தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருளாளிணி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எம்ஜிஆர் மகன்’.
இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
ஆனால், தமிழக அரசின் நேற்றைய கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு இப்படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு எனவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இப்பட ரிலீசை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
“எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.
’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மற்றும் வினியோகஸ்தர் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் விநியோகிஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.
அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.
மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sasi Kumar’s MGR Magan release has been postponed