தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலும் இந்திய சினிமாவில் நடிகர்களின் படங்களுக்கே அதிக மார்கெட் உள்ளது.
அவ்வாறாக இருந்தபோதிலும் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள்
தங்களின் நடிப்பு திறமையால், அவர்களுக்கான மார்கெட்டை பிடித்து வருகின்றனர்.
இவர்களின் வரிசையில் ஆண்ட்ரியாவும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான ‘தரமணி’ படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. பாராட்டுக்களும் குவிந்தன.
இந்நிலையில், ஒரு மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா பேசும் போது..
“சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்து இருக்கிறது.
ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ரஜினி போன்ற நடிகருடன் நடித்தால்தான் அவர் பெரிய நடிகையா?
தரமணி’ படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் படவாய்ப்பு கிடைக்கவில்லை.
கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் நான் மகிழ்ச்சி அடைய வில்லை.
திரைப்படத்தில் நிர்வாணமாகக் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்”. என்று பேசினார்.