தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் பட பூஜை, பிரஸ் மீட், இசை வெளியீடு, மூவி புரொமோசன் என எந்த நிகழ்விலும் பங்கேற்காதவர் நடிகர் அஜித்.
இவையில்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை நிறுத்தியவர் அஜித்.
இவரின் ரூட்டில் பயணிப்பவர் நயன்தாரா.
இந்த நிலையில் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து Rowdy Pictures என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்துள்ளார்.
‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இந்த்படத்தை இயக்கியுள்ளார்.
நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
அண்மையில் வெளியான இதன் ட்ரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விரைவில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் அவரே (அட்மின்) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் & நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்து வருகின்றனர்.
தான் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் மட்டும் கலந்து கொள்ளும் நீங்கள் அடுத்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் ஏன் கலந்துகொள்வது இல்லை.?
உங்கள் சொந்த பணம் படம் என்றால் ஒரு நியாயம் அடுத்தவர் தயாரித்தால் ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
*இதை பார்த்து நயன்தாரா நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே…*
ஒரு படத்திற்கு அக்ரீமென்ட் போடும் போதே தன்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பிற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என குறிப்பிட்டுதான் ஓகே சொல்வாராம் நயன்தாரா.
அதையும் ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. என்னத்த சொல்ல..?
Netizens slams Nayanthara for participating in movie promotions