தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் ‘காரி’.
சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேமன்த் இயக்கியுள்ளார்.
ஒன்லைன்…
ஒரு விலங்கு என்றாலும் அதுவும் ஒரு உயிரினம் தான் என நினைக்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு உடன் கலந்து விருந்து படைத்துள்ளார் இயக்குனர் ஹேமந்த்.
இவரது இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படமே ‘காரி’.
கதைக்களம்….
வறட்சி பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
2 கிராமங்களுக்கிடையே ஒரு பொது பிரச்சினை. அங்குள்ள கோயிலை யார் நிர்வகிப்பது? என்ற கருத்து வேறுபாடு.
எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறும் அணிக்கே கோயில் நிர்வாகம் என முடிவெடுக்கின்றனர்.
அதில் 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளில் 10 மாடுகளை பிடித்தாலே போதுமானது.
இதில் மாடு பிடிக்க வேண்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடுகளம் நரேன் & அவர் மகன் சசிகுமார் சென்னையில் இருக்கின்றனர். அவர்களை அழைத்து வர நாகிநீடு சென்னைக்கு செல்கிறார்.
ஆனால் சசிகுமார் வர மறுக்கிறார். தன் தந்தையை கிராமத்தினர் சந்திப்பதை கூட தடுக்கிறார்.
இதுவரை புறமிருக்க.. மற்றொரு புறம்..
ஜல்லிக்கட்டு காளைகளை விலைக்கு வாங்கி அவற்றின் விந்தணுக்களை சேகரித்து அயல்நாடுகளுக்கு விற்கிறார் BEEF பிரியர் ஜே.டி.சக்கரவர்த்தி.
நாயகி பார்வதி அருண் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை வில்லன் ஜே.டி.சக்ரவர்த்தியிடம் வந்து சேர்கிறது.
இந்த இரு கதைகளும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைகின்றன? சசிகுமார் என்ன செய்தார்? பார்வதி என்ன செய்தார்? வில்லன் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
கிராமத்திற்கென்றே கிலோ கணக்கில் தன்னை வலுப்படுத்தி வைத்திருப்பவர் சசிகுமார். இந்த கேரக்டரிலும் தன்னை சபாஷ் போட வைத்துள்ளார்.
சசிக்கு டான்ஸ் கொஞ்சம் கூட வரவில்லை. ஒரு பாடல் காட்சியில் மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஸ்டெப்பை காட்டுவது போர் அடிக்கிறது.
ஒரு கட்டத்தில் சசி கிராமத்திற்கு வர முடிவு எடுக்கிறார். ஆனால் அந்த முடிவு திணிக்கப்பட்ட காட்சியாக தெரிகிறது.
நாயகி பார்வதி அருணை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். காளை ஒரு உசுருய்யா.. அந்த உசுரு என்னை தேடிகிட்டு இருக்கும் என கதறி அழும்போது நீங்கள் பீஃப் சாப்பிடுபவராக இருந்தாலுமே கலங்கி விடுவீர்கள். (இனிமே நிறுத்தவும் வாய்ப்புண்டு).
எல்லாம் ஜீவராசிகளை நேசிக்கும் ஒரு உயர்ந்த மனிதராக ஆடுகளம் நரேன் வாழ்ந்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் கேரக்டர் கச்சிதம்.
நாகிநீடு கிராமத்து பெரிய மனிதராக நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார். ஒருவேளை ராதாவின் நடித்திருந்தால் இன்னும் சிறப்பான நடிப்பை கூட கொடுத்து இருப்பார். அவரது குரல் இவருக்கு செட்டாகவில்லை.
வில்லன் ஜடி சக்கரவர்த்தி.. ராம்குமார்.. அம்மு அபிராமி இவர்களது கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.
டெக்னீஷியன்கள்…
சென்னை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் படத்தை படமாக்கியுள்ளனர்.
‘சாஞ்சிக்கவா.. சாஞ்சிக்கவா’ பாடல் காதலர்களுக்கு பிடித்த பாடலாக அமையும். கொப்பன் மவனே.. கொப்பன் மவனே.. என்ற பாடல் இனி தந்தையர் தினத்தில் whatsapp ஸ்டேட்டஸ்களில் பார்க்க கூடும்.
ஜல்லிக்கட்டு தீம் மியூசிக் ஆர்ப்பரிக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.
படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் குதிரை ரேஸ்.. சிறுமி பாலியல் தொல்லை போன்ற காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம்.. அதனால் எந்த பாதிப்பும் இல்லை..
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு நேர்த்தி. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் மிரள வைக்கிறது. அதை படமாக்கிய விதமும் நம்மை வாடி வாசலுக்கே கொண்டு செல்கிறது.
புது இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல 18 ஜல்லிக்கட்டு காளைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். காரசாரமாக ஒரு கிராமத்து மசாலாவை படைத்துள்ளார்.
ஆக இந்த காரி… கட்டுங்கடங்காத காளை
Kaari movie review and rating in tamil