தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் தீவிரமாக பணியாற்சி வருகின்றனர்.
அரசின் உள்ளாட்சித் துறை மூலமாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினியும் வீதி வீதியாக தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியானது பெரிய பணி என்பதால் சுகாதாரத் துறை பணியாளர்களைக் கொண்டு முழுமையாக செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
ட்ரோன்களிலும் வைத்து பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?
இந்த நிலையில் உள்ளாட்சி துறைக்கு உதவிடும் வகையில் நடிகர் அஜித் ஆலோசனை வழங்கிய தக்ஷா என்ற அமைப்பைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலரும் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Ajiths Daksha team is helping the TN Govt to battle Corona Virus