தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவியில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை தன் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.
அதன்பின்னர் சிவகார்த்திகேயன் தன் கேரியரில் படு வேகமாக முன்னேறி இன்று முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்காக மீண்டும் இணையவுள்ளார்.
இவருடன் சிவாவின் நெருங்கிய நண்பர்களான சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் இணையவுள்ளனர்.
ஒரு புதிய படத்தின் அறிவிப்பை இந்த மூவரும் வெளியிடவுள்ளனர்.
இன்று மாலை 5,30 மணிக்கு இந்த தகவல் வெளியாகவுள்ளது.
Sivakarthikeyan Soori Sathish joins hands with Director Pandiraj