சர்தார் விமர்சனம்.; WATER MAFIA

சர்தார் விமர்சனம்.; WATER MAFIA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும் சைபர் கிரைம் பற்றி பேசிய இயக்குனர் 2வது படத்தில் கல்விக்கான அவசியத்தை பேசி இருந்தார்.

இந்த ‘சர்தார்’ படத்தில் தண்ணீருக்கான அவசியத்தை பேசி இருக்கிறார்.

இந்திய உளவுத் துறையின் உளவாளியாக நடித்திருக்கிறார் கார்த்தி.

கதைப்படி…

ONE INDIA.. ONE PIPELINE.. ‘ஒரே நாடு, ஒரே குழாய்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது ஒரு தனியார் நிறுவனம்..

இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் முழுக்கத் தனியார்மயமானால்… அதற்கும் விலை வைக்கப்பட்டால் என்னென்ன பிரச்சினைகளை இந்த நாடு சந்திக்கும்.? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

கார்த்தி இதற்கு முன் சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

இந்த படத்தில் வயதானவர் கெட்டப் இளமையான கெட்டப்.. ஆனால் வயதான கெட்டப்பிலும் இளமையாகவே இருக்கிறார்.

முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் இளமையான கார்த்திக் சண்டை போடுவது போலவே உள்ளது. உடல் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன். ஆனால் மூவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

முனீஸ்காந்த் நடிப்பில் கவர்கிறார். வில்லன் சங்கி பாண்டே ஸ்மார்ட் வில்லன்.

குட்டி பையன் ரித்விக். நல்ல அறிமுகம்.. ஆனால் ப்ளூ பிரிண்ட் பாத்தேன்.. என இவர் சொல்ல சொல்ல கார்த்திக்கு சொல்வது எல்லாம் ரொம்ப ஓவர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவில் குறையில்லை.. கலர்ப்புல்லாகவே இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் பின்னணி இசை தெறிக்க விடுகிறது.. பாடல்கள் சுமார் ரகமே..

முக்கியமாக படத்தின் வசனங்களை ஓவர்டேக் செய்கிறது பின்னணி இசை. இதனால் பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

நாம் தற்போது குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம்.. வருடங்கள் செல்ல செல்ல துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் கிடைக்கும் நீரும் முழுக்க முழுக்க வியாபாரம் ஆனால் என்னென்ன பிரச்சனைகளை நாம் சந்திப்போம் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் தண்ணீரால் எத்தனை நாடுகளில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? என்பதையும் சொல்லி இருக்கிறார்.

ஆனால் தண்ணீர் வியாபாரத்தை இன்னும் விரிவாக சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் சொல்லி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான சினிமாத்தனம் இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

ஆக சர்தார்… Water Mafia

 

பிரின்ஸ் விமர்சனம்.; சிவகார்த்திகேயன் சிரிக்க வைத்தாரா.?

பிரின்ஸ் விமர்சனம்.; சிவகார்த்திகேயன் சிரிக்க வைத்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு இந்திய பையன்.. அதுவும் தமிழ் பையன் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறார்.. இவர்களின் காதலும் இந்த காதலுக்கும் கிடைத்த எதிர்ப்புமே இந்த படம்..

கதைக்களம்…

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் சில பிரெஞ்சுகாரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் தங்கள் நாட்டுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர்.

அப்படி ஒரு குடும்பத்து வழியில் வந்தவர் நாயகி ஜெஸிகா (மரியா). இவர் ஒரு பள்ளியில் பணிக்கு சேர்கிறார்.

பாண்டிச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் மரியா அழகில் மயங்கி் காதலிக்க தொடங்குகிறார்.

முதலில் காதலுக்கு ஓகே சொல்லும் அப்பா சத்யராஜ்.. பின்னர் அந்த பெண் பிரிட்டிஷ்காரி என்பதால் மறுப்பு தெரிவிக்கிறார்.

இறுதியில், இந்திய வாலிபனும் இங்கிலாந்து பெண்ணும் காதலில் இணைந்தார்களா? என்பதே பிரின்ஸ் கதை.

கேரக்டர்கள்…

காமெடி என வந்து விட்டால் சிவகார்த்திகேயனை கேட்கவே வேண்டாம். தன்னால் முடிந்தவரை எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.

ஆடல் பாடல் என சிவகார்த்திகேயனின் வழக்கமான ஜாலியான கேரக்டரை பார்க்கலாம். ஆனால் சிவகார்த்திகேயன் முகம் டல்லாக தோன்றுகிறது.

நாயகி மறியா அழகாக சிரிக்கிறார். நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார்.

சத்யராஜ் காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல எவரும் எதிர்பாராத வகையில் சூரி ஒரு காட்சியில் வந்து அசத்துகிறார்.

ஆனந்தராஜ் வரும் காட்சி தியேட்டரில் அலப்பறை தான். பிரேம்ஜி காட்சி ஓகே.

டெக்னீஷியன்கள்…

தமன் இசையில் உருவான பாடல்கள் இளம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசை பரவாயில்லை.

மனோஜ் பரமாம்ஸாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நடன இயக்குனர்களுக்கு எக்ஸ்ட்ரா பாராட்டை தெரிவிக்கலாம்.

பிளஸ் பாயிண்ட் படத்தின் எடிட்டிங் தான். என்னதான் ஜாலியாக போனாலும் படத்தின் கதை மிகவும் எளிமையானது.

நீளம் அதிகமாக இருந்தால் பெரும் குறையாக இருந்திருக்கும். அதனை கரெக்டாக எடிட்டிங் செய்துள்ளார் எடிட்டர் ப்ரவீன் கே. எல்.

முக்கியமாக பள்ளிக்கூட காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

நிச்சயமாக 10 காட்சிகளில் நீங்கள் வாய்விட்டு சிரித்து மகிழ்வீர்கள்.

ஒரு சிம்பிளான கதையை ஜாலியாக சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குனர் அனுதீப்.

சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகாத நகைச்சுவை. காரணம் நகைச்சுவையை திணித்துள்ளார்.

ஆக இந்த தீபாவளிக்கு.. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்று பிரின்ஸ் படத்தை பார்க்கலாம்.

 

ஷூ பட விமர்சனம்.; டைம் மிஷின் எப்படி லக்கி?

ஷூ பட விமர்சனம்.; டைம் மிஷின் எப்படி லக்கி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை விற்கும் கும்பலிடம் இருந்து ஒரு ஷூ மூலம் சிறுமிகளை ஹீரோ காப்பாற்றுகிறார்.

கதைக்களம்…

இரண்டு டைம் டிராவல் மெஷின்களை கண்டுபிடிக்கிறார் திலீபன். அவை இரண்டையும் தன் இரண்டு ஷூக்களில் வைத்துக் கொள்கிறார்.

ஒரு ஷூ ஆனது பத்து நிமிடத்திற்கு முன்பு அழைத்துச் செல்லக்கூடியது. மற்ற ஷூவானது பத்து நாட்களுக்கு முன்பு அழைத்துச் செல்லக்கூடியது.

ஒரு கட்டத்தில் இவர் போலீஸில் சிக்கிக் கொள்ளவே தப்பிக்க ஷூவை ஒரு புதருக்குள் மறைத்து வைக்கிறார்.

இந்த கதை ஒருபுறம் இருக்க மற்றொரு புறத்தில்… தனக்கு ராசியான கிழிந்த ஷூவை ப்ரியா என்ற சிறுமியிடம் தைக்க சொல்லி கொடுக்கிறார் யோகி பாபு.

ஆனால் அந்த சிறுமியின் குடிகார தந்தையோ அந்த ஷூவை தொலைத்து விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் புதருக்குள் கிடந்த ஷூவை யோகி பாபுவக்கு கொடுக்கிறார் பிரியா.

இதன் மூலம் யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டங்கள் அடிக்கிறது. எனவே தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த பிரியாவுக்கு உதவ நினைக்கிறார் யோகி பாபு.

இதனிடையில் சிறுமிகளை கடத்தும் பாலியல் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார் பிரியா.

அதன் பிறகு என்ன ஆனது? திலீபனுக்கு ஷூ கிடைத்ததா? யோகி பாபுவுக்கு அந்த ஷூவின் மகிமை தெரிந்ததா? பிரியா மீட்கப்பட்டாளா? என்பதை படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

சிறிமி ப்ரியா அவ்வளவு அழகான நடிப்பை கொடுத்துள்ளார். யோகி பாபுவிடம் செல்லச் சண்டை போடுவதாகட்டும்… தன் தாயை இழந்து அவர் உருகுவதாகட்டும்.. எல்லா சிறுமிகளையும் மீட்க போராடும் முயற்சியாகட்டும் அனைத்தும் சிறப்பு.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அழகு அம்மாவாக உருகும் சிந்து நடிப்பையும் பாராட்டலாம்.

குடிகார தந்தையாக நடித்தவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.

யோகி பாபு கிங்ஸ்லி KPY பாலா மூவரும் நடித்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது சில காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர்.

திலீபன் ஷூவை எப்படி உருவாக்கினார் என்பதெல்லாம் படத்தில் காட்சிகளாக காட்டவில்லை?!

இந்த டைம் ட்ராவல் ஷூ யோகி பாபு கையில் கிடைத்தவுடன் அவருக்கு எப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அதுபோல திலீபன் ஷூவை புதருக்குள் மறைத்து வைக்கிறார். அதற்கு பதிலாக வெறுமனே ஷூ-வை அழுத்தினால் டைம் டிராவல் செய்து போலீஸிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இது போன்ற லாஜிக்கே இல்லாத காட்சிகளை படத்தில் வைத்துள்ளார் கல்யாண்.

கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென ஷூ மூலம் டைம் ட்ராவல் செய்து அந்த சிறுமிகளை காப்பாற்றுகிறார் திலீபன்.

அப்போதுதான் அந்த ஷூ என்ன மிஷன் என்று நமக்கு தெரிகிறது. இது படத்தின் பெயர் குறையாக உள்ளது. மற்றபடி டைம் ட்ராவல் மெஷின் படத்தில் காட்சியில் கூட காட்டவில்லை. மறைத்து வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சிஜி கிராபிக்ஸில் மட்டும் லைட்டிங் வருகிறது.

10 வயது கூட நிரம்பாத சிறுமிகளுடன் வயதானவர்கள் உறவு வைத்துக் கொள்ள தயாராகும் மாதிரியான காட்சிகளை வைத்திருப்பதை காண முடியவில்லை.

குழந்தைகளுக்காக இந்த படத்தை பார்க்கலாம். மற்றபடி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஆக இந்த ஷூ… பெரிதாக கவரவில்லை.

Shoe movie review rating

சஞ்ஜீவன் விமர்சனம்.; ஜீவனுள்ள ஸ்னூக்கர்

சஞ்ஜீவன் விமர்சனம்.; ஜீவனுள்ள ஸ்னூக்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் மணி சேகர் இயக்கியிருக்கும் ‘சஞ்ஜீவன்’ படத்தில் வினோத், நிஷாந்த், சத்யா, யாசின் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசின் இவர்கள் ஐவர் நெருங்கிய நண்பர்கள்

குடி கும்மாளம் என ஜாலியாக வாழும் நண்பர்கள் மத்தியில் நல்ல பையனாக இருக்கிறார் நாயகன் வினோத். மேலும் ஸ்னூக்கர் போட்டிகளில் இவரே முதலிடம்.

நாயகனின் கேரக்டர் நாயகி திவ்யாவுக்கு பிடித்துப்போகவே இருவரும் காதலிக்கிறார்கள்.

ஒரு நாள் ஸ்னூக்கர் போட்டியில் வென்றதை கொண்டாட நண்பர்களுடன் காரில் ஏற்காடு பயணிக்கின்றனர்.

அங்கு என்ன நடக்கிறது.. அங்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் அனைவரும் நடிப்புக்காகவும் நட்புக்காகவும் ஒன்றிணைந்துள்ளனர்.

சினிமாவை தாண்டியும் இவர்கள் நட்புடன் இருப்பதாகவே தெரிகிறது. அந்த ரியல் லைஃப் கெமிஸ்ட்ரி தான் படத்தின் கதை ஓட்டத்திற்கும் பெரும் பலமாக இருந்தது.

நாயகியாக திவ்யா துரைசாமி. கண்களும் கூந்தலும் இவருக்கு கூடுதல் அழகு. நடிப்பிலும் குறையில்லை. (இவர் முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்)

டெக்னீஷியன்கள்..

ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் சொர்ண குமார் நேர்த்தியாக கொடுத்து ஸ்னூக்கர் விளையாட்டையும் கேமராவில் விளையாடி இருக்கிறார்.

அதுபோல கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் நடக்கும் சேசிங் காட்சிகளை தத்ரூபமாக காட்டியுள்ளனர்.

தனுஷ் மேனனின் பின்னணி இசையும் ஓகே.

படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி கதைக்கு ஏற்ப வேகம் பிடித்து விறுவிறுப்பை கூட்டியுள்ளது சிறப்பு.

திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குனர் பாராட்டைப் பெறுகிறார். படத்தில் தொய்வு என்பதே இல்லாமல் கதையோட்டத்தை சிதறாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி சேகர்.

ஆக.. சஞ்ஜீவன்… ஜீவனுள்ள ஸ்னூக்கர்

Sanjeevan movie review and rating in tamil

ஆற்றல் விமர்சனம்..: கார் கனவு

ஆற்றல் விமர்சனம்..: கார் கனவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே எல் கண்ணன் இயக்கத்தில் செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக ஜே மைக்கேல் தயாரித்துள்ள படம் ‘ஆற்றல்’.

இதில் விதார்த், ஷிரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம் :

மெக்கானிக்கல் இன்ஜினியர் விதார்த். இவரின் அப்பா சார்லி.

ஓர் தானியங்கி கார் (ஆட்டோமேட்டிக் கார்) ஒன்றை உருவாக்க ஆசைப்படுகிறார் விதார்த். அதற்கு ரூபாய் 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

மகனுக்காக 10 லட்ச ரூபாய் திரட்டி கொண்டு வருகிறார் சார்லி. அப்போது திடீரென சாலை விபத்தில் இறக்கிறார்.

இது நடந்த சில தினங்களில் இதே போன்ற ஒரு சாலை விபத்து நடக்கிறது. அப்படி என்றால் தன் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்கிறார் விதார்த்.

பணத்தை பறிக்கும் மர்ம நபர்கள் யார்.? அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? ஆட்டோமேட்டிக் கார் கனவு நனவானதா? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் :

வழக்கம்போல விதார்த் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். குடும்ப பாசம்.. காதல் என வலம் வருகிறார். ஆனால் எப்போதுமே எதையோ பறி கொடுத்தவர் போலவே இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

நாயகியாக ஷிரிதா ராவ். அழகான கண்கள்.. காதல் காட்சிகளில் வெட்கப்படும் அழகே தனி.

அப்பாவாக சார்லி அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

ரமா, விக்னேஷ்காந்த், வித்யூலேகா, வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

வம்சி கேங்க்கை பார்த்தால்… இனி உணவு டெலிவரி செய்ய வருபவர்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைப்பதே நல்லது என மக்கள் நினைப்பார்கள்.

டெக்னீஷியன்கள்…

அஸ்வின் ஹேமந்த் இசையும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கே எல் கண்ணன் திரைக்கதையை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார்.

ஆனால், அதை இன்னும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

ஆக ஆற்றல்.: விவேகம் இல்லை.. கொஞ்சம் குறைவுதான்..

காந்தாரா விமர்சனம் 4.5/5.; கன்னட சினிமா காலரை தூக்கி விட்டுக்கலாம்

காந்தாரா விமர்சனம் 4.5/5.; கன்னட சினிமா காலரை தூக்கி விட்டுக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் கிஷோர் (கறாரான வனத்துறை அதிகாரியாக..) நாயகியாக சப்தமி கவுடா நடித்துள்ளார்.

KGF படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

நில அரசியல்.. அரசு நிர்வாகம்.. பழங்குடியின மக்கள் என முக்கோண கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடியின மக்களுக்குமான நிலப் பிரச்சினையை தோலுரிக்கும் படம்.

ரிஷப் ஷெட்டி நடித்து அவரது இயக்கத்தில் உருவான ‘காந்தாரா’ படம் கடந்த வாரம் வெளியானது. இன்று அக்டோபர் 15ல் தமிழில் டப்பிங் வெர்சன் வெளியாகி உள்ளது.

அண்மையில் வெளியாகி கன்னடர்களை மட்டுமல்லாமல் இந்திய மக்களை கவர்ந்த படங்கள் ‘கேஜி எஃப்’ மற்றும் ‘சார்லி 777’.. அந்த வரிசையில் இந்த ‘காந்தாரா’ படமும் நிச்சயம் இணைந்து விட்டது.

காந்தாரா

கதைக்களம்…

1880களில் பெரும் செல்வாக்கு கொண்ட அரசர் நிம்மதி தேடி அலைகிறார். அப்போது பழங்குடியின மக்கள் வழிபடும் கடவுளை தனக்கு தருமாறு கேட்கிறார்.

காரணம் அந்த கடவுளை பார்த்த அடுத்த கனமே அவருக்கு முழு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது. கடவுளை கொடுத்தால் அதற்கு பதிலாக ‘தன் நிலங்களை உங்களுக்கு தருகிறேன்” என்கிறார்.

சில 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர் பரம்பரையில் வந்தவர்கள் தங்களுக்கு நிலத்தை தருமாறு பழங்குடியின மக்களிடம் சண்டை போடுகின்றனர். இந்த மோதல் தொடர்பான கதைக்களமே இந்த படம்.

காந்தாரா

கேரக்டர்கள்….

‘ஆடுகளம்’ படத்தில் அசத்திய கிஷோர் இதில் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நம்மை கவர்ந்திருக்கிறார். அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அரசரின் வாரிசாக அச்யுத் குமார் செம அசத்தல்.. க்ளைமாக்சில் இவரின் வில்லத்தனம் வேற லெவல் (ரஜினி முருகன் படத்தில் கீர்த்தியின் அப்பாவாக வருவாரே அவரே தான்).

ரிஷப் செட்டியின் நண்பர்களாக வரும் இருவரும் கலகலப்புக்கு உதவியுள்ளனர். அவர்களின் சாரல் மழை போன்ற காமெடிகள் நம்மை கண்டிப்பாக சிரிக்க வைக்கும்.

நாயகனின் அம்மாவாக வருபவரும் கண்டிப்பாக பொறுப்பான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

நாயகி சப்தமி கவுடாவின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு கூட இது போன்ற கேரக்டர்கள் கிடைப்பது இல்லை. அதே சமயத்தில் சில காட்சிகளில் சூடு ஏற்றவும் தவறவில்லை.

காந்தாரா

நாயகன் & டைரக்டர்..

நாயகனே படத்தை இயக்கி நடித்து இருப்பதால் அவரால் தன் கேரக்டரை முழுவதுமாக உணர்ந்து நமக்கு காந்தாரா என்ற காந்த விருந்தை வழங்கியிருக்கிறார். நம்மை ஒவ்வொரு காட்சியிலும் காந்தம் போல இழுத்து கட்டிப்போட்டு விட்டார்.

முக்கியமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இதுபோன்ற ஒரு அசுரத்தன நடிப்பை எவரிடமும் பார்க்க இயலாது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் & புஷ்பா போன்ற காடுகளே இதன் களம் என்றாலும் ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான விருந்து அளித்திருக்கிறார்.

படத்தில் நாயகன் முழுவதும் லுங்கி தான் கட்டி நடித்திருக்கிறார். ஆனால் நம் தமிழ் ஹீரோக்கள் லுங்கி கட்டி நடிப்பதையே விரும்புவதில்லை. ஏதோ ஓரிரு காட்சிகள் மட்டுமே லுங்கியுடன் வருவார்கள்.

ஆனால் படம் முழுவதும் ஒரு மாசான அதிரடியான அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் ரிஷப்.

சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது நெருப்பு வைத்துக் கொண்டு சண்டை போடுவது வித்தியாசமான கற்பனை. மழையும் நெருப்பும் ஒத்து வராத வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு அந்த சண்டை வடிவமைத்து இருப்பது சூப்பரோ சூப்பர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பாளர் பிரகாஷ், பிரதீக் ஷெட்டி, அரங்க அமைப்பாளர் தரணி கங்கே புத்ரா, ஆடை வடிவமைப்பாளர் பிரகதி ரிஷாப் ஷெட்டி ஆகிய அனைவருமே 100% உழைப்பை கொடுத்துள்ளனர்.

100 வருடங்களுக்கு முன்பு.. 50 வருடங்களுக்கு முன்பு… 30 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையை என அனைத்தையும் அற்புதமாக காட்டியுள்ளனர்.

ஆக இந்த காந்தாரா… கன்னட சினிமாவினர் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்..

காந்தாரா

Kantara movie review and rating in tamil

More Articles
Follows