சர்வதேச விருதுகளை குவித்தும் ‘அந்த நாள்’ படத்திற்கு சென்சார் பிரச்சனை.; விரைவில் பார்த்திபன் – ஆர்யன் ஷ்யாம் கூட்டணி

சர்வதேச விருதுகளை குவித்தும் ‘அந்த நாள்’ படத்திற்கு சென்சார் பிரச்சனை.; விரைவில் பார்த்திபன் – ஆர்யன் ஷ்யாம் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் வெளியாகவிருக்கும் ‘அந்த நாள்’ என்ற படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே உலகமெங்கும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.

இந்த அந்த நாள் படத்தை க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரகுநந்தன் தயாரித்துள்ளார்.

இந்த ‘அந்த நாள்’ படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ்.பாபு முன்னணி ஹீரோயின்களாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த ‘அந்த நாள்’ படத்தை வி.வி.கதிரேசன் இயக்கியுள்ளார். கதை மற்றும் திரைக்கதையை ஆர்யன் ஷ்யாம் எழுதியுள்ளார்.

இந்த ‘அந்த நாள்’ நரபலி மற்றும் Black Magic கருவாக கொண்ட திரைப்படம். அதனால் இந்தப் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டது.

பின்னர் ரிவிசிங் கமிட்டியிடம் அப்பீல் செய்து படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது.

இந்த ‘அந்த நாள்’ படம் உலகமெங்கும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 8 அதிகாரப்பூர்வமான விருதுகளை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளவிதம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தின் இயக்குநரான வி.வி.கதிரேசன் ‘EUROPE FILM FESTIVAL’ விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும், அறிமுக நடிகரான ஆர்யன் ஷியாம் ‘NEWYORK MOVIE AWARDS’, ‘AMERICAN GOLDEN INTERNATIONAL FILM FESTIVAL’, ‘MEDUSA FILM FESTIVAL’, ‘WORLD FILM CARNIVAL SINGAPORE’ உள்ளிட்ட 4 சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘சிறந்த நடிகருக்கான விருதை’யும் பெற்றுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷ்யாம், ‘அந்த நாள்’ படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்.

மேலும் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஆர்யன் ஷ்யாமை வாழ்த்தி விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளார்.

Actor Parthiban and Aryan Shyam joins for a new film

கோடிகளைக் கொட்டினாலும் முடியாது.; ரசிகர்களுக்காக சிம்புவின் சிலிர்க்க வைக்கும் செயல்

கோடிகளைக் கொட்டினாலும் முடியாது.; ரசிகர்களுக்காக சிம்புவின் சிலிர்க்க வைக்கும் செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் சிம்பு.

மேலும் இவரது நடிப்பில் ‘பத்து தல’, ‘கொரானா குமார்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மிக பிரபலமான ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் சிம்பு நடிக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராக இருந்ததாம்.

ஆனால் தான் நடித்தால் தன் ரசிகர்களும் அந்த மதுவை அருந்த கூடும் என்பதால் அதை நிராகரித்து விட்டாராம் சிம்பு.

மேலும் தீய பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை அவர் கைவிட்டதால் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Why Simbu Rejects The Offer To Act In Alcohol Advt

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் ஒரு சிலரே.

சிலரை அதில் மிக முக்கியமானவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போது ரஜினியுடன் ஓரிரு படங்களில் நடித்தார். பின்பு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக முத்து வீரா எஜமான் உள்ளிட்ட படங்களின் நடித்திருந்தார்.

மேலும் கமல் , சத்யராஜ் , விஜயகாந்த் , கார்த்திக் , அஜித் , விஜய் , பிரசாந்த் ஆகியோருடன் நடித்திருந்தார்.

கடந்த 2009-ல் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஜூன் 27-ம்தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சர்வதேச உடல் தான தினத்தையொட்டி மீனா உடல் தானத்தை அறிவித்துள்ளார்.

“உயிர்களைக் காப்பாற்றுவதை விட சிறந்த செயல் எதுவும் இருக்க முடியாது.

நீண்ட கால உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகள் தானமாக கிடைப்பது என்பது ஒரு வரம். தனிப்பட்ட முறையில் இதனை நான் உணர்ந்திருக்கிறேன்.

உடல் தானம் செய்வது என்பது உயிர்களைக் காக்கும் உன்னத வழிகளில் ஒன்று. எனது கணவருக்கு உறுப்புகள் தானமாக கிடைத்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஒருவர் உறுப்பை தானம் செய்யும்போது 8 பேர் காற்றப்படலாம். உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

அந்த வகையில் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்வதாக அறிவிக்கிறேன்.

இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நாம் உயிர் வாழலாம். என உருக்கமாக தெரிவித்துள்ளார் மீனா.

Actress Meena has pledged her organs for donation

தெய்வக் குழந்தை அப்பா நீ.. வர்ணிக்க முடியா உணர்வு நீ.; ரஜினியை வாழ்த்திய சௌந்தர்யா

தெய்வக் குழந்தை அப்பா நீ.. வர்ணிக்க முடியா உணர்வு நீ.; ரஜினியை வாழ்த்திய சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15 1975 ஆண்டு வெளியானது.

தற்போது 47 வருடங்களை கடந்துள்ள நிலையில் ரஜினியிசம் 47 ஆண்டுகள் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு சென்னை ரோகினி தியேட்டரில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் சிறப்பு காட்சியாக ஆகஸ்ட் 14ல் திரையிடப்பட்டது.

இந்த படத்தை வரவேற்று ரஜினி ரசிகர் கோலாகலமாக கொண்டாடி பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.

படம் ரிலீசான நாள் முதல் காட்சி பார்ப்பது போன்ற ஒரு உற்சாகம் ரசிகர்களிடம் காணப்பட்டது.

ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் நாயகனாக ‘பைரவி’ படம் மூலம் மாறினார்.

முதலில் ஸ்டாராக மாறி 5 வருடங்களிலேயே சூப்பர் ஸ்டாராக மாறினார்.

தற்போது அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உலகம் முருவதும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ரீல் லைஃப்பை தாண்டியும் ரியல் லைஃப்பிலும சூப்பர் ஸ்டாராக மாறினார் ரஜினிகாந்த்.

அவர் திரைத்துறையில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரஜினிக்கு ரசிகர்களும் அரசியல் பிரபலங்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் குடும்பத்தினரும் இதை கேக் வெட்டிக் கொண்டாடினர்.

அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினியின் மகள் சௌந்தர்யா அந்த பதிவில்…

“நீங்கள் தெய்வக் குழந்தை அன்பு அப்பா! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு நீ’ என்றும், ‛அப்பாவின் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்’ என பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா.

ரஜினியை எதிர்க்க ஆளே இல்ல.; ஒரு ஹிட்டுக்கே அவரு ஆட்டமா? 47 Years of Rajinism Fans Celebration

#Thalaivar #Rajinikanth

‘கபாலி’ வசூலை அறிவித்தார் தாணு.!

‘விக்ரம்’ வசூலை அறிவிப்பாரா கமல்.?

ரஜினிகாந்த்

Soundarya congratulated her father Rajinikanth on completing 47 years in industry

வித்தியாசமான மனிதரய்யா : விசாகப்பட்டின பேருந்தில் அஜித் பயணம்

வித்தியாசமான மனிதரய்யா : விசாகப்பட்டின பேருந்தில் அஜித் பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி ‘AK61’ படத்திற்காக இணைந்துள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

பின்னர் சிறிய இடைவெளி விடப்பட்டது. அப்போதுதான் சில வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். இத்துடன் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்துக் கொண்டு விருதுகளை வென்றார் நடிகர் அஜித்.

தற்போது மீண்டும் AK61 சூட்டிங் தொடங்கியுள்ளது. எனவே தற்போது விசாகப்பட்டினம் சென்றுள்ளார்.

அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில்… பேருந்தில் கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டே அஜித் பயணம் செய்கிறார்.

அவர் சூட்டிங் தளத்திற்கு செல்லும்போது பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அஜித்தின் பயணத்தை ரசிகர் ஒருவர் படம் எடுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் எளிமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/UnK8zReKZ9c

Ajith traveled by bus to Visakhapatnam

JUST IN ரூ 15 கோடி சம்பளத்தை பதுக்கிய விஜய்.; அபராதம் விதித்தது ஐடி.; கோர்ட் தடை

JUST IN ரூ 15 கோடி சம்பளத்தை பதுக்கிய விஜய்.; அபராதம் விதித்தது ஐடி.; கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்து இருந்தார் நடிகர் விஜய்.

அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடி 40 லட்சம் பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார்.

எனவே அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளது.

அதன்படி, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாயை வருமானத்தை நடிகர் விஜய் கணக்கில் காட்டவில்லை என தெரிய வந்தது.

எனவே வருமானத்தை மறைத்த காரணத்திற்காக ஜூன் மாத இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

இதனையடுத்து தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

மேலும் அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவிட்டு இருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் விஜய்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்தார் நீதிபதி அனிதா சுமந்த்.

அவரது உத்தரவில்.. நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tax evasion case: Interim stay on penalty imposed on Actor Vijay by IT

More Articles
Follows