தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் அரசியல் பிரவேசம் உறுதி என அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.
விரைவில் தன் கட்சி மற்றும் கொடிகளை அறிமுகப்படுத்த உள்ளார். அதற்கு முன்னதாக தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்த பணிகளை சுதாகர் மற்றும் ராஜீ மகாலிங்கம் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
அங்கு ரஜினி பேசிய வீடியோ காட்சி ஒன்று ஒளிப்பரப்பானது.
அதில் ரஜினி பேசும்போது.. பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமை படக்கூடாது. காவலர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நாம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். முழுவதையும் நாம் மாற்ற வேண்டும்” என பேசினார் ரஜினிகாந்த்.
Rajini video speech at Rajini Makkal Mandram meeting