சங்குசக்கரம் விமர்சனம்

சங்குசக்கரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : திலீப் சுப்பராயன், கீதா, பேபி மோனிகா மற்றும் 9 குழந்தைகள் மற்றும் பலர்
இயக்கம் : மாரிசன்
இசை : ஷபீர்
ஒளிப்பதிவு: ரவி கண்ணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: சினிமாவாலா பிக்ச்ர்ஸ் சதீஷ் அண்ட் லியோ விஷன்ஸ்

sangu villain

கதைக்களம்…

பொதுவாக பேய் படம் என்றால் பொறுமையாக காட்சிகளை நகர்த்தி பின்னர் பயமுறுத்த முயற்சி செய்வார்கள். அதிலும் ப்ளாஷ்பேக் இல்லாமல் பேய் படமே இருக்காது.

இந்த இரண்டையும் உடைத்தெறிந்துவிட்டார்கள் சங்குசக்கரம் படக்குழுவினர்.

ஆரம்ப காட்சியிலே பேய் படம் என்பதையும் சொல்லிவிட்டு ப்ளாஷ்பேக் இல்லாமல் கதையை முடித்திருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு பாழடைந்த பழைய பங்களா உள்ளது. கோடிக்கணக்கில் மதிப்பு பெறும் அந்த இடத்தை விற்று ப்ளாட் கட்ட நினைக்கிறார் ஒருவர்.

எனவே பேயை விரட்ட மந்திரவாதியை ஏற்பாடு செய்கிறார்.

பெரும் கோடீஸ்வரன் சிறுவன் ஒருவனை அவனது மாமா கொன்றுவிட்டு அந்த 500 கோடியை அள்ள நினைக்கிறார். எனவே பேய் பங்களாவில் வைத்து அவனை கொன்றுவிட்டால் பேய் மீது பழி போட நினைத்து அந்த சிறுவனை அங்கு அனுப்பி வைக்கிறார்.

இந்த நிலையில் ஏழு குழந்தைகளை திலீப் கடத்தி வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

இவர்கள் எல்லாரும் அந்த பங்களாவைதான் குறி வைக்கிறார்கள். அங்கு ஏற்கெனவே ஒரு அம்மா பேயும் சிறுமி பேயும் உள்ளது.

இவர்கள் எல்லாரும் அங்கு ஒன்று கூட என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

sangu chakram kids

கேரக்டர்கள்…

ஒரு பேய் குழந்தை உட்பட படத்தில் மொத்தம் 10 குழந்தைகள். ஒவ்வொன்றும் ஒரு விதம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். பேய் மிரட்டும் என்றாலும் குழந்தைகளுடன் பார்க்கும்போது உற்சாகம் வருகிறது.

டாரு டமாரு என அடிக்கடி பேசி ரசிக்க வைக்கிறார் திலீப்சுப்பராயன்

பேயாக வரும் கீதா மற்றும் மோனிகா மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர். ஹேட்ஸ் ஆஃப்

அதிலும் தமிழ் கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு இந்த உலகத்தில் எந்த பதிலுமே கிடையாது. கேள்வி கேட்டே பேயை விரட்டு விடுகிறான்.

அந்த கேள்விகளில் சில….

ஸ்கூல் யூனிபார்மில் எல்லாருக்கும் சமம்ன்னா அப்புறம் ஏன் ஒவ்வொரு ஸ்கூலுக்கும் வேற வேற யூனிபார்ம்..?

நிறைவேறாத ஆசையிருந்தால் பேய்யாக வருவார்கள் என்றால் மகாத்மா காந்தி ஏன் பேயாக வரவில்லை என கேட்கிறார்.

பேய்க்கு பவர் இருக்குன்னா? அந்த பவர வச்சி கரண்ட் வர வைக்கமுடியுமா? இப்படி பல கேள்விகள்.

கடவுள் எங்கும் இருப்பார் என்றால் பேய் வீட்டில் அவர் ஏன் இல்லை? என பல கேள்விகள் கேட்டு பேய்க்கு பயம் காட்டியிருக்கிறார்கள்.

‘பணம் என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்று சொன்னவன் எவனும் இப்போ உயிரோடு இல்லை.. ஆனா, பணம் இன்னும் நிரந்தமாக இருக்கு.

‘கெட்டவங்களை ஆண்டவன்தான் தண்டிக்கிறது இல்லை…. அந்த பேயாவது தண்டிக்கட்டுமே’ என பேய் அடிச்ச மாதிரி பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள்.

sangu team

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஷபீரின் பின்னனி இசை படத்திற்கு பலம். பேய் படத்தில் பாடல்கள் இல்லாதது டைரக்டர் டச். தயாரிப்பாளருக்கும் சபாஷ் போடலாம்.

ஒரு பங்களா என்றாலும் அதில் ரவி கண்ணனின் கேமரா அழகாக சுற்றி வந்து ரசிக்க வைக்கிறது.

படத்தின் இறுதியில் வெளிநாட்டு மந்திரவாதிக்கும் உள்நாட்டு மந்திரவாதிக்கும் நடக்கும் மேளம் ஆட்டம்…. செம அப்ளாஸ்.

அப்போதும் நம்ம மந்திரவாதி பேசும் வசனங்கள் சூப்பர்…

ஏன்டா காய், மீன், அரிசி தனியா வித்துட்டு இருந்தோம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வச்சி எங்க பிழைப்ப கெடுத்தீங்க.. இப்போ பேய் ஓட்ட வந்து இந்த பிழைப்பையும் கை வக்கிறீங்களா? என கேட்டு மிரட்டுகிறார்.

க்ளைமாக்ஸில்.. ரஜினி அரசியலுக்கு வருவாரா? என கேட்டு எல்லாரையும் குழப்பிவிடுகிறான் அந்த சிறுவன்.
குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் குடும்ப படம் தந்துள்ளார் மாரிசன்

சங்குசக்கரம்.. பேயை தெறிக்கவிடும் குழந்தைகள்

சக்க போடு போடு ராஜா விமர்சனம்

சக்க போடு போடு ராஜா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்தானம், வைபவி, விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி, டாக்டர் சேது, விடிவி கணேஷ், பாப்ரி கோஷ், சரத்லோகித்ஸ்வா, பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர்
இயக்கம் : சேதுராமன்
இசை : சிம்பு
ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டிங்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு: விடிவி கணேஷ்

கதைக்களம்…

மிடில் கிளாஸ் பேமிலியை சார்ந்தவர் சந்தானம். இவரது அப்பா விடிவி கணேஷ். ஒரு சூழ்நிலையில் தன்னுடைய ப்ரெண்ட் சேதுவின் காதல் திருமணத்திற்கு உதவி செய்கிறார் சந்தானம்.

சேதுவின் காதலி மனைவி சஞ்சனா சிங் ஒரு பெரிய தாதாவின் மகள். அப்புறம் என்ன உங்களுக்கு புரிந்திருக்கும் தானே. அந்த தாதா கும்பல் காதல் திருமணம் செய்து வைத்த சந்தானத்தை தேடுகிறது.

இதுஒரு பக்கம் இருக்க, மற்றொரு தாதாவின் தங்கச்சி வைபவியை சந்திக்கிறார் காதலிக்கிறார் சந்தானம்.

அவரும் தாதா தங்கை என்பதால் பலரையும் வம்புக்கு இழுக்கிறார்.

இந்நிலையில் வைபவியை ஒரு கும்பல் தேட, அவரோ சேதுவின் மாமானாரிடம் தஞ்சம் அடைகிறார்.

அப்படியென்றால் இந்த இரண்டு டான்களும் யார்? அவரிடம் நாயகி செல்வது ஏன்? தன் காதலி வைபவியை கரம் பிடித்தாரா சந்தானம்? என பல கேள்விகளுக்கு விடைதான் க்ளைமாக்ஸ்.

DRFqDrrV4AIUofr

கேரக்டர்கள்…

காமெடி ரூட்டில் பயணித்து வந்தாலும், காமெடியை விட ஆக்சனில் அசத்தியிருக்கிறார் சந்தானம்.

அவரது தாடி, ஹேர்ஸ்டைல் பக்கா லுக். சந்தானம் ஹீரோவாக மணக்கிறார்.

சேது ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அவரால்தான் கதையோட்டம் நகர்கிறது.

நாயகி கேரக்டருக்கு வைபவி சரியான தேர்வு.

விடிவி கணேஷ், ரோபா சங்கர், சுவாமிநாதன் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

விவேக் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தல தளபதி டயலாக்குகளை சொல்லி கைத்தட்டல் பெறுகிறார் பவர் ஸ்டார்.

DRZpJ68VwAAyq3x

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகராக ஜெயித்த சிம்பு இதில் இசையமைப்பாளராக பின்னியெடுத்திருக்கிறார். அனிருத் பாடிய கலக்கு மச்சான் பாடல் ரசிகர்களை ஆடவைக்கும். வா முனிம்மா, உனக்காக ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம்.

காதல் தேவதை பாடல் படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். வைரமுத்து வரிகளுக்கு யுவன் குரல் இதம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

இயக்கம் பற்றிய அலசல்…

காதல் திருமணத்தில் ஆரம்பிக்கும் காட்சிகள் எங்கேயோ செல்கிறது. நல்லவேளை சஸ்பென்ஸை அதிகம் நீட்டிக்காமல் இடையில் உடைத்துவிட்டு பின்பு ட்விஸ்ட் வைத்திருப்பது ஓகே.

சந்தானம் ரியல் போலீஸ்? அல்லது போலியா என்பது தெரியவில்லை.

ஹீரோவுக்கு செம ஓப்பனிங் கொடுத்துவிட்டு பின்பு டேமேஜ் செய்வது புதுசு.

படத்தின் நீளத்தை குறைத்து சக்க போடு போட சொல்லியிருக்கலாம்.

அனைத்தையும் கலந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

சக்க போடு போடு ராஜா… டைட்டிலை காப்பாற்றிவிட்டார் சிம்பு

வேலைக்காரன் விமர்சனம்

வேலைக்காரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், பஹத்பாசில், நயன்தாரா, ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோகினி, விஜய்வசந்த், சார்லி மற்றும் பலர்
இயக்கம் : மோகன்ராஜா
இசை : அனிருத்
ஒளிப்பதிவு: ராம்ஜி
எடிட்டிங்: ரூபன் (விவேக் ஹர்சன்)
கலை: முத்துராஜ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஆர் டி ராஜா (24ஏஎம் ஸ்டூடீயோஸ்)

கதைக்களம்…

உணவு துறையில் நடக்கும் ஊழல்தான் படத்தின் ஒன்லைன். நாம் தினம் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்களை எப்படி மார்கெட் செய்கிறார்கள்? அதை நாம் எப்படி நம்பி ஏமாறுகிறோம் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள்.

பல படங்களில் வேலை வெட்டி இல்லாமல் திரிந்த சிவகார்த்திகேயன் இதில் பொறுப்பான இளைஞராக வருகிறார்.
சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவர் சிவகார்த்திகேயன். அந்த பகுதியே பிரகாஷ்ராஜ் கன்ட்ரோலில் இருக்கிறது. அவர்களை தனக்கு சாதமாக பல விதங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதனால் கடுப்பாகும் சிவகார்த்திகேயன் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.

அங்கு அவருக்கு பஹத்பாசில் உதவுகிறார். நம் முன்னேற்றத்திற்கு HardWork தேவையில்லை, ஸ்மார்ட் Work தான் முக்கியம் என சிவாவுக்கு புரிய வைக்கிறார்.

அந்த வேலை சூழ்நிலையில் நம்மால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை உணர்கிறார்.

அதன்பின் சிவா எடுக்கும் முடிவு நம்மை சார்ந்த சமூகத்திற்கான பாடமாக அமைகிறது.

அவர் எப்படி சிறந்த வேலைக்காரன் ஆனார்? என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கேரக்டர்கள்…

10 படங்கள் வரை ஜாலியாக சுற்றுத்திரிந்த சிவகார்த்திகேயன் ரெமோ தொடங்கி சுமோ வேகத்தில் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

வேலைக்காரன் படத்திலும் அந்த வேகத்தில் பயணிக்கிறார். காமெடி இவருக்கு கைகொடுத்தாலும் சீரியஸ் காட்சிகளில் நம்மை அசரடிக்கிறார். வேலைக்காரனுக்கு சரியான தீனி இந்த சிவா.

ஒரு காட்சியில் தன் வீட்டிற்கு பொருளை விற்க வரும் மார்கெட்டிங் ஆளிடம் சிவா பேசும் வசனங்கள் நச். ரொமான்ஸ் பாடலிலும் ஸ்கோர் செய்கிறார்.

இதன் ஆடியோ விழாவில் சிவா சொன்னது போல பஹத்பாசில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அருமையான நடிகர். அலட்டிக்கொள்ளாமல் அசத்தியிருக்கிறார்.

ஒரு காட்சியில் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளை எங்கே வைக்க வேண்டும் என சொல்லும் விளக்கம் அருமை.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சார்லி, ஸ்நேகா, ரோகினி, விஜய் வசந்த் ஆகியோரும் நம்மை அதிகம் கவர்கின்றனர்.

நயன்தாரா, சதீஷ், ரோபா சங்கர், ஆர்.ஜே.பாலாஜி என நட்சத்திர பட்டாளங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாமே என தோன்றுகிறது.

சிவகார்த்திகேயன் நயன்தாரா கெமிஸ்ட்ரியை விட சிவா பகத் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. காரணம் நயன்தாராவுக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை.

ஒரு நடிகர் சங்கமே இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பெரிய வேலையில்லை. அனைத்தையும் முக்கிய வேலைக்காரன் சிவகார்த்திகேயன் பார்த்துக் கொள்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நண்பர் சிவகார்த்திகேயனுக்காக மெனக்கெட்டு பாடல் போட்டிருப்பார் போல அனிருத். கருத்தவனெல்லாம் கலீஜாம் பாடலுக்கு தியேட்டரே அதிருகிறது.

காதலர்களுக்கு இதயனே பாடலும், சமூகத்திற்கு எழு வேலைக்காரா என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறார். பின்னணி இசையும் ஓகே.

கலை இயக்குனர் முத்துராஜை பாராட்டியே ஆகவேண்டும். சேரி பகுதிகளை செட் போட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதால்தான் தெரியும். அப்படியொரு யதார்த்தம்.

படத்தின் பலம் கதையும் வசனங்களும்தான். வசனங்களுக்காகவே நிறைய அப்ளாஸ் கிடைக்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் எந்த குறையும் இல்லை. தேவையானதை கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் ராம்ஜி.

இயக்கம் பற்றிய அலசல்…

இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று சிவகார்த்திகேயன் ஏன் சொன்னார்? என்பதற்கு இந்த படம் மிகப்பெரிய உதாரணம். அவர் மாறிவிட்டார். மற்றவர்கள் மாறுவார்களா? என்பதே கேள்வி.

அட்வர்டைசிங் மற்றும் மார்கெட்டிங் எப்படி எல்லாம் செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என பாடம் நடத்தியுள்ளார் மோகன்ராஜா.

வேலைக்காரன் என்னைக்குமே முதலாளியை நம்புறான், ஆனால், முதலாளி தான் வேலைக்காரனை நம்பாமல் கேமரா வைச்சு பாக்குறான். என்ற வசனம் விசில் பறக்க செய்கிறது. (நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ?)

பகத்பாசில் ஒரு பெரிய நிறுவன அதிகாரியின் மகன். இது சாதாரண வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மற்ற பணக்கார நிர்வாகிகளுக்கு எப்படி தெரியாமல் போகும்.? முக்கியமான கேரக்டரை இப்படி செய்திருக்கலாமா டைரக்டர்..?

வேலைக்காரன்… பப்ளிக் அலர்ட்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கோகுல் ஆனந்த், (ஹரிஷ்) ராஜேஷ் பாலசந்திரன் (வானம்பாடி), அஞ்சு குரியன் (ரோஷினி) சிவ் கேசவ் (மைக்கேல் கிரிஸ் முருகாந்தம்) எம்சீ ஜெஸ் (பாப்பாபலாஸ்ட்)
இயக்கம் : அப்பாஸ் அக்பர்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து
எடிட்டிங்: பிரவீன் கேஎல்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஜிப்ரான்

கதைக்களம்…

சினிமாவில் டைரக்டராக வேண்டும் என பல மாதங்களாக முயற்சிக்கிறார் ஹீரோ கோகுல் ஆனந்த்.

ஆனால் இவரை காக்க வைத்த தயாரிப்பாளரோ ஒரு கட்டத்தில் வேறு ஒரு இயக்குனரை வைத்து படமெடுக்க நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்பதற்காக அவரை பார்க்க அங்கு செல்கிறார்.

ஆனால் அவர் விபத்தில் சிக்கி விடுகிறார். அதன்பின் அங்குள்ள ஒரு கேமராமேன் வானம்பாடியை சந்திக்கிறார்.

அவரின் உதவியுடன் புதிய தயாரிப்பாளரை தேடுகின்றார்.

இதனிடையில் நாயகி அஞ்சுவை சந்திக்கிறார். அவரை காதலிக்கிறார். ஆனால் நாயகியோ கேன்சர் நோயாளி. இதனால் அவருக்கு உதவ நினைக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் கிடைக்கிறார்.

அதன்பின் படம் எடுத்தாரா? காதலியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

chennai to singai

கேரக்டர்கள்…

படம் முழுவதும் 5, 6 கேரக்டர்களே வருகிறார்கள். அதிலும் கோகுல் ஆனந்த் அவரது நண்பன் ராஜேஷ்பாலச்சந்திரன் படத்தின் இரு பில்லர்கள்.

இவர்கள் இருவருமே படத்தை தாங்கி நிற்கின்றனர். கிடைத்த கேப்பில் எல்லாம் நண்பர் காமெடி செய்து படத்தை கலகலப்பாக்குகிறார்.

இருவரும் அடிக்கும் லூட்டிதான் படத்தின் பலம். இவருடன் தயாரிப்பாளராக வரும் சிவ் கேஷவ் ஸ்டைலிஷ்ஷாக ரசிக்க வைக்கிறார்.

ஆனால் உச்சக்கட்ட அந்த பின்னாடி துப்பாக்கி வைக்கும் காமெடி ரொம்ப ஓவர்.

கேன்சர் நோயாளி ரோஷினி சோகமாய் வந்து அனுதாப பட வைக்கிறார்.

செக்மேட் வில்லன் மற்றும் அவரது கேங் செய்யும் அட்டகாசங்கள் சூப்பர். பணம் தரலேன்னா உன் காதலியை கொன்னுடுவேன் என்று சொன்னபின் கொன்னுடு என்ற நாயகன் சொன்னதும், பணம் தரலேன்னா கொல்ல மாட்டேன் என காமெடி செய்து ரசிக்க வைக்கிறது.

ஏன்டீ லவ் யூ ஒரு வார்த்தை ஹீரோகிட்ட சொன்னா என்ன? எனக்கு பணம் கிடைக்கும் என நாயகியிடம் கெஞ்சுவது நச்.

chennai to singapore stills

தொழில்நுட்ப கலைஞர்கள்..

சிங்கப்பூர் அழகை இரவிலும் பகலிலும் நன்றாக படம் பிடித்து அழகு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து.

படத்தின் டைட்டில் கார்டுகள் அதனை உருவாக்கிய விதம் அருமை.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞன் அவனை சுற்றியுள்ள கதை என ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர்.

ஆனால் படத்தில் சிலரை மட்டுமே காட்டுவது போரடிக்கிறது. பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவர் வெளிநாட்டில் வாழும்போது எப்படி தப்பு மேல் தப்பு செய்வார்? போலீஸ் எங்கே? என்ற லாஜிக் எல்லாம் உதைக்கிறது.

மற்றபடி தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

அவரது படம் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துள்ளாரோ என்னவோ? பாடலும் அதை படமாக்கப்பட்ட இடங்களும் ரசிக்க வைக்கிறது.

`சென்னை 2 சிங்கப்பூர்’… ஜாலி டூர் போலாம்

பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின், கே.பாக்யராஜ், கௌசல்யா, ஜெகன், சோனா மற்றும் பலர்
இயக்கம் : பி.எஸ். விஜயகுமார்
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: தீபக்குமார் பதி
எடிட்டிங்: சபு ஜோசப்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பு: கணேஷ் ட்ரீம் பேக்டரி

bramma

கதைக்களம்…

அட்வர்டைசிங் நிறுவனத்தில் டைரக்டராக வேலை பார்க்கிறார் நகுல். இவரின் அண்ணன் முறையான சித்தார்த் விபின் அதே நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.

தன்னை பார்த்து தேர்வுகளில் காப்பியடித்த இவர் எப்படி? நம்மை விட உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் என்பதால் கவலை கொள்கிறார் நகுல்.

இந்நிலையில் சிஇஓ.வை சந்திக்காமல் அடிக்கடி தன்னை சந்திக்க வரும் மாடல் அழகி ஆஷ்னா மீது காதல் கொள்கிறார் நகுல்.

ஒரு பிறந்தநாள் அன்று கோயிலுக்கு செல்லும் நகுல்.. நீ என்ன கடவுள்? நன்றாக படித்த நான்? இப்படி இருக்கிறேன். நாங்கள் ஆசைப்பட்டதை நீ கொடுக்க மாட்டேன் என்கிறாய்? நீ ஆசைப்பட்டு கொடுப்பதை நாங்கள் இஷ்டமில்லாமல் அனுபவிக்க வேண்டுமா? என பல கேள்விகள் கேட்கிறாய்.

அன்றுமுதல் இவருக்கு பேஸ்புக்கில் கடவுள் பிரம்மா பெயரில் ஒரு இன்வைட் வருகிறது. அதை ஏற்றுக் கொண்டது முதல் இவர் திடீரென சிஇஓ ஆகிவிடுகிறார்.

இதனால் பல ஆடம்பர வசதிகள் வந்துவிடுகின்றன. இப்போது இவரது இடத்தில் வந்துவிடுகிறார் சித்தார்த், அதாவது சித்தார்த் விபின் டைரக்டர் ஆகிறார்.

இவர்களை தவிர மற்றவை எல்லாம் பழையபடியே நடக்கிறது. அதாவது ஆஷ்னா டைரக்டர் பொறுப்பில் இருக்கும் சித்தார்த்துடன் நெருக்கமாகுகிறார்.

இதனால் கடுப்பாகும் நகுல் மீண்டும் பழைய வாழ்க்கையை கடவுள் பிரம்மாவிடம் கேட்கிறார்.

அதன்பின்னர் பிரம்மாவுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே மீதிக்கதை.

bramma stills

கேரக்டர்கள்…

காதலிக்காக ஏங்கும் கேரக்டரில் நகுல் ரசிக்க வைக்கிறார். நிறைய காட்சிகளில் சுறுசுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், அதுவே மிகைப்பட்ட நடிப்பாக தெரிகிறது.

சித்தார்த் விபின் அவருக்கே உரித்தான பாணியில் நடித்திருக்கிறார்.

அழகான இரண்டு நாயகிகள் ஆஷ்னா சவேரி மற்றும் நீது சந்திரா. ஆனால் இருவருக்குமே சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஒய்யாராமாக அடிக்கடி கேட் வாக் செய்து வருகிறார் ஆஷ்னா.

மொட்டை ராஜேந்திரன் காமெடி வில்லனாக அமர்க்களப்படுத்தியுள்ளார்.

ஜெகன் இருந்தும் கடுகளவு கூட காமெடியில்லை. சோனா, பாக்யராஜ், கௌசல்யா ஆகியோரும் உண்டு. ஆனால் அவர்களை சரியாக டைரக்டர் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

bramma dot com stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. இவருக்கென்று அறிமுக காட்சியில் பின்னணி இசையும் சேர்த்துள்ளார். தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

ஒரு நல்ல கற்பனை கதையை கொடுத்திருந்தாலும், அதை நல்ல கேரக்டர்கள் கொண்டு சென்றிருக்கலாம். தொய்வான திரைக்கதையால் சலிப்பு தட்டுகிறது.

இறுதியாக யாருக்கு என்ன செய்யனும்? என்பது கடவுளுக்கு தெரியும் என்பது போல முடித்து சபாஷ் பெறுகிறார் டைரக்டர் பி.எஸ். விஜயகுமார்.

‘பிரம்மா.காம்’… கற்பனை கடவுள்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நந்தன்ராம், வெண்பா, கேஎஸ் ரவிக்குமார், ஆர்கே.சுரேஷ், பொன்வண்ணன், ஊர்வசி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஈ.ராமதாஸ், சுஜாதா சிவகுமார் மற்றும் பலர்
இயக்கம் : வாசுதேவ் பாஸ்கர்
இசை : விஜய் நாராயணன்
ஒளிப்பதிவு: வினோத் குமார்
எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு: வேலு

கதைக்களம்…

படத்தின் தலைப்பிலே கதை புரிந்திருக்கும். பள்ளிப் பருவத்தில் எழும் காதல். அதன்பின் எழும் பிரச்சினைகளே படத்தின் கதை.

நாயகன் நந்தன்ராம், நாயகி வெண்பாவின் காதல் கைகூடியதா? என்ன ஆனது? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகி வெண்பாவுக்கு இது 2வது படம். ஆனால் அறிமுகம் என்று டைட்டில் கார்டு வருகிறது. இப்படம் தாமதமாக வந்துவிட்டது.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் கண்களாலும் உதட்டு அசைவிலும் பேசிவிடுகிறார் வெண்பா. க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லாம் சேர்த்து வெளுத்து கட்டிவிடுகிறார். நல்ல மெச்சூரிட்டியான நடிப்பு.

நாயகன் நந்தன்ராம்க்கு இது முதல் படம். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் இவர்.

பள்ளி பையன்களுக்கே உரித்தான இளமை துள்ளல் மிடுக்குடன் வருகிறார். அதே சமயம் காதலிக்காக வழிவதும் ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் கேஎஸ் ரவிக்குமார், ஆர்கே.சுரேஷ், பொன்வண்ணன், ஊர்வசி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஈ.ராமதாஸ், சுஜாதா சிவகுமார் என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இவர்கள் அனைவரும் தங்கள் அனுபவ நடிப்பால் மிளிர்கின்றனர். ஆனால் கஞ்சா கருப்பு, தம்பி ராமையாவுக்கு காமெடி காட்சிகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கலாம்.

நந்தன் ராமின் 2 நண்பர்களும் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. கிராமத்து மண் வாசனையுடன் ரசிக்க வைக்கிறார்.
வினோத் குமாரின் ஒளிப்பதிவில் வெண்பா மிக அழகாக இருக்கிறார்.

வழக்கமான காதல், இதனால் ஏற்படும் மோதல் என 90% கதையை கொடுத்துவிட்டு இறுதியில் வித்தியாசப்படுத்தியுள்ளார் டைரக்டர் வாசுதேவ் பாஸ்கர்.

பார்க், தியேட்டர் போவது போல எங்கள் காதல் நாய் காதல் இல்லை என்கிறார் ஹீரோ. அதுசரி ஆனால் இவர்களின் காதல் எப்படி உயர்ந்துவிட்டது என்பதற்கு காரணம் இல்லை.

மாங்காய் சப்புவது, தயிர்சாதம் சாப்பிடுவது, காதலிக்காக தேர்வு எழுதுவது ஒன்றும் பெரிய காரியமல்லவே.

காதலனை ஏமாற்றிவிட்டு செல்லும் காதல் எப்படி உயர்ந்த காதல் ஆகும்? அதுவும் காதலன் போட்டோவை வெண்பா கணவன் கும்பிடுவது எப்படி? என்ற கேள்விக்கு பதில் இல்லையே..??

காதலன் அம்மாவை நாயகி பாதுகாப்பது மூலம் தேர்ச்சி பெறுகிறார் இயக்குனர்.

பள்ளிப் பருவத்திலே… உதிர்ந்த நினைவுகள்

More Articles
Follows