தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் கூட நீடிக்காத நிலையில் தன் கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார் நடிகை சமந்தா.
இது இவர்களின் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விவாகரத்து பற்றி நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா ட்வீட் செய்தார்.
அதில்…
சாம் மற்றும் சைய் இடையே நடந்தது துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடந்தது பர்சனலானது.
சாமுடன் செலவிட்ட நேரத்தை என் குடும்பம் என்றும் மறக்காது. அவர் எப்பொழுதுமே எங்களுக்கு நெருக்கமானவர் தான். கடவுள் அவர்களுக்கு தெம்பை அளிக்கட்டும் என ட்வீட் செய்திருந்தார்.
மருமகள் சமந்தா பிரிந்து சென்ற போதிலும் அவரை உயர்வாக பேசும் (மாமனார்) உங்கள் மனசு தான் அண்ணய்யா கடவுள் என நாகர்ஜுனாவை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
South indian fans reaction on Chay – Sam divorce