தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
சிலை கடத்தலை மையப்படுத்தி அதில் வியாபார யுக்தியை நுழைத்து இருக்கிறார் இயக்குனர்.
கதைக்களம்..
ஹீரோ அமிதாஸ். இவரது தங்கைக்கு ஒரு தீராத வியாதி. இதன் சிகிச்சைக்கு ரூ. 50 லட்சம்+ தேவைப்படுகிறது.
பணத்திற்காக ஒரு கட்டத்தில் போலீஸ் சரத்குமார் வீட்டில் இவர் திருடச் செல்லும் போது மாட்டிக் கொள்கிறார். எனவே அவர் மீது எல்லா வழக்குகளையும் போட சொல்கிறார் சரத்குமார்.
நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என கதறுகிறார் அமிதாஸ். அப்படி என்றால் எனக்கு நீ உதவி செய்தால் உன்னை வழக்கில் இருந்து விடுவிப்பேன் என்கிறார் சரத்குமார்.
அதன்படி இவர்கள் போடு திட்டம் தான் சிலை கடத்தல் வியாபாரம். அதன்படி ஒரு அபூர்வ சிலையை ஒரு பெரிய தொழில் அதிபரிடம் விற்க செல்கின்றனர். ஒரு வழியாக பேரம் பேசி 15 கோடிக்கு வாங்க அந்த தொழிலதிபர் முன் வருகிறார்.
அந்தக் கட்டத்தில் மற்றொரு கும்பலால் சிலை உடைந்து போகிறது.
அதன் பின்னர் என்ன ஆனது? தன் தங்கைக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்தார் அமிதாஸ்? பணத்தாசை பிடித்த போலீஸ் சரத்குமார் போட்ட திட்டம் என்ன? இவர்கள் திட்டம் நிறைவேறியதா? தொழிலதிபர் அந்த சிலையை வாங்கினாரா? சிலை பரிசோதிக்கப்பட்டதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
‘போர் தொழில்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார் இந்தப் படத்திலும் அதே கம்பீரம் அதே தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.
ஆனால் தடம் மாறி பணத்தாசை பிடித்த அதிகாரியாக நடித்திருக்கிறார். கொஞ்சம் கூட வெட்கப்படமல் லஞ்சம் வாங்குவது.. பேரம் பேசுவது.. திடீரென கோபப்படுவது என வெளுத்துக்கட்டி இருக்கிறார் சரத்குமார்.
நாயகனாக அமிதாஸ்.. இவர் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் வில்லனாக நடித்தவர். தன் தங்கைக்காக உருகுவது.. குடும்பத்திற்காக உழைப்பது.. போலீஸிடம் சிக்கி தவிப்பது.. என பன்முகம் காட்டியிருக்கிறார் அமிதாஷ்.
நாயகியாக கஷ்மீரா.. இவர் கொஞ்ச காட்சியில் வந்தாலும் அந்த அழகு சிலை போல வருகிறார். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை.
சிலையை ஆய்வு செய்யும் நபராக பாலாஜி சக்திவேல். அவர் தன்னுடைய கஷ்டத்தை கூறிக் கொண்டே சிலை பரிசோதனைக்கு விலை பேசுவது சுவாரசியமான காட்சி.
வில்லன் கும்பலிடம் சரத்குமார் விலை பேசும் காட்சிகள் நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.
டெக்னீசியன்கள்…
அறிமுக இயக்குநர் அரவிந்தராஜ் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். இவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர் என்பதை தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் உணர்த்தி இருக்கிறார்.
யுவனின் படத்திற்கு பின்னணி இசை சிறப்பான உணர்வை கொடுத்துள்ளது. அனிருத் மற்றும் யுவன் இணைந்த பாடல் தேவையில்லாத சொருகல். இந்த படத்திற்கு பாடலே தேவையில்லை என்பதை உணர்ந்து எடிட்டர் வெட்டியிருக்கலாம்.
படத்தின் ஒளிப்பதிவும் சிறப்பு. சிலை உருவாகும் காட்சிகள் பேரம் பேசப்படும் காட்சிகள் சிலை உடையும் காட்சிகள் என அனைத்தையும் தத்துரூபமாக படம் பிடித்துள்ளார்.
ஆக இந்த பரம்பொருள்.. படம் பேசும் பொருளாக மாறும்..
Paramporul movie review and rating in tamil