நிச்சயதார்த்தத்தை ரகசியமாக முடித்த நயன்தாரா..; சொல்லவே இல்ல..!!??

நிச்சயதார்த்தத்தை ரகசியமாக முடித்த நயன்தாரா..; சொல்லவே இல்ல..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.

இவரே தயாரித்து நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே 2 முறை (சிம்பு மற்றும் பிரபுதேவா) லவ் ப்ரேக் அப் ஆனவர் நயன்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 6 வருடங்களாக காதலில் உள்ளார்.

விரைவில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாராவிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர்.

அப்போது நயன் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார் நயன்தாரா.

Nayanthara talks about her engagement ring

சினிமாவில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா.; அருண்விஜய் சூட்டிங்கில் பார்ட்டி..; சரத்குமார் வாழ்த்து

சினிமாவில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா.; அருண்விஜய் சூட்டிங்கில் பார்ட்டி..; சரத்குமார் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ராதிகா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி ரஜினி கமல் சரத்குமார் முதல் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி வரை அனைவருடனும் நடித்துள்ளார்.

தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிசியாகவே இருக்கிறார் ராதிகா.

இன்றோடு இவர் திரைக்கு வந்து
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது.

அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில் இன்று ராதிகா நடித்து வந்தார்.

43 வருடம் நிறைவை ஒட்டி படகுழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் படபிடிப்பு இடைவேளையில் சர்பிரைசாக கேக் கொண்டுவரப்பட்டு பாட்டு பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

ராதிகா அவர்களுக்கு டைரக்டர் ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

ராதிகாவிற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்… “அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில் முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள்.

இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ராதிகா,” என பாராட்டி வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.

#43YearsOfRadhika

Sarath Kumar wishes his wife Radika on completing 43 years in cine industry

ரோல்ஸ் ராய்ஸ் நுழைவு வரியை கட்டிய விஜய் & தனுஷ்..; இத்தனை லட்சங்களா.?

ரோல்ஸ் ராய்ஸ் நுழைவு வரியை கட்டிய விஜய் & தனுஷ்..; இத்தனை லட்சங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் விவகாரத்தில் கோர்ட்டில் வரி விலக்கு கேட்டு இருந்தனர் விஜய் மற்றும் தனுஷ்.

இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இருவரையும் நீதிபதி சுப்ரமண்யம் காட்டமாக விமர்சித்து இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியது.

விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு செய்திருந்தார்.

48 மணிநேரத்தில் தனுஷ் ரூ 30 லட்சம் கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விஜய், தனுஷ் இருவருமே நுழைவு வரி கட்டுகிறோம் என தங்கள் தரப்பில் தெரிவித்தனர்.

விஜய், தனுஷ் இருவருமே ஏற்கெனவே பாதி நுழைவு வரியை கட்டியிருந்தனர்.

தற்போது விஜய் மீதமுள்ள ரூ 40 லட்சத்தையும் தனுஷ் மீதமுள்ள ரூ 30 லட்சத்தையும் நுழைவு வரியாக கட்டிவிட்டதாக சொல்லப்படுகின்றது.

Vijay and Dhanush pays the entire entry tax for his Rolls Royce car

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனை அடுத்து தனுஷ் இணைகிறாரா.?

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனை அடுத்து தனுஷ் இணைகிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தம் ஆனார்

இந்த நிலையில்தான் ‘பீஸ்ட்’டில் இப்போது தனுஷும் இணைய போகிறார் என ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறது.

ஒருவேளை பாடல் பாடவோ அல்லது பாடல் எழுதவோ தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

சில தினங்களுக்கு முன்பு நெல்சன் & அனிருத்தின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயனும் பாடல் எழுதி பாடலாம் என்ற தகவல்கள் கசிந்தன.

Dhanush joins Thalapathy Vijay’s Beast ?

ஹைதராபாத் வீதிகளில் ஹாயாக சுற்றிய அஜித்.; செமயாய் இருக்காருல்ல தல..!

ஹைதராபாத் வீதிகளில் ஹாயாக சுற்றிய அஜித்.; செமயாய் இருக்காருல்ல தல..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

அஜித்துடன் ஹூமா குரேஷி கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் படப்பிடிப்பை ஓய்வு நேரங்களில் ஹைதராபாத் வீதிகளில் அஜித் சென்ற போது சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாம்.

அதில் முழுக்க கருப்பு உடைகளில் செம ஸ்டைலிஜ் லுக்கில் பக்கா க்ளீன் ஷேவ் செய்து வேற லெவல் லுக்கில் இருக்கிறார் தல.

ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்து விட்டு சில ஆக்ஷன் காட்சிகளை வெளியார் அல்லது வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்களாம்.

இவை கொரோனா ஊரடங்கு சூழ்நிலையை பொறுத்து அமையும் எனவும் கூறப்படுகிறது.

Thala Ajith looks stylish in all-black outfit

ஆனைமலையில் அம்மனை தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

ஆனைமலையில் அம்மனை தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டான்’.

லைகா புரொடக்ஷன் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ஊர் மக்கள் நூற்றுக்கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனவும் நிறைய பேர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும் சொல்லப்படுகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர்.

தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இத்துடன் ‘டான்’ படக்குழுவினருக்கு ரூ 10,000/- அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஆனைமலையில் உள்ள மாசானி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தரிசனம் செய்த கோயிலில் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan spotted at MasaniAmman Temple in Anaimalai

More Articles
Follows