பரம்பொருள் விமர்சனம் 3.75/5.. படம் பேசும் பொருளாக மாறும்

பரம்பொருள் விமர்சனம் 3.75/5.. படம் பேசும் பொருளாக மாறும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

சிலை கடத்தலை மையப்படுத்தி அதில் வியாபார யுக்தியை நுழைத்து இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்..

ஹீரோ அமிதாஸ். இவரது தங்கைக்கு ஒரு தீராத வியாதி. இதன் சிகிச்சைக்கு ரூ. 50 லட்சம்+ தேவைப்படுகிறது.

பணத்திற்காக ஒரு கட்டத்தில் போலீஸ் சரத்குமார் வீட்டில் இவர் திருடச் செல்லும் போது மாட்டிக் கொள்கிறார். எனவே அவர் மீது எல்லா வழக்குகளையும் போட சொல்கிறார் சரத்குமார்.

நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என கதறுகிறார் அமிதாஸ். அப்படி என்றால் எனக்கு நீ உதவி செய்தால் உன்னை வழக்கில் இருந்து விடுவிப்பேன் என்கிறார் சரத்குமார்.

அதன்படி இவர்கள் போடு திட்டம் தான் சிலை கடத்தல் வியாபாரம். அதன்படி ஒரு அபூர்வ சிலையை ஒரு பெரிய தொழில் அதிபரிடம் விற்க செல்கின்றனர். ஒரு வழியாக பேரம் பேசி 15 கோடிக்கு வாங்க அந்த தொழிலதிபர் முன் வருகிறார்.

அந்தக் கட்டத்தில் மற்றொரு கும்பலால் சிலை உடைந்து போகிறது.

அதன் பின்னர் என்ன ஆனது? தன் தங்கைக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்தார் அமிதாஸ்? பணத்தாசை பிடித்த போலீஸ் சரத்குமார் போட்ட திட்டம் என்ன? இவர்கள் திட்டம் நிறைவேறியதா? தொழிலதிபர் அந்த சிலையை வாங்கினாரா? சிலை பரிசோதிக்கப்பட்டதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

‘போர் தொழில்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார் இந்தப் படத்திலும் அதே கம்பீரம் அதே தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.

ஆனால் தடம் மாறி பணத்தாசை பிடித்த அதிகாரியாக நடித்திருக்கிறார். கொஞ்சம் கூட வெட்கப்படமல் லஞ்சம் வாங்குவது.. பேரம் பேசுவது.. திடீரென கோபப்படுவது என வெளுத்துக்கட்டி இருக்கிறார் சரத்குமார்.

நாயகனாக அமிதாஸ்.. இவர் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் வில்லனாக நடித்தவர். தன் தங்கைக்காக உருகுவது.. குடும்பத்திற்காக உழைப்பது.. போலீஸிடம் சிக்கி தவிப்பது.. என பன்முகம் காட்டியிருக்கிறார் அமிதாஷ்.

நாயகியாக கஷ்மீரா.. இவர் கொஞ்ச காட்சியில் வந்தாலும் அந்த அழகு சிலை போல வருகிறார். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை.

சிலையை ஆய்வு செய்யும் நபராக பாலாஜி சக்திவேல். அவர் தன்னுடைய கஷ்டத்தை கூறிக் கொண்டே சிலை பரிசோதனைக்கு விலை பேசுவது சுவாரசியமான காட்சி.

வில்லன் கும்பலிடம் சரத்குமார் விலை பேசும் காட்சிகள் நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.

டெக்னீசியன்கள்…

அறிமுக இயக்குநர் அரவிந்தராஜ் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். இவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர் என்பதை தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் உணர்த்தி இருக்கிறார்.

யுவனின் படத்திற்கு பின்னணி இசை சிறப்பான உணர்வை கொடுத்துள்ளது. அனிருத் மற்றும் யுவன் இணைந்த பாடல் தேவையில்லாத சொருகல். இந்த படத்திற்கு பாடலே தேவையில்லை என்பதை உணர்ந்து எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

படத்தின் ஒளிப்பதிவும் சிறப்பு. சிலை உருவாகும் காட்சிகள் பேரம் பேசப்படும் காட்சிகள் சிலை உடையும் காட்சிகள் என அனைத்தையும் தத்துரூபமாக படம் பிடித்துள்ளார்.

ஆக இந்த பரம்பொருள்.. படம் பேசும் பொருளாக மாறும்..

Paramporul movie review and rating in tamil

லக்கிமேன் விமர்சனம் 3.5/5 ; லாபம் மேன்.. ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.!

லக்கிமேன் விமர்சனம் 3.5/5 ; லாபம் மேன்.. ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என நினைக்கும் ஒருவனுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடிக்க தொடங்கினால்..

கதைக்களம்…

ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் யோகி பாபு. இவரது மனைவி ரேச்சல். இவர்களுக்கு ஒரு மகன்.

உழைத்து சம்பாதித்த பணம் போதவில்லை.. தனக்கு அதிர்ஷ்டம் என்பதே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் யோகிபாபுவுக்கு ஒரு நாள் திடீரென ஒரு பரிசுத் திட்டத்தில் கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது.

ஆனால் காரை நிறுத்த கூட தன் வீட்டில் வசதி இல்லாத நிலையில் பல தெரு ஓரங்களில் இரவு நேரங்களில் நிறுத்தி வருகிறார் யோகி பாபு.

ஒரு கட்டத்தில் அவருக்கு கார் வந்த பின்பு தான் மெல்ல மெல்ல அதிர்ஷ்டம் அடிக்க தொடங்குகிறது. எனவே அந்த ராசியான காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

திடீரென ஒரு நாள் அந்த காரை திருடர்கள் திருடி செல்கின்றனர். அதன்பின்னர் யோகி பாபுவின் வாழ்க்கை என்ன ஆனது? கார் கிடைத்ததா? அதிர்ஷ்டத்தை இழந்தாரா? யோகி பாபு என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மண்டேலா படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக வலம் வருகிறார் யோகி பாபு. தனது ஒன்லைன் கவுண்டர் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். தன் யதார்த்த நடிப்பால் நம்மை கலங்கவும் வைக்கிறார் யோகி பாபு.

இவரது மனைவியாக ரேச்சல். சமீபத்தில் தேசிய விருது பெற்ற கடைசி விவசாயி படத்தில் நீதிபதியாக நடித்திருந்தார் ரேச்சல். கணவனை திட்டி அதேசமயம் பாசம் காட்டும் மனைவியாக வாழ்ந்திருக்கிறார் ரேச்சல்.

இவர்களின் குழந்தையாக சாத்விக். நிஜ வாழ்க்கையில் யோகி பாபுவுக்கு ஒரு குழந்தை இருந்தால் இவனை போல தான் தோற்றமளிப்பார் என்பது போல ஜெராக்ஸ் காப்பி எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

இவர்களுடன் வில்லனாக வீரா.. ஆனால் இந்த வில்லன் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி. தன்னுடைய வழக்கமான காமெடியால் திட்டும் யோகி பாபு ஒரு போலீஸ் அதிகாரியை திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொஞ்ச நேரமே வந்தாலும் நடிகர் சிவாஜி ரசிக்க வைக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் போதை விற்ற குடும்பம் தானே என யோகி பாபு கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.

யோகி பாபுவின் நண்பராக வரும் அப்துல் யதார்த்த நண்பனாக தோள் கொடுத்து உதவியிருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதையின் ஓட்த்திற்கு ஏற்ப பயணிப்பது சிறப்பு. மதனின் படத்தொகுப்பும் நேர்த்தி.

பாணி பூரி என்ற வெப்சிரீசை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவரும் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார்.

சாமானியனுடன் கனெக்ட் ஆகும் கதையை வடிவமைத்து அதில் நாயகனை பொறுத்தி இருக்கிறார்.

அதிர்ஷ்டம் இல்லாத ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் அடித்தால் அவனது வாழ்க்கை எப்படி மாறும்? என்பதையும் திடீரென அந்த அதிர்ஷ்டம் காணாமல் போனால் என்னவாகும்? என்பதையும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

ஆக லக்கி மேன்.. லாபம் மேன் ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.!

lucky man movie review and rating in tamil

பாட்னர் விமர்சனம் 1.5/5.. பாவம்ய்யா விட்டுங்க

பாட்னர் விமர்சனம் 1.5/5.. பாவம்ய்யா விட்டுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் வீட்டில் உள்ள கடன் பிரச்சனையால் சென்னைக்கு வருகிறார் நாயகன் ஆதி. அங்கு தன்னுடைய நண்பர் ஹைடெக் திருடன் யோகிபாபு உடன் இணைகிறார்.

இவர்கள் பணி புரியும் கம்பெனியில் ஜான்விஜய் ஒரு ப்ராஜெக்ட் கொடுக்கிறார். அதற்கு அட்வான்ஸாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறார். இந்த பணத்தை யோகி பாபு ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ரவி மரியாவிடம் கொடுத்து.. “நான் வந்து திருப்பி கேட்டால் மட்டும் தான் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என கூறி செல்கிறார்.

அதன்படி சயின்டிஸ்ட் பாண்டியராஜனிடம் இருக்கும் ஒரு சிப்பை திருட செல்கின்றனர் ஆதி & யோகிபாபு.. அங்கே தவறுதலாக யோகிபாபுவின் கழுத்தில் ஒரு ஊசி ஏற்றப்படுகிறது. மறுநாள் காலை கண்விழித்ததும் யோகி பாபு ஒரு பெண்ணாக ஹன்ஷிகாவாக மாறிவிடுகிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? ஹன்சிகா மீண்டும் யோகிபாபு போல ஆனாரா.? அந்த சிப் திருட வந்தவர்கள் என்ன ஆனார்கள்.? ஆதி கடனை அடைத்தாரா? ரவி மரியா பணத்தை என்ன செய்தார்? ஜான்விஜய் யோகி பாபுவை கண்டுபிடித்தார் ?என்பதுதான் படத்தின் மீதிக்தை

கேரக்டர்கள்…

பல படங்களில் கம்பீரமாக நடித்த ஆதி இதில் ஜாலி கேரக்டருக்கு முயற்சி செய்துள்ளார்.. பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும் ஓரளவுக்கு சமாளித்து இருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகுதான் ஹன்சிகா வருகிறார்.. அவர் வந்தவுடன் படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூடினாலும் திரைக்கதை வேகம் இல்லாத காரணத்தினால் ஹன்சிகாவின் நடிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு வழக்கம் போல டேய் என மரியாதை இல்லாமல் பேசி காமெடி செய்ய முயற்சித்துள்ளார்.. சில காமெடி மட்டுமே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

வில்லனாக ஜான் விஜய், விஞ்ஞானியாக ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக பல்லக் லல்வானி ஆகியோரும் உண்டு.

ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், யோகி பாபுவின் காதலியாக ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா ஆகியோருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

டெக்னீசியன்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் ஹிட் ஆல்பமான ‘ராட்டி’ பாடலை இந்தப் படத்தில் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

பொண்ணுங்க தம் அடிப்பாங்க; தண்ணி அடிப்பாங்க. கோவம் வந்தா புருஷனைப் போட்டு அடிப்பாங்க. கேட்டா ஃபெமினிசம்னு சொல்லுவாங்க’ என்று யோகிபாபு பேசும் டயலாக்கில் பெண்ணுரிமை வாதிகளுக்கு என்ன சொல்ல வருகிறார்.?

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

இயக்குனர் மனோஜ் தாமோதரன்… இயக்கியுள்ளார்.. லாஜிக் பார்க்காமல் படத்தை காமெடியாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்.. ஆனால் காமெடியாவது அதிகம் இருந்தால் லாஜிக்கை மறந்து இருக்கலாம்.. படத்தின் நீளம் மட்டுமே குறைவு என்பதால் ஓரளவுக்கு பொறுத்துக் கொள்ள முடிகிறது..

யோகி பாபுவாக மாறுகிறார் ஹன்சிகா. அதற்கு ஆண் குரல் கொடுத்து இருக்க வேண்டும்… ஆனால் டப்பிங் கலைஞர் சவிதாவின் குரலை கொடுத்து இருக்கிறார்கள்.. அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.. ஹன்சிகா தன்னுடைய பாடி லாங்குவேஜ் ஆண்களுக்கு ஏற்ப மாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் யோகிபாபுவின் பாடி லாங்குவேஜ் கொண்டு வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆக பார்ட்னர்.. ரசிகர்கள் பாவம்மய்யா

partner movie review and rating in tamil

அடியே விமர்சனம் 3.25/5 .; Scientific Love

அடியே விமர்சனம் 3.25/5 .; Scientific Love

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

டைம் ட்ராவல் டைம் லுப் உள்ளிட்ட பல படங்களின் கலவைதான் இந்த ‘அடியே’

டைம் ட்ராவல் கதைகளில் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்ல முடியும். ஆனால் இதில் ALTERNATE REALITY & UNIVERSAL PARALLEL என்பதையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

அதாவது அந்நியன் படத்தில்.. “அம்பியாக இருக்கும் விக்ரம் திடீரென ரெமோவாக மாறி இருப்பார். ஆனால் மற்றவர்கள் அப்படியே தான் இருப்பார்கள். ஆனால் இந்த கதையை பொருத்தவரை ட்டைம் டிராவல் போல கடந்த காலத்திற்கு செல்லும் நாயகன் மட்டுமல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட சில நபர்களும் செல்கின்றனர்.

மேலும் 12B படத்தில் வருவது போல பஸ்ஸை பிடித்து ஏறி இருந்தால் ஒரு கதை. பஸ்ஸை தவறவிட்டால் மற்றொரு கதை. ரியாலிட்டியை மீறிய மற்றொரு ரியாலிட்டி தான் ஆல்டர்னேட் ரியாலிட்டி.

கதைக்களம்…

பள்ளி பருவத்திலேயே தன்னுடைய பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்தவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் நண்பர்கள் உதவியால் படித்தாலும் வாழ்க்கையின் விரக்தித்தின் காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது தனக்கு பிடித்தமான பெண் பாடகி கௌரி டிவியில் ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் எனக்கு ஒரு முதல் ரசிகன் இருக்கிறார் அவரை நான் காதலிக்கிறேன் அவரை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்.

இதனை கேட்ட ஜிவி பிரகாஷ் கௌரியை சந்திக்க நினைக்கிறார்.. “நான் தான் உங்களது முதல் ரசிகன்” என சொல்ல முயற்சித்து செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார். காலை எழுந்ததும் வேறு உலகத்தில் இருக்கிறார்.

அதில் மனைவியாக கௌரி வருகிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என புரியாமல் தவிக்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் தன்னுடைய பழைய உலகத்திற்கே வந்து விடுகிறார். இதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.?

கேரக்டர்கள்…

தாடி வைத்த கல்லூரி இளைஞனாக ஜிவி பிரகாஷ். அதே சமயம் தாடி மீசை இல்லாத பள்ளி மாணவன்.. என இரண்டு இரண்டு தோற்றங்களிலும் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார்.

வேறு உலகத்திற்கு சென்றவுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் இவரது முகத்தை அடிக்கடி க்ளோசப் சாட்டில் காட்டிக் கொண்டிருப்பது போர்.

பள்ளி மாணவி – பாடகி – மனைவி என ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்ப அழகும் குறும்புத்தனமும் கலந்து கொடுத்திருக்கிறார் நாயகி கௌரி.

நாயகன் ஜிவி பிரகாஷிடம் இவர் என்னை பிடிக்கவில்லையா? என்று கேட்கும் அழும் காட்சிகளில் கண் கலங்க வைத்து அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் செந்தாழினியான கௌரி.

ஆர் ஜே விஜய் வழக்கம் போல சீரியஸான படங்களுக்கு கலகலப்பு ஊட்டி செல்கிறார். இவரது கேரக்டர் பெயரே ரசிக்க வைக்கிறது அதை வைத்தும் காமெடி செய்து இருக்கிறார்.

மற்றொரு உலகத்தில் கெளதம் மேனனாக வெங்கட் பிரபு, தன்னை தானே நக்கல் அடித்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார்.

டெக்னீசியன்கள்…

இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் கோச்.. பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளராக.. கூல் சுரேஷ் ஊமையாக அதுவும் தனுஷ் ரசிகராக.., ஹுண்டாய் நிறுவனம் பேஸ்ட், பிரதமராக விஜயகாந்த் என ALTERNATIVE REALITY கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

ஒரு சிலருக்கு கேரக்டர்கள் பெயரை மாற்றிய இயக்குனர் செந்தாழினி என்ற கேரக்டர் பெயரை மட்டும் எல்லா உலகத்திற்கு ஒரே மாதிரி காட்டி இருப்பது ஏன்? அது போல அவரது செல்போன் நம்பரும் மாறாமல் இருப்பதன் அவசியம் என்ன.?

கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கவிதையாகவே பாடலை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

அறிவியல் காதல் இரண்டையும் கலந்து வித்தியாசமான கோணத்தில் கதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு 30 நிமிடங்கள் குழப்பமான திரைக்கதையை கொடுத்துள்ளது.

அதை எல்லாம் கிளைமாக்ஸ் காட்சிகளில் விளக்கம் கொடுத்து நிவர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

ஆக இந்த அடியே… அறிவியல் காதல்

Adiyae movie review and rating in tamil

வான் மூன்று விமர்சனம்.; முதல் காதல் முதல் முதிர்ந்த காதல் வரை

வான் மூன்று விமர்சனம்.; முதல் காதல் முதல் முதிர்ந்த காதல் வரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம், டில்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வினோத் குமார் சென்னியப்பன் தயாரிக்க ‘வான் மூன்று’ படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது.

ஒன்லைன்…

வான் என்றால் பயணம் என்றொரு பொருள் உண்டு.. அதன்படி மூவரின் வாழ்க்கை பயணம் தான் இந்த வான் மூன்று.

கதைக்களம்…

காதல் தோல்வியால் விஷம் அருந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் நாயகன் ஆதித்யா பாஸ்கர். இவரை போலவே அதே வார்டில் வேறொரு காதல் தோல்வியால் விஷம் அருந்தி சிகிச்சைக்கு அனுமதிப்படுகிறார் நாயகி அம்மு அபிராமி.

இவர்கள் சிகிச்சைக்காக பத்து நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடுகிறது. அப்போது அம்மு மீது ஆதித்யாவுக்கு காதல் வருகிறது. இது ஒரு கதை.

இரண்டாவதாக வினோத் மற்றும் அபிராமி. – அபிராமியின் அப்பா எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்கிறார் வினோத். திருமணமான ஒரு வருடத்திற்குள் தன் மனைவிக்கு பிரைன் டியூமர் என்ற வியாதி இருப்பதை அறிகிறார்.

தன் காதலியை காக்க போராடும் காதலனின் கதை தான் இது.

மூன்றாவது காதல் டெல்லி கணேஷ் லீலா.. – வயது முதிர்ந்த இந்த காதல் தம்பதியர் தங்கள் பிள்ளைகளின் ஆதரவு இல்லாமல் வாழ்கின்றனர்.

தன் மனைவிக்கு தீவிரமான வியாதி இருப்பதை அறிந்த டெல்லி கணேஷ் அவரை காப்பாற்ற போராடுகிறார். பணமில்லாமல் தவிக்கிறார். இந்த 3 காதல் ஜோடியின் பயணம் தான் இது.

இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆதித்யா பாஸ்கர் – அம்மு அபிராமி

வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாச்சலம்

டெல்லி கணேஷ் – லீலா சாம்சன் ஆகியோர் தங்களது கேரக்டரை உணர்ந்து அதற்கு உயிரூட்டி உள்ளனர்.

ஆதித்யாவின் அம்மாவாக வருபவர் ஒரு கிராமத்து பெண்மணியின் யதார்த்த உணர்வை சிறப்பாக செய்துள்ளார்.

வினோத் மற்றும் அபிராமியின் காதல் நம்மை கண்கலங்க வைக்கிறது.

தான் நேசித்த மனைவியின் சிகிச்சைக்கு பணம் இல்லையே என டெல்லி கணேஷ் போராடும் தவிப்பு ஒரு முதிர்ந்த காதலின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதுபோல லீலாவின் நடிப்பு.. விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பதை உணர செய்திருக்கிறது.

டெக்னீஷியன்கள்…

நாம் அளவுக்கு அதிகமாக நேசித்த ஒருவரை பிரிய நேரிடும் போது காதல் வலியை உணர்வோம். அந்த வலியை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கிட்டத்தட்ட இந்த படம் முழுவதுமே ஒரே மருத்துவமனையில் நகரும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ் அதனை போர் அடிக்காமல் நேர்த்தியாக படம் பிடித்து கொடுத்திருப்பது சிறப்பு.

ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. அது படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு இதமளிக்கிறது.

படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் கொஞ்சம் காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என நினைத்து இந்த படத்தை இயக்கியதாக இயக்குனர் முருகேஷ் தெரிவித்திருந்தார். எனவே அதன் படி டிவி சீரியல் போல மெதுவாக நகரும் கதையை அமைத்திருக்கிறார்.

ஆனால் காதலில் தோல்வியடைந்த ஆதித்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். ஒரு வார கட்டத்தில் அம்மு மீது ஆதித்யாவுக்கு காதல் வருகிறது. சின்சியராக காதலித்த ஒருவன் மீண்டும் அடுத்த காதலில் ஒரே வாரத்தில் விழுவது எப்படி என்றே தெரியவில்லை? அது இயக்குனருக்கே வெளிச்சம்.

காதலுக்கு வயது தடையில்லை என்பதை ஆழமாக சொல்லி இருக்கிறார்.. அதுபோல எத்தனை காதல் வந்தாலும் காதல் காதல்தான். அதே சமயம் 65 வயதில் நாம் ஓய்வாக அமர்ந்திருக்கும் போது எந்த காதல் நம் மனதில் வருகிறதோ அது மட்டுமே உண்மையான காதல் என விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.

ஆக வான் மூன்று… முதல் காதல் முதல் முதிர்ந்த காதல் வரை

Vaan Moondru review and rating in tamil

ஜெயிலர் விமர்சனம் 4/5.; ஜெயிச்சிட்டாரு

ஜெயிலர் விமர்சனம் 4/5.; ஜெயிச்சிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட தன் மகனை மீட்க போராடும் ஒரு தகப்பனின் கதை இந்த ஜெயிலர்..

கதைக்களம் :

முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகன் வசந்த ரவி மருமகள் பேரன் என ஒரு நடுத்தரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான வசந்த் ரவி ஒரு சிலை கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். இதனால் அந்த கும்பலுக்கும் வசந்த ரவிக்கும் மோதல் உருவாக வசந்த ரவியை கடத்தி விடுகிறது.

அந்த கும்பலிடம் இருந்து தன் மகனை மீட்க அவதாரம் எடுக்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரியான முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர்.

அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் யதார்த்தமான சீனியர் சிட்டிசனாக அறிமுகமாகிறார் ரஜினி.

பேரனுடன் விளையாடுவது.. மனைவியுடன் செல்லமாக கோபிப்பது.. மகன் மீது பாசத்துடன் கை கோர்ப்பது என சிம்பிளாக வந்து செல்கிறார் சூப்பர் ஸ்டார்.

ஒரு கட்டத்தில் தன் மகனை மீட்க இவர் எடுக்கும் அசுரவேகம் அதகளம் செய்கிறது.

தலைவர் அலப்பறை தலைவர் நிரந்தரம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இடைவேளைக்குப் பிறகு மாஸ் காட்டி இருக்கிறார் ரஜினி.

மகனாக வசந்த்ரவி. இவரது கேரக்டரில் இயக்குனர் வைத்த திருப்புமுனை எதிர்பாராத ஒன்று.

அழகான மனைவி அன்பான துணைவி என்பது போல விஜயா கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

நடிகை காம்னா கேரக்டரில் தமன்னா.. காவலா பாட்டுக்கு நம்மையும் ஆட வைக்கிறார்.

கால் டாக்சி டிரைவராக யோகிபாபு வருகிறார். இவரும் ரஜினியும் சேர்ந்து செய்யும் டார்க் காமெடி களை கட்டியுள்ளது எனலாம்.

ரஜினிக்கு நிகரான மிரட்டல் வில்லனாக விநாயகன் நடித்திருக்கிறார். இவரது காட்சிகள் படத்திற்கு பெரும் பலம். முக்கியமாக இவர் எதிரிகளை கொல்லும் காட்சிகள் வித்தியாசமான கற்பனை.

மோகன்லால் – சிவராஜ்குமார் – ஜாக்கி ஷரப் ஆகியோரது கேரக்டர்கள் படத்திற்கு பிளஸ். ஆனால் அவர்களுக்கான கொடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு.

பெரிய சூப்பர் ஸ்டாரை பயன்படுத்தும் போது அதில் இன்னும் கொஞ்சம் வெயிட் ஏத்தி இருக்கலாம்.

பருத்தி வீரன் சரவணன் கொஞ்ச நேரம் வந்தாலும் சரவெடி. சுனில் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வர வைக்கிறது. இவரது கெட் அப் கூட சிரிக்க வைக்கும்.

டெக்னீஷியன்கள்…

தன் குடும்பத்தை காக்க ஒரு குடும்பத் தலைவன் எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதை அதிரடி ஆக்ஷன் உடன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

அனிருத் இசையில் உருவான காவலா என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. தலைவர் அலப்பறை என்ற பாடல் ரஜினி ரசிகர்களை முறுக்கேற்றுகிறது. மற்ற பாடல் பெரிதாக கவனம் பெறவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

ஆனால் படத்தின் கருவாக கருதப்படும் ஜெயிலர் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. முக்கியமாக ரஜினியின் போலீஸ் கெட்டப் கவனம் பெறவில்லை.

இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு தான். ஆனால் அதை எல்லாம்
கிளைமாக்‌ஸில் வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் ஹைலைட்டாக கருதப்பட்ட டார்க் காமெயை இந்த படத்திலும் இடைவேளை வரை கொடுத்து படத்தை படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார். முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி ஆக்சன் என இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு மக்களுக்கும் ட்ரீட் கொடுத்துள்ளார் நெல்சன்.

ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்டைலான மாஸ்தான்..

அதை ஒரு காட்சியில் வைத்து ரஜினி மோகன்லால் சிவராஜ்குமார் ஆகிய மூவருக்கும் சேர்த்து சூப்பர் ஸ்டார் பாடலை ஒலிக்க விட்டது கூடுதல் சிறப்பு.

ஆக ‘ஜெய்லர்’.. ஜெயிச்சுட்டாரு..

rajinikanth’s Jailer review and rating in tamil

More Articles
Follows