தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
ஒரு நேர்மையான போலீஸ் தன் உயர் அதிகாரியால் அவமானப்படுத்தப்படும் போதும்… தன் குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் போதும்… சினம் கொண்டால் என்ன ஆகும் என்பதே ஒன்லைன்.
கதைக்களம்…
நேர்மையான போலீஸ் அருண் விஜய். தன் மனைவி ஒரு மகள் என அழகாக வாழ்ந்து வருகிறார். இவரின் நேர்மை சில உயரதிகாரிக்கு பிடிக்காமல் போனாலும் தன் கடமையில் தவறாது நிற்கிறார்.
ஒரு கட்டத்தில் இவரது மனைவி காணாமல் போகிறார். சில மணி நேரங்களில் சடலமாக மீட்கப்படுகிறார். அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை எப்படி எதிர்கொண்டார் அருண் விஜய்? அவரின் மனைவியை கொன்றவர் யார்? என்பதே மீதி கதை.
கேரக்டர்கள்…
வழக்கமாக போலீஸ் என்றால் ஒரு டெரர் மீசை ஹீரோக்கள் வைத்திருப்பார்கள். ஆனால் இதில் பக்கா கிளீன் ஷேவ் என படு ஸ்மார்டாக வருகிறார் அருண் விஜய்.
எதையும் நிதானமாக சிந்தித்து விசாரணையில் இறங்கும் சுபாவம். கிளைமாக்ஸ்சில் இவரது சினம் வேற லெவல். ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது.
நாயகியாக பால் லால்வானி. அளவான நடிப்பு.
காளி வெங்கட்டின் கேரக்டர் கனகச்சிதம். முக்கியமாக அருண் விஜய் மனைவி இறந்தபின் அவர் அழைத்துச் செல்லும் காட்சியில் யதார்த்த நடிப்பில் கவர்கிறார்.
இவர்களுடன் RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி, நாயகியின் குடும்பம் மற்றும் வில்லன் கும்பல் என அனைவரும் தங்கள் பங்களிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.
டெக்னீஷியன்கள்…
சண்டை பயிற்சி – ’ஸ்டண்ட்’ சில்வா. பார் ஃபைட் சீன் மற்றும் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் என இரண்டிலும் சினம் பறக்கிறது.
கிளைமாக்சில் காட்டப்படும் அந்த பள்ளிக்கூடம் செம லொகேஷன். அந்த இடத்தையே மிரட்டலாக படம் எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் – கோபிநாத்.
இசை – ஷபீர் தபேரே ஆலம். பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். சில இடங்களில் மட்டும் தேவை இல்லாத இ(சை)ரைச்சல் பில்டப்.
மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், ஆர். விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு இயக்கிய ஓரிரு படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதில் தன் திறமையை காட்டி இருக்கிறார்.
க்ளைமாக்ஸ் வசனங்கள் சூப்பர். நாம் குற்றங்களை கண்டுகொள்ளாமல் செல்வதை காட்டிலும் சினம் கொண்டு எதிர்க்க வேண்டும். அப்போதுதான் ஓர் அழகான சமுதாயத்தை உருவாக்க முடியும் என அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஆக.. இந்த சினம்… சமூக சிந்தனை