தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
பொள்ளாச்சி பாலியல் சம்பவ குற்றவாளிகளை பொளந்து கட்டியிருக்கிறார் சூர்யா.
கதைக்களம்..
படத்தின் முதல் காட்சியிலேயே 7 கொலைகள் செய்கிறார் வக்கீல் கண்ணபிரான் (சூர்யா). ஒரு வக்கீலே இப்படி கொலைகள் செய்ய என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.
தென்னாடு மற்றும் வடநாடு ஊர்காரர்களிடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எவரும் பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை என்கிறார்கள். இதில் சூர்யா பிரியங்கா காதலிக்கின்றனர்.
சூர்யா வசிக்கும் தென்னாட்டில் உள்ள சில இளம் பெண்களும் அவர்களின் குடும்பத்தாரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். பாலியல் தொல்லை தான் காரணம் என தெரிகிறது. அதன்பின்னணியில் உள்ளவன் யார்? அவனை சூர்யா எப்படி கண்டுபிடித்தார்? என்ன செய்தார்? என்பதே கதை.
கேரக்டர்கள்..
காமெடி,, ரொமான்ஸ்.. ஆக்சன்… விவேகம் என வெரைட்டி காட்டி நடித்துள்ளார் சூர்யா. படம் ஆரம்பிக்கும் முன் சூர்யா பற்றி ரஜினி பேசியது.. சூர்யாவின் பட காட்சிகள் வருவது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ட்ரீட்..
ஜெய்பீம் படத்திற்கு பிறகு இதிலும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். ஒரு வக்கீலாக இருந்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லையே என ஏங்கும்போது நம் நாட்டின் சட்டத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.
டாக்டர் பட நாயகி பிரியங்கா தான் இப்பட நாயகி. முதல் படத்தை விட இதில் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். இவரே சாட்சியாக மாறும்போது படத்தின் வேகம் இன்னும் எகிறுகிறது. ஆதினி கேரக்டரில் பிரியங்கா அசத்தல். சென்டிமெண்ட்டில் கண்கலங்க வைத்துள்ளார்.
சூர்யாவின் அப்பா அம்மாவாக சத்யராஜ் மற்றும் சரண்யா. படத்தின் கலகலப்புக்கு சரண்யா கேரண்ட்டி. சத்யராஜ் கேரக்டர் கச்சிதம். இன்னும் வலு சேர்த்திருக்கலாம். வேலா ராமமூர்த்தி கேரக்டரும் அப்படித்தான்.
வினய்க்கு வழக்கமான வில்லன் வேடம். மிரட்டலை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம். மனைவியை கொல்லும்போதே இவரின் மீதான எதிர்பார்ப்பு அதிரிக்கிறது. பியானோ வாசிப்பதால் சாந்தமாக காணப்படுகிறார். ஆனால் தமிழ் சினிமாவுக்கு நல்ல உயரமான வில்லன் கிடைத்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர்களான சூரி, புகழ், விஜய் டிவி ராமர், இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளனர். தங்கதுரை, சரண் சக்தி, சூப்பர் குட் சுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களின் கேரக்டரில் சிறப்பு.
ப்ரியங்காவின் தோழியாக திவ்யா துரைசாமி. இவர்தான் இடைவேளை ட்விஸ்ட் நாயகி. சில ஆண்டுகளுக்கு முன்பு CHUBBYஆக இருந்த திவ்யா இதில் கன்னங்கள் ஒட்டி போய் உள்ளார். கண்கள் அழகு என்றாலும் கன்னங்களை இன்னும் கவனிக்க வேண்டும் திவு..
டெக்னீஷ்யன்கள்..
இமான் இசையில் பின்னனி இசை மிரட்டல். பாடல்கள் ஓகே ரகம்தான். இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். பாடல்களை நடிகர் சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ராம் லட்சுமண் & அன்பறிவு ஆகியோரின் சண்டை காட்சிகள் தெறி லெவல்.
படத்தில் பெரிய கூட்டமே நட்சத்திரங்களாக இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரையும் பாராட்ட வைத்துவிடுவார் பாண்டிராஜ். கடைக்குட்டி சிங்கம்.. நம்ம வீட்டு பிள்ளை ஆகிய இரண்டையும் சேர்த்து ஹாட்ரிக் வெற்றி அடித்துள்ளார்.
நாயகி பிரியங்காவை தூக்குறேன்… திருமணம் செய்றேன் என சூர்யா சவால் விட்ட பின்னர் அந்த 10 நிமிடம் நடக்கும் காட்சிகள் சிறப்பு.
இடைவேளை வரை முதல்பாதி கலகலப்பாக செல்கிறது.. இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் நடுவில் சென்டிமெண்ட் நுழைவது வேகத்தை குறைக்கிறது. திடீர் சென்டிமெண்ட் திடீர் ஆக்சன் என மாறிமாறி வருவது நிச்சயம் பெண்களை கவரும்.
வசனங்கள் படத்திற்கு பலம். நாயகி, நாயகனே பாதிக்கப்படுவதால் படத்தின் வேகம் சூடுபிடிக்கிறது.
தப்பு செஞ்சவனே ஜாலியாக சுத்தும்போது தப்பே செய்யாதவள் எதற்கு பயப்படனும்.. நமக்கு சட்டம் தெரியும்.. ஆனால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் ஓட்டை தெரியும்… “எல்லா பெண்களுக்குமே ஒரே மாதிரி தான் இருக்கிறது.”. உள்ளிட்ட வசனங்கள் பெண்களை ஈர்க்கும்.
ஆக.. சூர்யா ரசிகர்களுக்கு ET.. EXTRA TREAT தான்..
Etharkkum Thunindhavan movie review and rating in Tamil