காக வெயிட் பண்ணி எல்லாருமே இந்த மாதிரி கதைக்களுக்காக வெயிட் பண்றாங்க அப்படிங்கபோது எனக்கு பெரிய சந்தோஷம். அதை ஏற்படுத்தி கொடுத்த நீலம் புரொடக்சன்க்கு நன்றி.
சில மானுடம் சம்பந்தமாக கதைகளை உருவாக்கும் போது இது ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா அப்படின்னு யோசிக்கும்போது சில கம்பெனி நியாபகம் வரும்.
ஒரு நிஜத்தை எழுதும்போது அந்த நிஜத்தை எழுதுவதற்கு நாம் யோசிக்கிறோம். இன்னைக்கு வந்து நிறைய தமிழ் சமூகத்தில் தமிழ் இயக்குனர் இயக்குனர்களாகும் போது ஒரு கதை எழுதும்போது நீலம் புரொடக்ஷன் கிட்ட அத சொல்லிப் பார்ப்போம். அப்படின்னு நினைக்கிறாங்க..
முன்னெல்லாம் அதுபோல நிஜத்தை எழுதும்போதே நிராகரிச்சிடுவாங்கன்னு பயப்படுவோம்.. இன்னைக்கு அப்படி இல்ல.
கதை கேட்பதற்கு காது கொடுத்து கேட்டு அதை சரி செய்து அதை நேர்த்தியா மாத்தி அதுக்கு சரியான தீமை உருவாக்கி அந்த இயக்குனரை பலப்படுத்தி அவனுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து உன் முதல் படம் எடுக்கக்கூடிய இயக்குநரை ஒரு சிறந்த அரசியல் அறிவு உள்ளவனாக மாற்றி அவனை இந்த தமிழ் சமூகத்திற்கு படைப்பாளி ஆவதற்கு முக்கியமான பங்கை நீலம் புரொடக்சன்ஸ் செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது யோகி பாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படமும் இணையும் என கண்டிப்பாக நம்புகிறேன்”.
இவ்வாறு மாறி செல்வராஜ் பேசினார்
Mari Selvaraj praies Pa Ranjith at Bommai Nayagi press meet