அம்பு நாடு ஒம்பது குப்பம்.. பட விமர்சனம்

அம்பு நாடு ஒம்பது குப்பம்.. பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.கே. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’.

கதைக்களம்..

‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்தில் மேல் சாதி கீழ் சாதி என்ற பிரிவினை உள்ளது.. ஒரு டீக்கடை என்றால் கூட இரண்டு பிரிவினருக்கும் வேறு வேறு டம்ளர்களில் டீ கொடுப்பதை கடைக்காரர் கூட வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஊர் கோயில் திருவிழா நடக்கிறது.. அந்த சமயத்தில் கீழ் சாதியை சேர்ந்தவர் பூசாரியின் தட்டில் கை வைத்து விபூதி எடுத்து விடுகிறார்.
?
ஒரு கீழ் சாதிக்காரன் எப்படி விபூதியில் கை வைக்கலாம் என்ற அளவில் பிரச்சினை வெடிக்கிறது?

அதன் பின்னர் என்ன நடந்தது? கோயில் திருவிழா நடைபெற்றதா? சாதி மோதல் முடிவுக்கு வந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்றும் இந்த டிக் டாக் உலகத்தில் சாதி மோதலும் தீண்டாமையும் எத்தனை வன்முறைகளை நிகழ்த்தும் என்பதை இந்த படம் சொல்கிறது.

தந்தையாக நடித்த சன்னாசி நடிப்பு உங்களை அறியாமல் கைதட்ட வைக்கும் கண்கலங்க வைக்கும்.. பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் பெரிய அளவில் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை

டெக்னீசியன்ஸ்…

மூலக்கதை – துரை குணா.

இயக்கம் – ஜி.ராஜாஜி,

ஒளிப்பதிவு – ஓ.மகேஷ்,

இசை – அந்தோணி தாசன் –

பின்னணி இசை – ஜேம்ஸ் வசந்தன்,

படத் தொகுப்பு – பன்னீர்செல்வம்,

நடன இயக்கம் – ராதிகா,

பாடகர்கள் – பிரதீப்குமார் அந்தோணிதாசன்..

இசை அந்தோணி தாசன்.. பின்னணி இசை ஜேம்ஸ்வசந்தன் ஆகிய பிரபலங்கள் இருந்தும் நமக்கு வருத்தமே..

ஆனால் ‘எங்க தலைமுறை இதுக்கு மேல போதும்.. உங்க தலைமுறை 100 காலம் வாழும்

கண் கெட்ட தூரம் உழைச்சோம்..
சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தோம்..

நான் படிக்காத ஏட்ட நீ படிக்கனும்..
நான் வாழாத வாழ்வை நீ ஜெயிக்கனும்..
.. என்ற பாடல் வரிகள் நம்மை ரசிக்க வைக்கிறது..

கிளைமாக்ஸ் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் திரைக்கதையை முடித்து இருப்பது ராஜாஜியின் ராஜதந்திரம் எனலாம்.

..அம்பு நாடு ஒம்பது குப்பம்.. ஜாதீ மோதல்

Ambu Naadu Ombathu Kuppam movie review and rating in tamil

சைத்ரா பட விமர்சனம்.; நியாயம் வேணாமா.?

சைத்ரா பட விமர்சனம்.; நியாயம் வேணாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெனித்குமார் இயக்கத்தில் மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’.

நவம்பர் 17- ம் தேதி ‘சைத்ரா’ வெளியான இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

கதைக்களம்…

பேய் படம் என்றாலே ஒரு பெரிய பங்களாவில் பேய் குடி இருக்கும்.. அதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும்.. இந்த டெம்ப்ளேட் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சினிமாவில் மாறாது போல.. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு சைத்ரா இந்த படம்.

டிடெக்டிவ் ஏஜென்ட் திவ்யா தன் அண்ணன் போலீஸ் உதவியுடன் தன் நண்பன் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் ஒரு சாமியாரிடம் உதவி கேட்டு வடக்கு வீதியில் உள்ள ஒரு பெரிய பங்களாவை தேடி கண்டுபிடிக்கிறார்.

அங்கு பூஜா மற்றும் அவரது கணவரும் நாயகி சைத்ரா (யாஷிகா ஆனந்த்) தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மூவரும் உள்ளே செல்ல அங்கே திவ்யா நண்பன் கொல்லப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கிறார்.

கொலை உடலைப் பார்த்த பூஜாவும் அவர் கணவரும் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். வேறு வழியின்றி நண்பனை திவ்யா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கே மருத்துவமனையில் டாக்டரின் டேபிளில் பூஜா மற்றும் அவர் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக வந்த செய்தியை நியூஸ் பேப்பரில் பார்க்கிறார் திவ்யா.

அப்படி என்றால் இதற்கு முன்பு நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்கஸ்…

மிகப்பெரிய விபத்திற்குப் பிறகு யாஷிகா ஆனந்த் இதில் நடித்திருக்கிறார்.. எந்த விதத்திலும் அவரது நடிப்பும் சரி அவரது கேரக்டரும் சரி ஒரு துளி கூட சுவாரசியம் இல்லை.

அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு ஓகே.. ஆனால் பின்னணி இசை வேஸரட்.. கதை திருநெல்வேலியில் நடப்பதால் மலையாளம் கலந்த தமிழை வசனங்களில் கேட்க முடிகிறது..

பயமுறுத்தும் பேய் படங்கள் காமெடி செய்யும் பேய் படங்கள் என பல வகை உண்டு. ஆனால் சைத்ரா எந்த வகை என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

ரேடியோக்களில் நாம் கேட்கும் ஒலிச்சித்திரம் போல.. “கத்தியை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னால்.. கத்தி எடுக்கப் போகிறேன்.. கத்தி எடுத்துக் கொண்டு வருகிறேன்.. இந்தா கத்தி என்பது போல பல வசனகாட்சிகள் உள்ளன.

இவை எல்லாம் நாம் காட்சியாக பார்க்கும்போது இத்தனை வசனங்கள் தேவையா ? படம் முழுக்க இதுபோன்ற நாடகத் தன்மையான காட்சிகள் உள்ளன. ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையே தருகின்றன

திரைக்கதை அமைத்து விதத்தில் இயக்குநர் ஜெனித் குமார் நம் பொறுமையை பேயளவுக்கு சோதித்து விட்டார்.

யாஷிகாவை விட டிடெக்டிவ் திவ்யா ஆக வரும் சக்தி அழகில் நம்மை ஈர்க்கிறார்.

குறைந்தபட்சமாக 10 கேரக்டர்களை வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர்.. அதற்கு நாம் பாராட்டு தெரிவிக்கலாம்..

Chaitra movie review and rating in tamil

ரெய்டு விமர்சனம்.. ரௌடியிச ரெய்டு

ரெய்டு விமர்சனம்.. ரௌடியிச ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவுடிகளை ரெய்டு அடித்து வேட்டையாடும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் இந்த படம்.

கதைக்களம்…

போலீஸ் பிரபாகரன் (விக்ரம் பிரபு) ஒரு நேர்மையான அதிகாரி. ரவுடிகளை எந்தவித தயக்கமும் இன்றி என்கவுண்டர் மற்றும் அரிவாளால் போட்டுத் தாக்கும் பலே அதிகாரி இவர். போலீஸ் என்றாலும் காசு கொடுத்துதான் டீ குடிப்பார் இவர்.

இவரின் காதலி டெட்டின்ஸ்ட் ஸ்ரீதிவ்யா. இவரின் தங்கை அனந்திகா.

ஒரு கட்டத்தில் தன் காதலியை எதிரிகள் போட்டுத் தள்ள அவரது தங்கையை காப்பாற்ற இவர் நடத்தும் ரெய்டு தான் மீதிக்கதை.

வேலு பிரபாகரன் மெயின் ரவுடி. இவருக்கு அடுத்து ரிஷி அவரது சகோ டேனியல் மற்றும் சௌந்தரராஜா மூவரும் கேங்ஸ்டர் கும்பல். இவர்களுடன் மோதும் போலீஸ் விக்ரம்பிரபு.

ஸ்ரீதிவ்யாவை ரவுடி கும்பல் கொல்ல என்ன காரணம்? இருவருக்கும் என்னதான் பிரச்சனை? என்பதை படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

மீசையில்லாத முகம்.. கம்பீரமான தேகம்.. உயரமான உருவம் கனிவான கண்கள் என பிரபாகரன் கேரக்டரில் விக்ரம் பிரபு.

காதலியை கண்டால் கூட கடமையே தன் லட்சியம் என இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒரு சென்டிமீட்டர் கூட சிரிக்க கூடாது என பிடிவாதமாக பிரபாகரன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஸ்ரீ திவ்யா. இவரின் காட்சிகளை எடிட்டர் வெட்டி விட்டாரோ? என நாம் தியேட்டரை விட்டு எழுந்திருக்கும் போது திடீரென ஸ்ரீதிவ்யா என்ட்ரி கொடுக்கிறார். அரை மணி நேரம் என்றாலும் அவருக்கும் இரண்டு டூயட் என ரசிக்க வைத்திருக்கிறார். அவரைக் கண்டதும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டலை கேட்க முடிந்தது. (ரசிகர்கள் பாவம்.. அடிக்கடி தமிழில் நடிங்க அம்மணி)

நாயகி தங்கையாக தமிழில் அறிமுகம் ஆகிறார் அனந்திகா. இனி இவருக்கு நிறைய படங்களில் ஹீரோயின் வேடம் கிடைக்கும். அந்த அளவிற்கு துறுதுறு பெண்ணாக அழகால் இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சௌந்தரராஜா இதில் முற்றிலும் மாறுபட்டு நீண்ட தாடி வளர்த்த ரவுடியாக மிரட்டி இருக்கிறார். அதிலும் கவிதை எழுதும் ரவுடியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.

அண்ணன் தம்பி ரவுடியாக ரிஷி மற்றும் டேனியல். இருவரும் இதுவரை ஏற்காத வேடம் என்பதால் மெனக்கெட்டு வில்லத்தனம் காட்டுயிருக்கின்றனர்.

வாய்ஸ் ஓவர் கொடுத்து பாசம் மிக்க மாமாவாக நடிகர் செல்வா நடித்திருக்கிறார். இவருகளுடன் வேலு பிரபாகரன் & ஜீவா ரவி உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்கள்ஸ்…

இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : கதிரவன்
படத்தொகுப்பு : மணிமாறன்
காஸ்டியூம் டிசைன் : மாலினி பிரியா

கதிரவனின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது..

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையில் ரசிக்க வைத்தாலும் நிறைய இடங்களில் காட்டுகத்து எரிச்சல் தான்..

எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரெய்டு படத்தை தயாரித்துள்ளது. ‘கொம்பன்’ பட முத்தையாவின் தங்கை மகன் கார்த்தி என்பவர் ரெய்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

முத்தையா படங்களில் இருக்கும் உணர்வு பூர்வமான எமோஷன் காட்சிகள் இதில் இல்லை என்பது வருத்தமே.. வெறும் ஆக்சனை மட்டும் நம்பி களமிறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி.
வசனங்களும் கவரவில்லை.

இந்த படத்தை என்ன நினைத்து எடிட் செய்தாரோ தெரியவில்லை.. ஒவ்வொரு வில்லனுக்கும் ஹீரோ நாயகி ஆகியோருக்கும் தனித்தனியாக ஃப்ளாஷ் பேக்.. ஒன்றன்பின் ஒன்றாக வருவதால் திரைக்கதையில் குழப்பம் மிஞ்சுகிறது.

ஒரு காட்சியில் விக்ரம் பிரபு கையில் கன் இருக்கும்போது எதிரே நிற்கும் வில்லன் என் கையில் அருவா இருக்குது. இப்படி யாராவது சொல்வார்களா.? துப்பாக்கியால் எங்கிருந்தாலும் சுட்டு விட முடியும்.. ஆனால் அருவா அருகே வந்தால் மட்டுமே வெட்ட முடியும்.. இதை கூடவா வசனகர்த்த கவனிக்கவில்லை..

ஆக.. ரௌடியிச ரெய்டு

ரெய்டு

raid movie review and rating in tamil

கிடா விமர்சனம்.. மறிக்காத மனிதநேயம்

கிடா விமர்சனம்.. மறிக்காத மனிதநேயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் கிடா போன்ற சில படங்கள் பிரம்மாண்ட கதையை நம்பி களமிறங்கும் என்பதற்கு இது சான்று.

தீபாவளி பண்டிகைக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் மத்தியில் ரூ.500-க்கி வழியில்லாத சாமானியனின் கதை தான் இது.

பூ ராமு – பாண்டியம்மாள் இவர்கள் பெற்றோரை இழந்த தங்கள் பேரனை வளர்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் விளம்பரத்தில் பார்த்த ஒரு விலை உயர்ந்த ஆடையை வாங்கி கேட்கிறான் பேரன். அதை வாங்க இவர் போராடும் கதை ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் ஆட்டுக்கறி வெட்டும் தொழிலை செய்பவர் காளி வெங்கட். ஒரு கட்டத்தில் அவரது முதலாளியிடம் பிரச்சனை ஏற்படவே தீபாவளி என்று தானே தனியாக ஒரு கடையை திறப்பேன் என சவால் விடுகிறார்.

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட். அது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்..

நடிகர் பூ ராமு தற்போது மறைந்து விட்டாலும் அவரது இந்த கேரக்டர் என்றும் மனதில் நிற்கும். கிடா மூலம் தன் கம்பீர நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பேரனுக்காக அவர் செய்யும் ஒவ்வொன்றும் இப்படி ஒரு தாத்தா நமக்கு இல்லையே என்று குழந்தைகளை ஏங்க வைக்கும்.

அநீதி படத்தில் தங்க புள்ளையாக வந்து தங்கமாக ஜொலித்த காளி வெங்கட் இதில் கறி வெட்டும் கேரக்டரில் நம் உள்ளங்களை துண்டாக்கி இருக்கிறார். எங்குமே மிக இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார்.

அதுபோல பூராமின் மனைவியாக பாண்டியம்மா.. பேரனாக மாஸ்டர் தீபன் ஆகியோரும் நாங்களும் நடிப்பில் குறைந்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ்டர் தீபன் காட்டும் திருட்டு முழி ரியாக்ஷன் சூப்பர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் காளி வெங்கட் பணத்தை கொடுக்கும் காட்சி மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதற்கான சாட்சி.

காளி வெங்கட்டின், மகன், மகனின் காதலி, காளி வெங்கட்டின் நண்பர் ஆகியோரும் சிறப்பு.

டீக்கடைக்காரன் பாண்டியாக கருப்பு கலகலப்பு. காளி வெங்கட் மனைவி லோகியும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவர்களுடன் திருடர்களாக ஆனந்த், ஜெய், தேவா மற்றும் சங்கிலி நால்வரும் கலகலப்புக்கும் கதைக்கும் கை கொடுத்துள்ளனர்.

ஒரு சினிமா என்றால் காதல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா.?
காதலர்கள் பாண்டி & ஜோதி இருவரும் கச்சிதம்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் எம்.ஜெயப்பிரகாஷ் நம்மை மதுரைக்கு அழைத்துச் சென்றது போல ஒரு உணர்வு. அந்த மக்கள் வாழ்வியலை அழகாக படம் பிடித்துள்ளார்.

தீசனின் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது எனலாம். எடிட்டர் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் சிறப்பு.

இயக்குனர் ரா.வெங்கட்டிற்கு இது முதல்படம் என்று அவரே சொன்னால் கூட நம்மால் நம்ப முடியாது. அப்படி ஒரு நேர்த்தியான படைப்பை கொடுத்திருக்கிறார்.

என்னதான் நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று ஆயிரம் பேர் சொன்னாலும் ஏதோ ஒரு நல்லவர், ஏதோ ஒரு மனிதநேயமிக்கவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ‘கிடா’ போன்ற படங்களே உதாரணம்.

Kida movie review and rating in tamil

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.; ஜிகர்தண்டா என்றாலே ருசிதானே

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.; ஜிகர்தண்டா என்றாலே ருசிதானே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் & எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

இதில் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஃபைவ் ஸ்டார் கிரியேஷனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தன் ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

1973 – 1975 ஆகிய காலகட்டங்களில் கதை தொடங்கி நகர்கிறது.. தன் தந்தையின் ஆசைப்படி போலீசாக வேண்டும் என நினைக்கிறார் எஸ் ஜே சூர்யா. ஒரு கல்லூரி விழாவில் செய்யாத குற்றத்திற்காக 4 பேரை கொன்றதாக கைது செய்யப்படுகிறார் எஸ் ஜே சூர்யா.

இவரது போலீஸ் ஆசை குறித்து அறியும் உயரதிகாரி மதுரையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் (ஜிகர்தண்டா பேமஸ் லாரன்ஸ்) ஒருவனை நீ கொன்று விட்டால் அடுத்த நாளே உனக்கு போலீஸ் போஸ்டிங் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கிறார்.

பயந்த சுபாவம் கொண்ட எஸ் ஜே சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க அந்தக் கட்டத்தில் தான் லாரன்ஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர் விடுகிறது. நல்ல கதை வைத்துள்ள இயக்குனர் தன்னை அணுகலாம் என லாரன்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்.

எனவே தன்னை ஒரு சினிமா இயக்குனர் என கூறிக்கொண்டு தன் நண்பன் சத்யனுடன் மதுரைக்கு செல்கிறார் எஸ் ஜே சூர்யா.

அதன் பிறகு என்ன நடந்தது.? ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் சினிமாவில் நடிகர் ஆனாரா.? வெள்ளை ஹீரோக்கள் இருந்த காலத்தில் கருப்பு ஹீரோவுக்கு அறிமுகம் கிடைத்ததா? எஸ் ஜே சூர்யா யார் என்று தெரிந்து கொண்டாரா லாரன்ஸ்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜிகர்தண்டா2 படத்தில் ஹீரோ யார்? வில்லன் யார்? என்று தெரியாத அளவிற்கு லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ஒரு காட்சியில் இவர் ஸ்கோர் செய்தால் அடுத்த காட்சியில் அவர் ஸ்கோர் செய்கிறார்.

காந்த கண்கள்.. சுருளான தலைமுடி.. கறுப்பு தோல்.. வாட்டசாட்டமான தேகம் என தோற்றத்திலும் வெளுத்துக்கட்டி இருக்கிறார் லாரன்ஸ். சந்திரமுகி 2 படத்தில் கூட இப்படி ஒரு வேட்டையனை நாம் பார்க்கவில்லையே.. என்பதால் நம்மிடையே கூடுதல் கவனத்தை ஈர்க்கிறார்.. தன் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.

முதல் பாதி சினிமா ஷூட்டிங் என்று காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சேட்டானியுடன் மோதல் மலைவாழ் மக்களுக்கான போராட்டம் என கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம்.

16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் 1970களில் நாம் பார்த்த ஹீரோக்களை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.. MGR காலத்து மீசை.. சோடாபுட்டி கண்ணாடி.. தொடை நடுங்கி.. பயத்தை வெளியே காட்டாத கம்பீரம் என கெத்து காட்டி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

லாரன்ஸின் மனைவியாக நிமிஷா சஜயன். இவர் சமீபத்தில் வெளியான சித்தா என்ற படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்து நம் கவனத்தை ககவர்ந்திருந்தார். இந்த படத்தில் பழங்குடியின பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் பேசும் பேச்சு கூட நம்மை ரசிக்க வைக்கிறது.

கர்ப்பிணியாக இருக்கும்போது முகபாவனை தோற்றம் என மாற்றிய நிமிஷா பிரசவித்த பின் முகப்பொலிவை கூட அழகாக காட்டியிருக்கிறார்.

இயக்குனர் பவா செல்லத்துரையின் அசிஸ்டன்ட் சத்யன்.. ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு அசிஸ்டெண்டாக மாறி அவர் செய்யும் காமெடி வேற லெவல்.. “உன்னால் லாரன்ஸை கொல்ல முடியாது.. 25 வருடங்கள் நீ சூட்டிங் எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அவர் இறந்து விடுவார் என்று கூறும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது”

இவர்களுடன் இளவரசு, போலீஸ் அதிகாரி, சேட்டானி, தமிழக பெண் முதல்வர் உள்ளிட்ட பலரும் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர். அதிலும் அரசியல்வாதிகள் போடும் ஆட்டம் அப்போதே இருந்திருக்கிறது என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.

1975-ல் தமிழகத்திற்கு ஆண் முதல்வர் தான் இருந்தார்.. ஆனால் பெண் முதல்வரை காட்டி இருப்பது ஏனோ.?

டெக்னீசியன்கள்…

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆல்ரெடி சூப்பர் ஹிட்.. ‘மாமதுரை வா மதனி..’ என்ற பாடல் ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கிறது. மேலும் மற்ற பாடல்களும் 1970 காலகட்டத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

சந்தோஷ நாராயணனின் பின்னணி இசையும் நம்மை டைம் ட்ராவல் போல 1970களுக்கு கொண்டு செல்கிறது

இன்றைய கால பாடங்களை படம்பிடிப்பது எளிது.. ஆனால் 1970 காலகட்டங்களை கண்முன் நிறுத்துவது சவாலான விஷயம். அதை நிறைவாக கொடுத்திருக்கிறார் கலை இயக்குனர்.

எஸ் ஜே சூர்யா வின் கெட்டப் முதல் தியேட்டர்.. தியேட்டரில் ஸ்கிரீன்.. கார் என அனைத்தையும் அருமையாக கொடுத்திருக்கிறார்.

பேட்டை படத்திற்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை கார்த்திக் சுப்புராஜ்.. ஜகமே தந்திரம் படம் அவரை கைவிட்ட நிலையில் தன்னுடைய ராசியான ஜிகர்தண்டா படத்தின் மூலம் மீண்டும் அடுத்த வெற்றியை கொடுத்திருக்கிறார்.

கேங்ஸ்டர் மற்றும் காடுவளம் அதில் அரசியல் என அனைத்தையும் கலந்து தீபாவளிக்கு ஒரு பக்கா ட்ரீட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அதிலும் யானையுடன் சேட்டானி மோதும் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கைத்தட்ட (மிரள) வைக்கும்.

ஒரு மூன்று மணி நேரம் திரைப்படத்தால் 30 வருட அரசியல்வாதியின் வாழ்க்கையை காலி செய்ய முடியும் என்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று. அதிலும் ஹாலிவுட் படங்களின் காட்சிகளை இணைத்து வித்தியாசமான விருந்தளித்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

Jigarthanda Double X movie review and rating in tamil

ஜப்பான் விமர்சனம்.; கார்த்தியின் 25வது படம் எப்படி.?

ஜப்பான் விமர்சனம்.; கார்த்தியின் 25வது படம் எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’.

இதில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எஸ்.ஆர்.பிரபுவின்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரித்துள்ளது.

கதைக்களம்.?

அரசியல்வாதி கே எஸ் ரவிக்குமாருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடிக்கிறார் ஜப்பான் (கார்த்தி). இதனால் அரசியல்வாதியின் கட்டளை பேரில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

தென்னிந்திய முழுவதும் தேடப்படும் மிகப்பெரிய கொள்ளைக்காரன் ஜப்பான் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்து படங்களையும் வீடியோக்களையும் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் ஜப்பானுடன் தொடர்பு இருப்பதாக ஒரு நபரை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.. அவரோ மனைவி குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர்.. அந்த அப்பாவியின் நிலை என்ன?

இந்த நிலையில் போலீசில் சிக்கும் ஜப்பான் மீது செய்யாத குற்றத்திற்காக மற்றொரு வழக்கும் போடப்படுகிறது. அப்படி என்றால் அந்த குற்றத்தை செய்தவர் யார்? ஜப்பானுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

தென்இந்தியா முழுவதும் தேடப்படும் குற்றவாளி ஜப்பான் உண்மையில் யார்? அவனது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சிறுத்தை படத்திற்குப் பிறகு பக்கா திருடனாக ஜப்பானாக ஜொலிக்கிறார் கார்த்தி.. எந்த இடத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாத வண்ணம் குரலை மாற்றி வித்தியாசமாக முயற்சித்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் மட்டும் சத்தமாக பேசும் காட்சிகளில் குரல் மாற்றம் தெரியல.

அதேசமயம் தாய் பாசத்திற்காக ஏங்கும் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்படும் அந்த மீன் கதை உயிரோட்டமாக இருந்தாலும் படத்தின் நீளத்திற்காக குறைத்து இருக்கலாம்.

கார்த்தியின் 25வது படத்தில் தான் நாயகி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அணு இம்மானுவேல் மற்றபடி அவரது காட்சிகள் அணு அளவே உள்ளது.

அரசியல்வாதி கே.எஸ்.ரவிக்குமார்.. போலீஸ் அதிகாரி.. சுனில் & விஜய்மில்டன் ஆகியோர் தங்களது பங்களிப்பில் குறை வைக்கவில்லை.. எழுத்தாளர் பவா செல்லத்துரை-யின் கேரக்டரில் வலுவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாகை சந்திரசேகர் மனதில் நிற்கும் படியான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.

கார்த்தி கும்பலில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் கேரக்டர் திடீரென மாறுவது எதிர்பாராத ஒன்று. இவர்களின் மோதல் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நுங்கு பாம் வித்தியாசமான கற்பனை.

டெக்னீசியன்கள்…

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசைக்கு கொடுத்த ஆர்வத்தை பாடல்களிலும் கொடுத்திருக்கலாம். பாடல்கள் ஈர்க்கவில்லை என்பது வருத்தம்.

ஒளிப்பதிவாளர் தன் பங்களிப்பில் நேர்த்தி. ஆனால் எடிட்டர் பொறுமையை சோதித்து விட்டார்.. மீன் கதை.. ஹீரோயின் ஷூட்டிங் காட்சிகள் உள்ளிட்டவைகள் நீளம்.

மிகப்பெரிய கொள்ளைக்காரன் கார்த்தி பெரிய அளவில் யாரையும் கூட வைத்துக் கொள்ளாதது நம்பும் படியாக இல்லை. . போலீஸால் தேடப்படும் ஒரு திருடன் சினிமா எடுப்பது வீடியோ பதிவிடுவது எல்லாம் நம்ப முடியாத லாஜிக் ஓட்டை.

லாஜிக்கை எல்லாம் மறந்து கொள்ளை மேஜிக்கை காண நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம்.. ஜோக்கர் குக்கூ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் எடுத்த ராஜூமுருகன் இதில் தன் பாதையை மாற்றி கமர்சியலுக்கு தாவியுள்ளார்.

அதேசமயம் அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் தன்னுடைய நையாண்டி மூலம் கலாய்த்திருப்பது சிறப்பு.

ஒரு மெசேஜ் அனுப்பினால் அதை ஒரு நிமிடத்தில் ஆயிரம் பேருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.. வதந்தியை நம்பும் வாட்ஸ்அப் மக்கள் கூட்டம் என்றும் ஜனங்களையும் கலாய்த்து இருக்கிறார்.

தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா போன்ற எந்த மாநிலம் என்றாலும் காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் இருப்பதால்தான் திருடர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுற்றுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இயக்குனர் ராஜூமுருகன்.

ஜப்பான்

japan movie review and rating in tamil

More Articles
Follows