கலைஞர் பெயரில் விருது & 10 லட்சம் பொன்முடிப்பு.; ஸ்டாலினுக்கு நாசர் – விஷால் நன்றி

கலைஞர் பெயரில் விருது & 10 லட்சம் பொன்முடிப்பு.; ஸ்டாலினுக்கு நாசர் – விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெறுநர் :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..

பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி…………

கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள்.

அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி…………….

கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

உண்மையுடனும், அன்புடனும்,

(ம.நாசர்)

பெறுநர்,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.
கடித எண். 65/தெ.ந.ச./2022 நாள் 30.05.2022

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம். நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், தமிழ் திரையுலகையும் பிரிக்க முடியாது. வரிவிலக்கு முதல் பையனூரில் வீடு கட்ட இடம் வரை திரைத்துறையினர் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார்.

தமிழ் திரையுலகை தாய் வீடாக நினைத்து வழி நடத்திய கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாள் அன்று தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும்”, ரூபாய் பத்து லட்சம் ரொக்கப்பணமும் மற்றும் நினைவுப்பரிசும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என்று அறிவித்தபோதே அகமகிழ்ந்தோம்.

அதற்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் தலைவராக மூத்த இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களையும், உறுப்பினர்களாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்களையும், மற்றொரு உறுப்பினராக நடிகரும், இயக்குனருமான திரு.கரு.பழனியப்பன் அவர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்,

(விஷால்)
பொதுச்செயலாளர்

Award in the name of the Kalaignar & 10 lakh gold .; Nasser – Vishal thanks Stalin

ரஜினி மோகன்லாலுடன் கமல் சந்திப்பு.; நீரே முக்கண் முதல்வர் என சீனுராமசாமி வாழ்த்து

ரஜினி மோகன்லாலுடன் கமல் சந்திப்பு.; நீரே முக்கண் முதல்வர் என சீனுராமசாமி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ல் வெளியாக உள்ளது.

எனவே படத்தின் புரோமோசனுக்காக கமல் உலகம் முழுவதும் சுற்றி திரிந்து அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்றார்.

அண்மையில் கேரளா சென்றபோது… மம்மூட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆசை என பேசி கேரள ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் கேரளத்தின் இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார் கமல்.

மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று அங்கும் பேசினார் கமல். இது மோகன்லால் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.

இந்த நிலையில் நேற்று மே 29ல் ரஜினிகாந்தை கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார்.

அந்த படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த விக்ரம் பட புரோமோசன் குறித்து சீனுராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது…

“போரில் ஜான்சிராணி குழந்தையை தோளில் சுமந்தது போல படத்தை உலகமக்களிடம் ஒற்றை ஆளாக சேர்ப்பதிலும் நீரே முக்கண் முதல்வர்

முதல் 3 நாள் அரங்கம் நிறைதலே இங்கு வெற்றி.

பான் இந்தியா அல்ல
ஆல் இந்தியாவும் அல்ல
எம்.பி.ஏ படிப்பிற்கு வேல்டு இந்தியா நீர்தான்
வாழ்த்துகிறேன் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே https://t.co/ULeLbGxvjC

என பதிவிட்டு கமலை வாழ்த்தியுள்ளார்.

kamal mohan lal

Kamal meets Rajini Mohanlal; Seenuramasamy congratulates you as the Chief Minister

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடம் தான் என்றாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் கூல் சுரேஷ்.

சில படங்களில் ரவுடியாகவும், வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து இருப்பார் கூல் சுரேஷ்.

மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

எந்த படம் ரிலீஸ் இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடுவார் கூல் சுரேஷ்.

அப்போதே எதையாவது பேசி அன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருப்பார்.

இவர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். டி ராஜேந்தரின் விசுவாசியும் ஆவார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள டி ராஜேந்தர் விரைவில் நலம்பெற வேண்டும் என கடவுளை மனமுருகி நடிகர் கூல் சுரேஷ் வழிப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

சினிமாவில் சகலகலா வல்லவரும் இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சிம்பு வெளியிட்ட அறிக்கையில்…

அப்பாவுக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவர் சுயநினைவுடன் இருக்கிறார். உயர் சிகிச்சைக்காக அப்பாவை வெளிநாடு அழைத்து செல்ல இருக்கிறோம்” என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Did you see what Simbu fan cool Suresh did to heal D Rajender?

மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் நட்சத்திர தம்பதி குஷ்பூ சுந்தர்

மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் நட்சத்திர தம்பதி குஷ்பூ சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தமிழகமெங்கும் ஒலித்த குரல் குஷ்பூ. இவருக்கென சினிமாவில் பாடல்களை கவிஞர்கள் எழுதினர்.

உலகத்தில் முதன்முறையாக நடிகை குஷ்பூக்கு கோயில் கட்டிய ரசிகர்களும் தமிழகத்தில் உள்ளனர்.

‘முறைமாமன்’ படத்தில் குஷ்பூவை நாயகியாக சுந்தர் சி இயக்கிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதன்படி காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மூத்த மகள் நடிப்பு பயிற்சியை முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.

இது தொடர்பான குஷ்பு பதிவில்…

“லண்டனில் பிரபல நடிப்புப் பள்ளி ஒன்றில் தனது நடிப்புப் படிப்பை முடித்துவிட்டாள் என் மூத்த மகள்.

அவளே இதை விரும்பி செய்து இருக்கிறார்.

அவளுடைய போராட்டம் இப்போது தொடங்குகிறது.

எனவே நாங்கள் அவளை அறிமுகப்படுத்தவோ அல்லது எங்கும் பரிந்துரைக்கவோ மாட்டோம். அவளுக்கு உங்கள் ஆசிகள் தேவை” என குறிப்பிட்டுள்ளார் குஷ்பூ.

The star couple Khushboo Sundar introduces their daughter in cinema

Top 10 PAN India Stars : முதலிடத்தில் விஜய்.; அஜித் சூர்யா பிரபாஸ் யஷ் – இருக்குற இடம் என்ன தெரியுமா.?

Top 10 PAN India Stars : முதலிடத்தில் விஜய்.; அஜித் சூர்யா பிரபாஸ் யஷ் – இருக்குற இடம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்மக்ஸ் மீடியா என்றொரு பிரபல நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் டாப் 10 இந்திய சினிமா பிரபல நடிகர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியுள்ளது்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மாநிலங்களில் உள்ள நடிகர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதில் தமிழ் நடிகர் விஜய் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜுனியர் என்டிஆர் 2ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பான்-இந்தியா ஸ்டார் என்றழைக்கப்படும் பிரபாஸ் 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

4வது இடத்தில் அல்லு அர்ஜுன், 5வது இடத்தில் அக்ஷய்குமார் உள்ளனர்.

நடிகர் அஜித்திற்கு 6ம் இடம் தான் கிடைத்துள்ளது.

7வது இடத்தில் யஷ், 8வது இடத்தில் ராம் சரண் உள்ளனர்.

நடிகர் சூர்யா 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

10வது இடத்தை மகேஷ் பாபு பிடித்துள்ளார்.

Ormax Media Survey – Top 10 PAN India male star

Vijay
Jr NTR
Prabhas
Allu Arjun
Akshay Kumar
Ajith Kumar
Yash
Ram Charan
Suriya
Mahesh Babu

கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.; ஸ்டாலின் – ரஜினி பங்கேற்பு

கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.; ஸ்டாலின் – ரஜினி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்பு வகித்தவர் கலைஞர்.

அரசியல் மட்டுமின்றி, திரைப்பட வசனகர்த்தா, கதை, கவிதை நாடகம் என கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர்.

70 ஆண்டுகளாக “உடன்பிறப்பே” எனும் தன் காந்தக் குரலால், தமிழக மக்களை கட்டிப்போட்டவர்.

எனவே மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை போன்றே தத்ரூபமாக சிலையை வடித்துள்ளார் மீஞ்சூர் சிற்பி தீனதயாளன்.

முழுவதும் வெண்கலத்தால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,250 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் போன்ற வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சினிமா உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றார். இருவரும் மேடை கீழே முதல் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர். இவர்களுடன் அரசியல் கட்சி தலைவர் ப. சிதம்பரம், வைகோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம். பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ரஜினி பங்கேற்ற படத்தை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

கருணாநிதி சிலை

The statue of Karunanidhi was unveiled by the Vice President of India

More Articles
Follows