தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஃபாரின் சரக்கு’.
அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்துள்ளார்.
சஸ்பென்ஸ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒன்லைன்..
ஃபாரின் சரக்கு என்பதால் இந்த படத்தில் தண்ணி அடிக்கும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதற்கு ஏமாற்றமே.
ஃபாரினில் இருந்து வரும் பொருட்களை கூட நாம் சரக்கு என்று சொல்வோம் அல்லவா அதுதான் இந்த ஃபாரின் சரக்கு.
கதைக்களம்…
குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அப்படி என்றாலே அதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பது அர்த்தம் தானே..
எனவே தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை சில நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதுஒரு புறம் நடந்தாலும் மறுபுறம் குஜராத் அமைச்சரின் மகனை சில கும்பல்கள் துரத்துகின்றன.
இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத்
அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? என்பதை ட்விஸ்டுகளோடும் சொல்லியிருக்கிறார்கள்.
கேரக்டர்கள்…
நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் சில யுக்திகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேக்கப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை
மகாலிங்கம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருக்கும் உசேன் அசத்தியிருக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் கச்சிதம்.
அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோருக்கு பெரிதாக வேலை இல்லை ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்கள்.
பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திக்கு உதவியுள்ளது.
பின்னணி இசை இரைச்சலை கொடுத்துள்ளது ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் ஓகே.
ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆனால் படத்திற்கு வெளிச்சத்திற்காக வைக்கப்பட்ட லைட் செட்டிங் கருவிகள் காட்சிகளில் தெரிவது ஏன்? ஒரு முக்கியமாக இடைவேளைக்கு வரும் பிறகு வரும் சண்டை காட்சியில் தெருவிளக்கு மட்டும் இருந்தால் போதும். மற்ற செட் ஸ்டாண்ட் விளக்குகளும் தெரிகிறது.. அதை இயக்குனர் கவனிக்கவில்லையா? அல்லது ஒளிப்பதிவாளர் கவனிக்கவில்லையா?
எடிட்டர் பிரகாஷ்ராஜ் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருப்பது பலம்.
’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் மது அல்லது புகை காட்சிகளை வைக்காமல் சொன்னது சூப்பர்.
இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, இளைஞர்களுக்கான மெசஜோடு படத்தை நிறைவு செய்கிறார்.
படிக்காதவனே நிறைய தவறுகளை செய்யும்போதும் அதிகாரத்தில் இருந்து சில தவறுகளை செய்யும்போது படித்த புத்திசாலிகள் என்னென்ன செய்வார்கள் என்பதை இயக்குநர் சொல்லி இருப்பது சிறப்பு.
குறைந்த பட்ஜெட் காரணமாக சிறு சிறு குறைகள் காணப்படுகிறது.
மொத்தத்தில், ‘ஃபாரின் சரக்கு’ ஒருமுறை பருகலாம்
Foreign Sarakku movie review in Tamil