FIRST ON NET டாடா DADA விமர்சனம் 4.25/5 .. Sema DA Super DA

FIRST ON NET டாடா DADA விமர்சனம் 4.25/5 .. Sema DA Super DA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அம்மா இல்லாமல் அப்பா அரவணைப்பில் வளரும் ஒரு ஆண் குழந்தை பற்றிய கதை.. டாடி என்று அழைக்காமல் டாடா என்று அழைக்கிறார்.. எனவே அதுவே படத்தின் தலைப்பு.

கதைக்களம்..

கல்லூரியில் படிக்கின்றனர் கவின் மற்றும் அபர்ணா படிக்கும்போதே இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட கர்ப்பமாகிறார் அபர்ணா.

இதனால் இருவர் குடும்பத்திலும் பிரச்சினை உருவாக இருவரும் தனியே வீடு எடுத்து தங்குகின்றனர்.

எனவே சின்ன சின்ன வேலைகள் செய்து குடும்பத்தை கவனிக்க ஆரம்பிக்கிறார் கவின்.. குடும்பத்திற்கே செலவுக்கு பணம் இல்லாத நிலையில் குடிக்க ஆரம்பிக்கிறார் கவின்.

இதனால் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்படுகிறது.. ஒரு நாள் பிரச்சனை அதிகமாகவே கோபித்துக் கொண்டு வேலைக்கு சென்று விடுகிறார் செல்போனை ஆஃப் செய்து விடுகிறார் கவின்..

அந்த சமயத்தில் பிரசவ வலி ஏற்பட அக்கம் பக்கத்தினர் அபர்ணாவை மருத்துவமனையில் சேர்க்க அபர்ணா பெற்றோரும் உதவிக்கு வருகின்றனர்.

ஆண் குழந்தை பிறக்கிறது.. குழந்தையை மருத்துவமனையில் விட்டு விட்டு சென்று விடுகிறார் அபர்ணா.

கவின் தேடியும் அபர்ணா கிடைக்கவில்லை.. அதன்பிறகு கை குழந்தையுடன் கவின் என்ன செய்தார்? குழந்தைக்கு அம்மா கிடைத்தாரா? கவின் அபர்ணா இணைந்தார்களா என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இளம் வயதில் இப்படி ஒரு கேரக்டரை தேர்ந்தெடுத்த கவினுக்கு வாழ்த்து மழை பொழியலாம்.

அலட்டிக் கொள்ளாத அளவான நடிப்பில் இளைஞர்களை கவர்ந்துள்ளார் கவின். அதேசமயம் தாய் குலங்களையும் கவரும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளார்.

பாவப்பட்ட பெண்ணாக அபர்ணா முதல் பாதியிலும் இரண்டாம் பாதியில் திமிர் பிடித்த பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்ணா.

கவின் நண்பர் மற்றும் ஐடி ஆபீஸ் ஊழியர்கள் என அனைவரும் நடிப்பில் சபாஷ் பெறுகின்றனர்.

கவின் பெற்றோர்களா வருகின்றனர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா. வி டிவி கணேஷ் வந்த பிறகு படத்தின் கதை கலகலப்பான பாதையில் பயணிக்கிறது.

கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் அழகு குட்டி பையன்..

நண்பர்களாக வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் நிறைவு.

டெக்னீஷியன்கள்..

படத்தில் எந்த ஒரு கேரக்டரையும் குறை சொல்லாத முடியாத அளவுக்கு வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.

ஒரு குடிகார பாடலுக்கு.. திடீரென காலேஜ் பாடல் உள்ளே வருவது போல உள்ளது.. அதற்கு பதிலாக காலேஜ் காட்சிகளை சற்று கூட்டி இருக்கலாம்..

படத்திற்கு ஜென் மார்ட்டின் இசை பெரிய பலம்.. முக்கியமாக தாலாட்டு பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.. தமிழ் படம் என்றாலும் மலையாள பாடல் வரிகளை கொடுத்து வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.

தன் நண்பரின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.

அதே சமயம் படத்தை கலகலப்பாகவும் கொடுத்துள்ளார்.. படத்தின் காமெடி காட்சிகளும் கதையுடன் பயணிப்பது சிறப்பு.

படத்தின் வசனங்களும் சூப்பர்.. ஒரு காட்சியில் கவினுக்கு வேலைக்கு சிபாரிசு செய்வார் அவரது தோழி.. ஆனால் அந்த வேலை வேறு ஒருவருக்கு சென்று விடும்..

அப்போது… உங்களுக்கெல்லாம் நாங்க நல்லா இருக்கணும்.. ஆனா உங்களை விட நல்லா இருக்க கூடாது அதானே.. என கவின் பேசுவார்..

இதுபோல பல வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

படம் மிகவும் யதார்த்தமாக உள்ளது.. எனவே கதையை முன்னரே யூகிக்க முடிகிறது.. சில ட்விஸ்ட் கொடுத்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்..

ஆக… டாடா.. Sema DA Super DA

DADA movie review and rating in tamil

ரன் பேபி ரன் விமர்சனம்.; வின்னரா.? ரன்னரா.?

ரன் பேபி ரன் விமர்சனம்.; வின்னரா.? ரன்னரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அறிமுகமில்லாத ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவ போய் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஆர் ஜே பாலாஜி. மர்மமான முறையில் பாலாஜி வீட்டில் ஐஸ்வர்யா மரணமடைகிறார். அதிலிருந்து எப்படி பாலாஜி தப்பித்தார் என்பதே கதை.

கதைக்களம்…

முன்பின் பழக்கம் இல்லாத ஐஸ்வர்யா ஒரு நாள் ஆர்.ஜே பாலாஜியிடம் உதவி கேட்கிறார். பாலாஜி வீட்டிற்குள் வந்து செல்போன் சார்ஜ் போட்டு சில மணி நேரம் தங்குகிறார்.

பாலாஜி அசதியில் உறங்கிவிட காலையில் ஐஸ்வர்யா திடீரென மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

உடனே தனது போலீஸ் நண்பர் விவேக்கிடம் ஐடியா கேட்கிறார் பாலாஜி..

பிணத்தை எங்கேயாவது வீசி விடு என்கிறார் விவேக் பிரசன்னா. எனவே பிணத்தை சூட்கேஸில் மறைத்து பயணிக்கிறார் பாலாஜி.. அதன் பின்னர் என்ன நடந்தது.? என்பதே ரன் பேபி ரன்..

கேரக்டர்கள்…

எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டே இருக்கும் ஆர் ஜே பாலாஜி இதில் திருதிருவென முழிக்கிறார். அவர் பேசாமல் தன் நடிப்பை பேச வைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கு சின்ன கேரக்டர் என்றாலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆனால் கேரக்டர் வலுவானதாக இல்லை.

நாயகனின் நண்பராக வரும் விவேக் பிரசன்னா நடிப்பு ஓகே.

ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பக்ஸ் , ஜோ மல்லூரி என திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக வேலை கொடுக்கப்படவில்லை.

டெக்னீஷியன்கள்…

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கம் – ஜியென் கிருஷ்ணகுமார் இசை – சாம் சிஎஸ் .

படத்தின் இடைவேளை வரை காட்சி நகர்வதே தெரியவில்லை.. அப்படி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து நம் செல்போனை கையில் எடுக்காத படி சீட் நுனியில் அமர வைத்து விட்டார் இயக்குனர்.

ஆனால் இரண்டாம் பாதியில் வழக்கமான சில காட்சிகளை கத்தரி போட்டிருக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை. அவர் சின்ன கேரக்டருக்கு ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம்.. அவரை இன்னும் கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்.. அதுபோல ஸ்மிருதி வெங்கட்.. பக்ஸ் ஜோ மல்லூரி உள்ளிட்ட பலரது கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

படத்தில் முக்கியமாக ஒரு பெரிய லாஜிக் ஓட்டை உள்ளது.. ஐஸ்வர்யாவின் பிணத்தை எப்படியோ எங்கோ வீச வேண்டும் என்பது தான் ஆர்.ஜே பாலாஜியின் நோக்கம்.. அந்த பிணம் வைத்த சூட்கேஸ் தவறுதலாக எங்கோ சென்று விட்டது. மீண்டும் அதன் பின்னாடி தொடர்வது ஏன்.? இதுவே பெரிய லாஜிக் ஓட்டையாக உள்ளது.

ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார் ஐஸ்வர்யா.. என்ன பிரச்சனை என்று சொல்லவே மறுக்கிறார்.. அப்படி இருக்கும் ஒரு நபருக்கு யாராவது உதவி செய்வார்களா.?

ஷாம் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.. ஒரு தில்லர் கதைக்கு ஏற்ப தன் இசையை பயணம் செய்ய வைத்துள்ளார்..

ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.. படத்தின் கருவை 10 நிமிடம் மட்டுமே சொல்லி வேறு கதைகளை சொல்ல முற்பட்டு இருக்கிறார்..

கதையின் கருவை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருந்தால் இந்த ரன் பேபி ரன் ரசிகர்களை கம் பேபி கம் என்று சொல்லியிருக்கும்..

Run Baby Run movie review and rating in tamil

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்.; மலையாள மசாலா.? கிச்சன் கிளிகள்.!

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்.; மலையாள மசாலா.? கிச்சன் கிளிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அடுப்படியில் தினந்தோறும் வேர்வை சொட்ட சொட்ட குடும்பத்திற்காகவே வாழும் பல பெண்களின் கண்ணீர் கதை..

கதைக்களம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கணவர் ராகுல் ரவி.. மாமனார் மாமியார் என ஒரு குடும்பம். இந்த குடும்பத்திற்கு வகை வகையாக சமைப்பது.. வீட்டை துடைப்பது.. பாத்திரம் கழுவுவது என தினசரி வாழ்க்கையில் தன் கனவுகளை துறந்து வேலை செய்கிறார் ஐஸ்வர்யா.

ஆனால் கணவரிடம் இருந்து எந்த ஒரு உதவியும் படுக்கை அறையிலும் சமையலறையிலும் கிடைக்காத போது வெறுத்துப் போகும் ஐஸ்வர்யா என்ன செய்தார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நவரசம் காட்டி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தன் கனவுகளை புதைத்து கணவனுக்காகவே வாழும் பல பெண்களை பிரதிபலிக்கிறார் ஐஸ்வர்யா.

காய்கறி வெட்டுவது.. காலை டிபன் சமைப்பது.. பாத்திரம் கழுவுவது.. பின்னர் காய் வெட்டுவது.. மதியம் சாப்பாடு சமைப்பது.. பாத்திரம் கழுவுவது.. பின்னர் காய்கறி வெட்டுவது… என காட்சிகளை திரும்ப திரும்ப வைப்பது சோர்வடைய வைக்கிறது.

கணவர் ராகுல் ரவிந்தர் பள்ளிக்கூட ஆசிரியர் என்ற காட்சியை காட்டியிருப்பது சிறப்பு..

இரவில்.. லைட்டை அணைக்கவா.?. லைட்டை அணைக்கவா.? என்ற வசனங்களை நாயகன் பேசும்போது சில ஆணாதிக்க நபர்களை அப்பட்டமாக காட்டி இருக்கிறார்.. முக்கியமாக படுக்கையில் தொடுதல்.. தடவல் (FOREPLAY) வேண்டாம்.. அது மட்டுமே வேண்டும் என்ற சில கணவன்மார்களின் ரசனையையும் காட்டி இருக்கிறார்.

மாமனாராக போஸ்டர் நந்தகுமார். வாஷிங்மெஷினில் துவைக்க கூடாது.. விறகு அடுப்பில் தான் சமைக்க வேண்டும் என கண்டிஷன்கள் போடும் மாமனராக நடித்திருக்கிறார்..

மற்றபடி மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையல் அறைக்கு வரக்கூடாது என்ற காட்சிகள் இன்றைய ட்ரெண்டுக்கு நம்பும்படியாக இல்லை..

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிந்து கவனிக்கப்பட வைக்கிறார்.. ராகுலின் தங்கையாக வரும் சிந்துவுக்கு இன்னும் கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

படத்தை இயக்கியிருப்பவர் ஆர். கண்ணன்.

மலையாள சினிமாவில் மிகவும் நடுத்தர குடும்பமாக வீடு அமைக்கப்பட்டு இருக்கும். அதற்கு ஏற்ப விறகு அடுப்பு… கையால் துணி துவைத்தல் போன்ற காட்சிகள் இருக்கும்..

ஆனால் தமிழில் ஒரு பணக்கார குடும்பமாக காட்டப்பட்டுள்ளது.. அப்படி இருக்கையில் விறகு அடுப்பு காட்சிகள் ஏற்புடையதாக இல்லை.. மேலும் பணக்கார குடும்பத்தில் பெரும்பாலும் யாரும் கையால் துணிகளை துவைப்பது இல்லை..

குடும்பத்தில் மொத்தமே ஒரு தம்பதி அவரது மகன் மருமகள் ஆகிய 4 பேரை மட்டுமே காட்டுகிறார்கள்.. ஆனால் வசனங்களில்.. ஐஸ்வர்யாவின் அம்மா.. “அது பெரிய குடும்பம்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என சொல்கிறார்..

நான்கு பேர் பெரிய குடும்பமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. மலையாளத்தில் இருந்த உணர்வு இந்தப் படத்தில் துளி கூட இல்லை..

ஐஸ்வர்யாவின் தோற்றம் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தாலும் மற்ற கேரக்டர்கள் தேர்வு சரியாக இல்லை..

ஆண்கள் மாறவே மாட்டார்கள்.. பெண்கள் நினைத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் மாற்றம் வரும் என கிளைமாக்ஸ் காட்சி காட்டப்பட்டுள்ளது..

பெண்களை எப்போதுமே கிச்சனில் வைத்திருக்கும் ஆண்கள் இந்த படத்தை பார்த்து திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி.. அந்தப் பெண் தன் அம்மாவாக இருக்கலாம்.. மனைவியாக இருக்கலாம்… சகோதரியாக இருக்கலாம்..

யாராக இருந்தாலும்.. தண்ணி கொண்டு வா… அதை செய்.. இதை செய் என்று வேலை வாங்கும் ஆண்களுக்கு இது ஒரு நெத்தியடி படம்..

படத்தின் கிளைமாக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது..

கிச்சனில் சிக்கித் தவிக்கும் பெண் கிளிகள் பற்றிய கதைதான் இந்த படம்… ஆக மலையாள மசாலா தமிழுக்கு செட் ஆகல…

The Great Indian Kitchen movie review and rating in tamil

தலைக்கூத்தல் விமர்சனம் 4/5.; குடும்பத் தலைவன்

தலைக்கூத்தல் விமர்சனம் 4/5.; குடும்பத் தலைவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பல மாதங்களாக படுத்த படுக்கையாக கிடக்கும் தன் தந்தைக்கு மகன் என்ன செய்கிறார்? அவரை கருணை கொலை செய்ய சொல்கின்றன உறவினர்கள்.. சமுத்திரக்கனி என்ன செய்தார்.? இதுவே படத்தின் ஒன்லைன்..

கதைக்களம்…

சமுத்திரக்கனி அவரது மனைவி வசுந்தரா இவர்களுக்கு ஒரு மகள். ஒரு விபத்தில் சமுத்திரக்கனியின் தந்தை காயம் அடைய படுத்த படுக்கையாகி விடுகிறார்.

இதனால் தந்தைக்கு பணிவிடை செய்ய பகலில் வீட்டில் இருக்கிறார் சமுத்திரக்கனி. இரவில் ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார்.

எனவே வசுந்தரா பகலில் தீப்பெட்டி தொழிற்சாலை வேலைக்கு செல்கிறார்.

இது பிடிக்காத வசந்தராவின் தந்தை சமுத்திரக்கனியின் தந்தையை கருணை கொலை செய்ய சொல்கிறார். இதனை மறுக்கிறார் சமுத்திரக்கனி.

பிறகு என்ன ஆனது என்பதே இந்த கதை.

ஒரு புறம் இருக்க கதிரின் காதல் கதை ஓட்டம் நகர்கிறது.. கதிர் யார் அவரின் காதலி யார் என்பதை சுவாரசியமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

கேரக்டர்கள்…

ஆக்ஷன் ஹீரோ என அறியப்பட்ட சமுத்திரக்கனி இதில் ஒரு யதார்த்த மனிதராக வாழ்ந்து இருக்கிறார்.. அப்பாவை நேசிக்கும் பாசமுள்ள மகனாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்..

தந்தைக்கு பணிவிடை செய்யும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதை வருடும்.

வசுந்தரா ஒரு இல்லத்தரசியாக யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார்.. இவர்களுடன் வசுந்தராவின் அப்பா தம்பி மகள் உள்ளிட்டோரின் பங்களிப்பும் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக இருக்கின்றன.

டெக்னீசியன்கள்..

லென்ஸ் படத்தை இயக்கிய ஜே பி என்ற ஜெயபிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்..

நாம் பார்க்க மறந்து போன கிராமத்து மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

ஒரு ஏழையின் வீடு எப்படி இருக்குமோ அதை தத்துரூபமாக செய்திருக்கிறார் கலை இயக்குனர்.

இந்த படத்திற்கு பெரிய பலமாக கருதப்படுவது பின்னணி இசை. லைவ் மியூசிக் கொடுத்து காட்சிகளை அப்படியே மனதில் பதிய வைக்கிறார் சவுண்ட் இன்ஜினியர் ராஜேஷ்.

இந்த தலைக்கூத்தல் என்ற சடங்கு ஒழிக்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் தமிழ்நாட்டில் எங்கோ ஒன்று அவ்வப்போது நடக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இந்த படம் மூலம் இது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ஆக இந்த தலைக்கூத்தல்.. குடும்ப தலைவன்

Thalaikoothal movie review and rating in Tamil

பொம்மை நாயகி விமர்சனம்.. 3.5/5..; நீதி தேவதை

பொம்மை நாயகி விமர்சனம்.. 3.5/5..; நீதி தேவதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

யோகி பாபுவின் 9 வயது மகள் ஸ்ரீமதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட அதற்கு நீதி கிடைக்க வேண்டி போராடும் கதைக்களமே இந்த பொம்மை நாயகி.

கதைக்களம்…

ஒரு டீ கடையில் வேலை செய்யும் ஏழை கூலித் தொழிலாளி யோகிபாபு. இவரது 9 வயது மகள் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.

இதனையடுத்து உயர் ஜாதியினர் பஞ்சாயத்து செய்ய, ஒரு நேர்மையான மனிதர் மூலம் போலீசில் புகார் கொடுக்க செல்கிறார் யோகி பாபு.

ஆனால் காவல்துறையும் உயர்சாதிக்கு ஜால்ரா அடிக்க நீதிமன்றத்தை நாடுகிறார் யோகி பாபு.

தன் மகளுக்கு நீதி கிடைக்கப்பெற்றாரா? போலீசும் அரசியலும் சேர்ந்த கூட்டணி வென்றதா.? அல்லது நீதிமன்றம் வென்றதா.? என்பதே இப்படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பல படங்களில் காமெடியனாக நாம் பார்த்து ரசித்த யோகி பாபு இந்த படத்தில் முழுக்க முழுக்க சீரியஸாக நடித்திருக்கிறார். பாசமான தைரியமான தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார்.

ஆனால் போதுமான உணர்ச்சிகளை அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. முக்கியமாக ஒரு காட்சியில் அவர் பின்னே கேமரா சென்று கொண்டே இருக்கும்.. அந்த காட்சியில் யோகி பாபு அழுவது போல் காண்பிக்கப்பட்டாலும் அவர் முகத்தை கூட காண்பிக்கவில்லை.

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. உணர்ச்சிமிக்க நடிப்பு

மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி சிறப்பு மதி. அம்மாவை விட அப்பாவிடம் காட்டும்
பாசம் ரசிக்க வைக்கிறது. நீதிபதியிடம் இவர் கேட்கும் கேள்வி சூப்பர்.

தாத்தாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

டெக்னீஷியன்கள்…

நீதிமன்ற காட்சிகள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. யோகி பாபுவின் வக்கீல் நடித்திருக்கும் அந்த பெண்மணி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

என்னதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் அதன் பின்னர் ஜாமீன் பெயில் உள்ளிட்டவை இருப்பதால் குற்றவாளிகளுக்கு குதூகலமே என்பதை இயக்குனர் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு தீர்வு என்ன என்பதையும் கிளைமாக்ஸில் ஆணித்தரமாக சொல்லி இருப்பது கூடுதல் சிறப்பு.

மேலும் சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் எப்படி எல்லாம் சாதகமாகிறது என்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷான்.

ஒளிப்பதிவு -அதிசயராஜ்,
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு.. ஆகியோரின் பணிகள் சிறப்பு… ஷான் என்பவர் இயக்க ரஞ்சித் தயாரித்துள்ளார்.

வசனங்கள் சூப்பர்..

தீர்ப்புக்குப் பின்னும் நீதி கிடைக்கப் போராடனுமா.?… தப்பு செஞ்சவங்க சுதந்திரமா சுத்துறாங்க.. பாதிக்கப்பட்டவங்க நிலைமை மோசம்… போற உயிரு போராடியே போகட்டும் சார்… என்ற வசனங்கள் கைதட்டல்களை அள்ளும்.

ரஞ்சித் தயாரிப்பாளர் என்றாலே நம்பி போகலாம் என்பதை பொம்மை நாயகியும் உறுதி செய்துள்ளது. தயாரிப்பு நீலம் புரொடக்சன்ஸ்..

ஆக பொம்மை நாயகி்… நீதி தேவதை

——–

யோகிபாபு, சுபத்ரா, ஹரி,
ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப், நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதி என அனைவரின் நடிப்பும் அருமை.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ஷான்.

ஒளிப்பதிவு -அதிசயராஜ்,
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு

பாடல்கள் , கபிலன், அறிவு , லோகன், சித்தன் ஜெயமூர்த்தி,

சவுண்ட் – அந்தோனி ஜே ரூபன்.
சண்டைபயிற்சி – ஸ்டன்னர் சாம்.
உடைகள் – ஏகாம்பரம்.

பா.இரஞ்சித். மற்றும்
யாழி பிலிம்ஸ் மனோஜ் லியோனல் ஜேசன்.
இணை தயாரிப்பு.
வேலன், லெமுவேல்

Bommai Nayagi movie review and rating in tamil

Meippada Sei – மெய்ப்பட செய் விமர்சனம்.; இன்றே செய்

Meippada Sei – மெய்ப்பட செய் விமர்சனம்.; இன்றே செய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Adhav Balaji, Madunika, PR Tamil Selvam, Adukalam Jayabal, OAK Sundar, Super Good Subramani, Rajkapoor, Raghul Thatha, Benjamin
Directed By : Velan
Music By : Bharani
DOP : R.Vel
Produced By : SR Harshith Pictures – PR Tamil Selvam

ஒன்லைன்…

குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடுகின்றனர். அதன் பின் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள்? என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலர்கள்.

வழக்கம்போல காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது.

எனவே காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டு சென்னைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு துணையாக 3 நண்பர்களும் செல்கின்றனர். அங்கு தங்கும் வாடகை வீட்டினால் பெரிய பிரச்சனை வருகிறது.

அந்த பிரச்சினையை எதிர்த்து போராடி வில்லன் கும்பலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க களத்தில் இறங்குகிறார்கள்.

இறுதியில் என்னானது என்பதே ‘மெய்ப்பட செய்’.

கேரக்டர்கள்…

நாயகன் ஆதவ் பாலாஜிக்கு இதுதான் முதல்படம் என்பது போல் இல்லாமல் ரொமான்ஸ், ஆக்சன் என முயச்சித்துள்ளார்.

நாயகி மதுனிகா தன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். தாய்மாமனாக வந்த பி.ஆர்.தமிழ் செல்வம் அடாவடி வில்லன். இறுதியில் இவரது கேரக்டர் திருப்புமுனை எதிர்பாராத ஒன்று.

கட்ட கஜா என்ற தாதாவாக ஆடுகளம் ஜெயபால்.. இவரது தோற்றமும், வசன உச்சரிப்பும் பலம்.. நடக்க முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டலான நடிப்பு.

ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன் & நாயகனின் நண்பர்கள் அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

பரணியின் இசையில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு. பின்னணி இசையில் கூடுதல் கவனம் தேவை.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் கேமராவில் பாடல் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் ரசிக்கும் படி உள்ளது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாலியல் குற்றங்கள் படங்கள் நிறைய வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. அதே சமயம் பாலியல் குற்றங்களுக்கான தீர்வையும் இயக்குனர் வேலன் சொல்லி இருப்பது கவனம் பெறுகிறது. ஆனால் திரைக்கதையில் சொல்ல வேண்டிய விஷயத்தை கமர்சியல் கலந்து சொல்லி இருப்பதால் படம் வேறு பாதையில் பயணிப்பது போல உணர்வைத் தருகிறது..

ஆக.. மெய்ப்பட செய்.. இன்றே செய்

Meippada Sei movie review and rating in tamil

More Articles
Follows