தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கேஜி, அதுல்யா, சிவ்ராஜ், அனிருத் மற்றும் பலர்.
இயக்கம் : சிவராஜ்
இசை : பவன்
ஒளிப்பதிவாளர் : ராஜ்மோகன்
பி.ஆர்.ஓ.: கே.என். குமார்
தயாரிப்பாளர் : மாண்டேஜ் மீடியா (சிவராஜ்)
கதைக்களம்…
ஹீரோ கேஜி மற்றும் நாயகி அதுல்யா இருவரும் காலேஜ்மேட்ஸ். இருவரும் கோவையை சேர்ந்தவர்கள்.
நண்பர்களாக இருக்கும் இவர்கள் படிப்புக்கு பிறகு அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது.
எனவே காதலும் உருவாகிறது. இதில் அதுல்யா ஒரு பத்திரிகையில் பணிபுரிகிறார்.
அங்குள்ள அனிருத் என்பவரிடம் (படத்தில் கார்த்திக்) இவர் பணி காரணமாக பழக, அது நாயகனுக்கு கோபத்தை உண்டாக்குகிறது.
அதனால் இவர்களின் காதல் இடையே மோதலும் உருவாகிறது. இதனையடுத்து அவர்கள் இணைந்தார்களா? காதல் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.
கதாபாத்திரங்கள்..
நாம் மேலே கூறிய கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த கேரக்டர்களும் என்றே சொல்லாம்.
இடையில் நண்பர்கள் வந்து செல்கிறார்கள்.
ஒரு சராசரி கோவை பையனாக வந்து செல்கிறார் கே.ஜி. (படத்தில் சிவா) பெண்களின் மனதை புரிந்துக் கொள்ளாமல் தவிக்கும் காட்சிகளில் ரசிக்கலாம்.
அதுல்யாவுக்கு இது முதல் படம் என்றாலும் கண்களால் நிறையவே ஸ்கோர் செய்கிறார். கண்களும் அவரது புருவங்களும் நிறைய பேசுகின்றன.
ஹீரோவின் நண்பர்கள் மற்றும் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் ஆகியோருக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தின் மிகப்பெரிய பலமே பவனின் பாடல்கள் மற்றும் சிவராஜின் ஒளிப்பதிவுதான்.
காதலே உனக்கு என்ன பாவம் செய்தேனோ என்று தொடங்கி எத்தனை நாட்கள் என்ற பாடல் நிச்சயம் எத்தனை நாட்கள் ஆனாலும் மனதை விட்டு போகாது.
என்னை கொஞ்சமாய் கொன்றாயே பாடலும் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளரின் காதல் காட்சிகள் கண்களுக்கு விருந்து.
இன்றைய காதலர்களின் சின்ன சின்ன சண்டைகளை கொஞ்சம் நீளமாக சொல்லிவிட்டார்.
ஒரு குறும்படத்திற்கான கதையை நீண்ட நேரம் சொல்லியிருப்பதுதான் பலவீனம்.
படத்தில் எந்தவிதமான ட்விஸ்ட் இல்லாமல் போனது மகா வருத்தம்.
காதல் கண் கட்டுதே… காதலர்களை கவரும்