பேய்கள் மரிப்பதில்லை.. ; நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

பேய்கள் மரிப்பதில்லை.. ; நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பல தடைகளை தாண்டி 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று செல்வராகவனின் பிறந்த நாளில் படம் வெளியாகியுள்ளது.

*ஒரு பணக்கார தம்பதி எஸ்ஜே சூர்யா & மனைவி நந்திதா ஸ்வேதா. இவர்களுக்கு ஒரு குட்டி மகன்.

இவர்கள் காட்டு பங்களாவில் நான்கு வேலைக்காரர்களுடன் வசிக்கின்றனர்.

இவர்களின் செல்ல மகனைப் பார்த்துக் கொள்ள பராமரிக்க வேலையில் சேருகிறார் ரெஜினா கெசன்ட்ரா.

இங்கு கிடைக்கும் சம்பளம் மூலம், தான் சிறுவயது முதல் வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவ நினைக்கிறார் ரெஜினா.

நிறைய பணம்.. கொஞ்சம் சைக்கோ… கொஞ்சம் காமம் கலந்த குணம் கொண்ட சூர்யாவிற்கு ரெஜினா மீது ஆசை.

எனவே மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ரெஜினாவை பாலியல் பலாத்காரம் செய்து , கொல்கிறார்.

(பின்னர் என்ன… வழக்கமான பேய் கதை தான். இதை விட பெரிதாக பேய் கதையில் என்ன இருந்து விடப் போகிறது..?)

ரெஜினா பேய் அவர்களை எப்படி பழி தீர்த்து கொல்கிறது என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த படத்தின் ஹீரோ & வில்லன் என இரண்டையும் கலந்தே செய்துள்ளார்.

ராமசாமி என்று சொன்னால் பிடிக்காது… அதனால் ராம்சே என்கிறார் சூர்யா. அந்த ராம்சே கேரக்டரை பலமாக உருவாக்கியுள்ளனர்.

இப்படியெல்லாம் கூட மனுசங்க இருப்பாங்களா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு வெளுத்து கட்டியிருக்கிறார் ராம்சே.

அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான அன்பிற்கினியாள் பட விமர்சனம் (3.25/5)

ரெஜினா கசன்ட்ரா & நந்திதா இருவரும் இதற்கு முன் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளனர்.
அந்த படங்களை விட அவர்களின் இந்த படத்தை நம் நெஞ்சம் மறப்பதில்லை

தொழில்நுட்ப கலைஞர்கள்…

செல்வராகவன் படம் என்றாலே யுவன் ராஜ்யம்தான். இவர்களுக்குள் உள்ள கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

யுவனின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளது.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

வழக்கமான கதை என்றாலும் அதை உருவாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் மிஸ்ஸிங்.

பேய் படம் என்றாலே வேறு கதைகளை வைக்கவே முடியாதா? இல்லை தமிழ் இயக்குனர்களுக்கு வேறு கதை தெரியலையா? என்பதே செல்வராகவனின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பேய் படங்களை கொஞ்சம் காலம் பார்க்காமல் இருந்தவர்கள் இதை பார்த்து நெஞ்சத்தை தேற்றிக் கொள்ளலாம்.

Nenjam Marappathillai movie review and rating in Tamil

விஷாலின் ஆக்‌ஷன் அல்வா..; சக்ரா விமர்சனம்

விஷாலின் ஆக்‌ஷன் அல்வா..; சக்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – விஷால், ரோபோ சங்கர், கே ஆர் விஜயா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
இயக்கம் – எம்.எஸ்.ஆனந்தன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி

கதைக்களம்..

ஆகஸ்ட் 15… சுதந்திர தினத்தன்று சென்னையில் முதியவர்கள் வசிக்கும் 50 வீடுகளில் ஒரே நாளில் திட்டமிடப்பட்டு கொள்ளை நடக்கிறது.

கொள்ளையர்கள் விஷாலின் அப்பா பெற்ற சக்ரா விருதையும் கொள்ளை அடிக்கின்றனர்.

விஷாலின் குடும்பமே நாட்டிற்காக உயிர் வாழ்பவர்கள்.

இவரின் தாத்தா, தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்தியாகம் செய்தவர்கள். எனவே விஷாலும் ராணுவத்தில் இணைந்து தாய் நாட்டிற்காக பணியாற்றி வருகிறார்.

விஷாலின் தந்தையான நாசர் இந்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

இந்த கொள்ளை வழக்கை விசாரிக்க வருகிறார் விஷாலின் காதலியான ஏ எஸ் பியான ஷ்ரதா ஸ்ரீநாத்.

தன் காதலிக்காகவும் தன் தந்தைக்காகவும் விஷாலும் இந்த வழக்கில் நுழைகிறார்.

கொள்ளையர்கள் யார் என்பதை விஷால் & ஷ்ரத்தா கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கலைஞர்கள்…

ஆக்‌ஷன் கதை என்றாலே விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது போல.. அவரது உயரத்திற்கு ஏற்ப மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் செம பிஃட்.

இன்வஸ்டிகேஷன், ஆக்‌ஷன் என இரண்டிலும் முறுக்குத்தனம் காட்டியிருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத், போலீஸ் அதிகாரியாக தோன்றி அசர வைத்திருக்கிறார். இவர் செய்ய வேண்டிய பாதி வேலைகளை விஷாலே செய்துவிடுவதால் இவருக்கு பெரிதாக வேலையில்லை.

காமெடி பெயரில் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார் ரோபோ சங்கர். கமிஷனர் எதிரிலேயே அவரை பற்றித் தப்பாக பேச முடியுமா?

ரெஜினா கேஸண்ட்ரா முக்கியமான கேரக்டரில் லேட்டாக வருகிறார். வில்லத்தனத்தை கொஞ்சம் காட்டியிருக்கிறார்.

மனோ பாலா & ஸ்ருஷ்டி டாங்கே வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு (விஷாலின் பாட்டியாக) வருகிறார் கேஆர் விஜயா.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னனி இசையில் யுவன் குறை வைக்கவில்லை. படத்தில் ஒரே ஒரு பாடல்தான் என்பதால் கொஞ்சம் ஆறுதலும் கிடைக்கிறது.

பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் வேகத்தை கலந்து கொடுத்துள்ளார்.

டிஜிட்டல் முறைகேடுகளை முன்வைத்து நமக்கு நிறைய விழிப்புணர்வை எடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்தன்.

மேலும் சில சமூக வலைத்தளங்களில் நம் தனிப்பட்ட தகவல்களை கொடுத்தால் எப்படியெல்லாம் சிக்குவோம் என்பதை அப்பட்டமாக சொல்லியுள்ளார் ஆனந்தன்.

கிளைமாக்ஸ் காட்சியில் டாக்டரிடம் ரெஜினா பேசும் வசனங்கள் தாங்கல.. பல காட்சிகளில் செயற்கையான நாடகத்தன்மை இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

ஆக… ‘சக்ரா’… விஷாலின் ஆக்‌ஷன் அல்வா

Vishal’s Chakra movie review and rating in Tamil

கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்

கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தஞ்சாவூர் மாவட்ட நடுக்காவேரி என்றொரு கிராமத்தில் படிக்கும் மாணவி கமலி (கயல் ஆனந்தி).

இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது 12 தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவனை அஸ்வினை (ரோஹித் சராப்) டிவி-யில்பார்த்து காதல் கொள்கிறார்.

அந்த மாணவனை சந்திக்க வேண்டும், காதலிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அஸ்வின் சேர்ந்த சென்னை ஐஐடி’யில் சேர விரும்புகிறார்.

அதற்காக, பிரதாப் போ
த்தனிடம் டியூசன் கற்று நன்றாக படித்து, நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெறுகிறார்.

ஆனால் கமலியின் தந்தை அழகம் பெருமாளுக்கு மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுத்தால் போதும் என்று நினைப்பவர்.

ஒரு வழியாக ஐஐடியில் சேர்ந்த கமலி… காதலில் வென்றாரா? கல்வியில் வென்றாரா..? இரண்டிலும் வென்றாரா? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்...

பள்ளி மாணவியானாலும் கல்லூரி மாணவியானாலும் நன்றாக பொருந்தும் முகம் கயல் ஆனந்தி… தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு உயிரூட்டியிருக்கிறார..

கல்வி, காதல், சோகம், விரக்தி, என பன்முக பாவனைகளில் கலக்கியிருக்கிறார்.

டியூசன் மாஸ்டர் பிரதாப் போத்தன் நல்ல நடிப்பு.

நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு அவர் கொடுக்கும் டிப்ஸ் படிக்கும் எல்லாம் மாணவர்களுக்கு பயன்தரும்.

கமலின் தோழியாக வரும் ஸ்ரீஜாவின் நடிப்பு யதார்த்தம்.

இவர்களுடன் அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், அபிதா வெங்கட் ஆகியோரும் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தீன தயாளனின் இசை கதையோடு பயணிக்கிறது.

ஜெகதீசனின் ஒளிப்பதிவு கலர்புல். நடுக்காவேரி கொள்ளை அழகை கொடுத்து இருக்கிறார்.

இயக்குனர் ராஜசேகர் துரைசாமியை நன்றாகவே பாராட்டலாம்.

பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைத்தால் கல்வியை கவனிக்காமல் காதலை கவனிக்கும் சிலருக்கு இந்த படம் ஒரு பாடம்.

கல்வியா? காதலா..? என தவிக்கும் இளம்பெண் கமலி எடுக்கும் முடிவு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு பாடத்தை கொடுக்கும்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை சில இடங்களில் கணிக்க முடிவது படத்தின் மைனஸ்.

ஆக… கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி

Kamali from Nadukaveri movie review in Tamil

கானா காதல்…; பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

கானா காதல்…; பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – சந்தானம், அனைகா, மொட்ட ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேஷு
இயக்கம் – ஜான்சன்
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – லார்க் ஸ்டூடியோஸ்

கதைக்களம்…

சென்னையின் முக்கியமான ஏரியாக்களில் ஒன்று பாரிஸ்.

இந்த ஏரியாவைச் சேர்ந்த கானா பாடகர் தான் யு டியூப் புகழ் பாரிஸ் ஜெயராஜ் (சந்தானம்).

தன் காதலி அனைகாவை அடைய பல முயற்சிகள் செய்து அதில் வெற்றி பெறுகிறார்.

வழக்கமாக இது போன்ற படத்தில் பெண்ணின் தந்தை தான் வில்லனாக வருவார். ஆனால் இதில் சந்தானத்தின் தந்தை காதலுக்கு வில்லனாக வருகிறார்.

சந்தானத்தின் அப்பா வக்கீல் பிருத்விராஜ். இவர் தன் முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது மனைவியுடனும் குடும்பம் நடத்துகிறார். அந்த 2வது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஹீரோயின் அனைகா.

அப்படின்னா அண்ணன், தங்கை காதலா? என கேட்பவர்களுக்கு இந்த படத்தை பாருங்கள்.. செம ட்விஸ்ட் இருக்கும். அதுவே படத்தின் மீதிக்கதை்.

கேரக்டர்கள்…

தனக்கேற்ற ஸ்டைலில் கதையை தேர்ந்தெடுத்து அதில் மாஸ் காட்டியுள்ளார் சந்தானம். டைமிங் காமெடியும் சூப்பர்.

சந்தானம் அப்பாவாக தெலுங்கு நடிகர் பிருத்விராஜ். இரண்டு மனைவிகள் & மகன், மகளுக்கு இடையிலும் சிக்கித் தவிக்கும் காட்சிகளை திறம்பட செய்திருக்கிறார்.

மொட்ட ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேஷு என அனைவரும் சிரிக்க வைக்கின்றனர்.

சந்தானம் கதைகளை செலக்ட் செய்யும் போது ஹீரோயின்களையும் செய்யலாம். நாயகி அனைகா சோதி் அவ்வளவு பொருத்தமில்லை்

ஹைலைட்ஸ்…

சந்தானத்தின் அப்பாவையும் தன் அப்பாவையும் கான்பிரன்ஸ் காலில் பேச வைக்க முயற்சிக்கிறார் ஹீரோயின் அனிகா.

இவர்களின் ஒரே அப்பா பிருத்விராஜ் பேசி சமாளிக்கும் காட்சி காமெடிக்கு கியாரண்டி.

அதே போல இன்னொரு காட்சி.. ஜவுளிக் கடையில் ஒரே சமயத்தில் தன்னுடைய 2 மனைவிகளும் டிரையல் ரூமில் டிரெஸ் போட்டுப் பார்க்க பிருத்விராஜ் சமாளிக்கும் காட்சியும் மரண காமெடி.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்துமே கானா பாடல்கள். சில பாடல்கள் ரீப்பீடு போல உள்ளது. சில பாடல்கள் ரிப்பீட்டாக கேட்க வைக்கிறது. பச்சா பச்சாக்கே, புளி மாங்கா… ஆகிய பாடல்கள் தாளம் போட வைக்கும்.

ஒளிப்பதிவாளர் & எடிட்டர் இருவரும் தங்கள் பணிகளில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.

அண்ணன் தங்கை காதல் என ஒரு டிராக் பிடித்து அதை எவருடைய மனம் புண்படாமல் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் ஜான்சன்.

அதற்கு ஏற்ப ஆரம்பத்திலிருந்தே நாயகன் & நாயகியை நெருக்கமாக காட்டாமல் காட்சிகளை வைத்துள்ளார்.

இடைவேளை வரை கொஞ்சம் தடுமாறினாலும், பின் கிளைமாக்ஸ் வரை நம்மை கவர்ந்து விடுகிறார் பாரிஸ் ஜெயராஜ் இயக்குனர் ஜான்சன்.

ஆக கானாவும் காதலும் தான் இந்த பாரிஸ் ஜெயராஜ்

Parris Jayaraj review rating

காதலிக்க ஆசை தான்..; நானும் சிங்கிள் தான் விமர்சனம்

காதலிக்க ஆசை தான்..; நானும் சிங்கிள் தான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – தினேஷ், தீப்தி
இயக்கம் – கோபி
இசை – ஹிதேஷ் மஞ்சுநாத்
தயாரிப்பு – த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்

கதைக்களம்…

90s கிட்ஸ் தினேஷ். இவர் டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். நயன்தாராவை போல ஒரு சூப்பர் ஃபிகரை திருமணம் செய்ய காத்திருக்கிறார்.

தினேஷின் நண்பர்கள் ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத் & செல்வேந்திரன். இவர்கள் எல்லோரும் சிங்கிள்ஸ்.

ஹீரோயின் தீப்தி சதி. பாரீனில் வேலை பார்த்து செட்டிலாக ஆசைப்படுபவர் இவர்.

நாயகியை பார்த்ததும் தினேஷ் காதலிக்கிறார்.

இதன் பின்னர் லண்டனில் வேலைக்கு செல்கிறார் தீப்தி. அப்போது தினேஷ் & நண்பர்களும் லண்டன் செல்கின்றனர்.

அங்கு நடந்த ஒரு பிரச்சினையால் தினேஷை வெறுக்கிறார் தீப்தி.

இறுதியாக சிங்கிள் கமிட் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

தினேஷ் வழக்கம் போல் நடிக்க முயற்சித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.

நாயகி தீப்தி தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்..

ஆனாலும் தினேஷிடம் இருந்து தப்பிக்க கடைசியாக அவர் எடுக்கும் முடிவுகள் எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கும்.

நாயகனின் நண்பனாக வரும் ஆதித்யா கதிரின் கவுண்டர் காமெடிகள் பல இடங்களில் சிரிப்பை வர வைத்தாலும் டபுள் மீனிங் காமெடிகள் முகம் சுழிக்க வைக்கிறது.

லண்டன் பட காட்சிகளை மிக அழகாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தராஜ்.

ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் தான். பாடல்கள் எடுபடவில்லை. இன்று பாடல் ரசிக்கலாம்

ஆண்டனியின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.

இரட்டை அர்த்த வசனங்களுடன் படம் எடுத்தால் அது சூப்பர் ஹிட் என சில இயக்குனர்கள் நினைப்பது தவறு.

காம நெடி இல்லாமல் காமெடியாக கொடுத்தால் இன்னும் நல்ல பெயர் எடுக்கலாம்.

சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சிங்கிள்ஸ் ரசிக்க நிறைய காட்சிகள் உள்ளன.

ஆக ‘நானும் சிங்கிள் தான்’… காதலிக்க ஆசை தான்

Naanum Single than review rating

எங்கெங்கும் காதல்…; ‘கேர் ஆஃப் காதல்’ விமர்சனம்

எங்கெங்கும் காதல்…; ‘கேர் ஆஃப் காதல்’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2018ம் ஆண்டில் வெளியான C/O காஞ்சரபலம் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்த C/O காதல்.

காதலர்கள் ரசிக்கும்படி கவிதையாக கொடுத்துள்ளனர்.

நான்கு காதல் கதைகளை ஒரு புள்ளியில் இணைத்துள்ளனர்.

பள்ளி காதல், கல்லூரி காதல், 30 வயது காதல் ஜோடி, 45 வயதுகளில் ஒரு ஜோடி காதல் கதை என படத்தை பிரிக்கலாம்.

50 வயதாகியும் திருமணம் செய்யாதவர் தீபன். இவர் ஒரு அரசு அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார்.

(இந்த தீபன் யார் தெரியுமா.? முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன் என்ற பாடலுக்கு வருவாரே அவர் தான்…)

இவரது ஆபிஸ்க்கு அதிகாரியாக வருகிறார் மலையாளி பெண் சோனியாகிரி.

விதவையான சோனியாகிரிக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல ஈர்ப்பு ஏற்படுகிறது.

அடுத்த காதல்…: மதுக் கடையில் வேலை செய்யும் தாடிக்கு (வெற்றி) அங்கு வரும் சலீமாவின் (மும்தாஜ்) மீது (முகத்தை கூட பார்க்காமல்) காதல் ஏற்படுகிறது.

அதாவது நாயகிக்கு சரக்கு பாட்டில் கொடுக்கும்போதெல்லாம் அவளது கண்களால் மட்டுமே ஈர்க்கப்படுகிறார் வெற்றி. நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.

அதன் பின் நடக்கும் சம்பவமே இந்த காதல்..

பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிரேஸ் என்ற மாணவனுக்கு சக மாணவி ஸ்வேதா மீது காதல்.

ஒரு கட்டத்தில் இருவரையும் (ஸ்வேதாவின் அப்பா) பிரித்து டெல்லிக்கு அனுப்பி விடுகிறார்.

கார்த்திக் ரத்னமும் அயிராவும் பாம்பும் கீரியும் போல.. பின்னர் காதலராகி விடுகிறார்கள். இவர்கள் வேறு வேறு மதம் சார்ந்தவர்கள்.

இவர்களின் காதலுக்கு மதமே தடையாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தி தன் இசையை தென்றலாக கொடுத்துள்ளார்.
நான்கு காதல் கதையையும் ஒரே பாடலில் இணைத்தது ரசிக்க வைத்தது.

குணசேகரனின் ஒளிப்பதிவு காதலையும் காதல் கலைஞர்களையும் ரசிக்க வைத்திருக்கிறது.

நான்கு முனைக் காதலையும் நச் என கொடுத்து திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ஹேமாம்பர் ஜஸ்தி.

எவருடைய மனமும் நோகாமல் அழகான காதலர் தின விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக ‘கேர் ஆஃப் காதல்’… என்றென்றும் எங்கெங்கும் காதல்

Care of Kadhal review rating

More Articles
Follows