தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
அம்மா இல்லாமல் அப்பா அரவணைப்பில் வளரும் ஒரு ஆண் குழந்தை பற்றிய கதை.. டாடி என்று அழைக்காமல் டாடா என்று அழைக்கிறார்.. எனவே அதுவே படத்தின் தலைப்பு.
கதைக்களம்..
கல்லூரியில் படிக்கின்றனர் கவின் மற்றும் அபர்ணா படிக்கும்போதே இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட கர்ப்பமாகிறார் அபர்ணா.
இதனால் இருவர் குடும்பத்திலும் பிரச்சினை உருவாக இருவரும் தனியே வீடு எடுத்து தங்குகின்றனர்.
எனவே சின்ன சின்ன வேலைகள் செய்து குடும்பத்தை கவனிக்க ஆரம்பிக்கிறார் கவின்.. குடும்பத்திற்கே செலவுக்கு பணம் இல்லாத நிலையில் குடிக்க ஆரம்பிக்கிறார் கவின்.
இதனால் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்படுகிறது.. ஒரு நாள் பிரச்சனை அதிகமாகவே கோபித்துக் கொண்டு வேலைக்கு சென்று விடுகிறார் செல்போனை ஆஃப் செய்து விடுகிறார் கவின்..
அந்த சமயத்தில் பிரசவ வலி ஏற்பட அக்கம் பக்கத்தினர் அபர்ணாவை மருத்துவமனையில் சேர்க்க அபர்ணா பெற்றோரும் உதவிக்கு வருகின்றனர்.
ஆண் குழந்தை பிறக்கிறது.. குழந்தையை மருத்துவமனையில் விட்டு விட்டு சென்று விடுகிறார் அபர்ணா.
கவின் தேடியும் அபர்ணா கிடைக்கவில்லை.. அதன்பிறகு கை குழந்தையுடன் கவின் என்ன செய்தார்? குழந்தைக்கு அம்மா கிடைத்தாரா? கவின் அபர்ணா இணைந்தார்களா என்பதை படத்தின் கதை.
கேரக்டர்கள்…
இளம் வயதில் இப்படி ஒரு கேரக்டரை தேர்ந்தெடுத்த கவினுக்கு வாழ்த்து மழை பொழியலாம்.
அலட்டிக் கொள்ளாத அளவான நடிப்பில் இளைஞர்களை கவர்ந்துள்ளார் கவின். அதேசமயம் தாய் குலங்களையும் கவரும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளார்.
பாவப்பட்ட பெண்ணாக அபர்ணா முதல் பாதியிலும் இரண்டாம் பாதியில் திமிர் பிடித்த பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்ணா.
கவின் நண்பர் மற்றும் ஐடி ஆபீஸ் ஊழியர்கள் என அனைவரும் நடிப்பில் சபாஷ் பெறுகின்றனர்.
கவின் பெற்றோர்களா வருகின்றனர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா. வி டிவி கணேஷ் வந்த பிறகு படத்தின் கதை கலகலப்பான பாதையில் பயணிக்கிறது.
கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் அழகு குட்டி பையன்..
நண்பர்களாக வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் நிறைவு.
டெக்னீஷியன்கள்..
படத்தில் எந்த ஒரு கேரக்டரையும் குறை சொல்லாத முடியாத அளவுக்கு வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.
ஒரு குடிகார பாடலுக்கு.. திடீரென காலேஜ் பாடல் உள்ளே வருவது போல உள்ளது.. அதற்கு பதிலாக காலேஜ் காட்சிகளை சற்று கூட்டி இருக்கலாம்..
படத்திற்கு ஜென் மார்ட்டின் இசை பெரிய பலம்.. முக்கியமாக தாலாட்டு பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.. தமிழ் படம் என்றாலும் மலையாள பாடல் வரிகளை கொடுத்து வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.
தன் நண்பரின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.
அதே சமயம் படத்தை கலகலப்பாகவும் கொடுத்துள்ளார்.. படத்தின் காமெடி காட்சிகளும் கதையுடன் பயணிப்பது சிறப்பு.
படத்தின் வசனங்களும் சூப்பர்.. ஒரு காட்சியில் கவினுக்கு வேலைக்கு சிபாரிசு செய்வார் அவரது தோழி.. ஆனால் அந்த வேலை வேறு ஒருவருக்கு சென்று விடும்..
அப்போது… உங்களுக்கெல்லாம் நாங்க நல்லா இருக்கணும்.. ஆனா உங்களை விட நல்லா இருக்க கூடாது அதானே.. என கவின் பேசுவார்..
இதுபோல பல வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.
படம் மிகவும் யதார்த்தமாக உள்ளது.. எனவே கதையை முன்னரே யூகிக்க முடிகிறது.. சில ட்விஸ்ட் கொடுத்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்..
ஆக… டாடா.. Sema DA Super DA
DADA movie review and rating in tamil