தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்திராத புறா பந்தயத்தை வைத்து ஒரு. ஃபயர் புல்லான பந்தயத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி.
அதேசமயம் காதல், நட்பு, அம்மா மகன் சென்டிமென்ட், தந்தை மகன் பாசம், என அனைத்தையும் கலந்து ஒரு விருந்து படைத்திருக்கிறார் இந்த புதுமுக இயக்குனர்.
ஸ்டோரி..
நாயகன் சையத் மஜித் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கல்லூரியில் நாயகி மேக்னா எலனும் படித்து வருகிறார்.
நாயகி மீது நாயகனுக்கு காதல்.. ஆனால் நாயகியோ கண்டு கொள்வதில்லை. ஆனால் நாயகன் மஜீத் மீது முறைப்பெண் சித்ரா (சரண்யா ரவிச்சந்திரனுக்கு) கொள்ளை காதல்..
இந்தக் கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. புறா பந்தயத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார் நாயகன்.. அதற்காக புறாக்களை வளர்க்க திட்டமிடுகிறார். ஆனால் படித்து நன்றாக முன்னேற வேண்டும் தாத்தா, தந்தையைப் போல நீ கெட்டுவிடக்கூடாது.. உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என அட்வைஸ் சரி செய்கிறார் அம்மா விஜி சேகர்.
புறா வளர்க்க விட்டால்தான் பரீட்சை எழுதுவேன் என மிரட்டுகிறார் மகன்.. புறா பந்தயத்தில் நீ கலந்து கொண்டால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என மிரட்டுகிறார் அம்மா.
இப்படியான சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது? நாயகன் என்ன செய்தார்? அவர்களின் நண்பர்கள் உதவினார்களா? அம்மாவின் கண்டிப்புக்கு பயந்தாரா? நாயகனுக்கு வில்லன் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
Syed Majeed – rajalingam
Meghana Ellen – sharon
Viji Sekar – saraswathi (Amma)
John Glady – Amal
Saranya Ravichandran – Chithra
Ramesh Arumugam – ramesh pannaiyar
Vinu Lawrence – suyambu
Anand Kumar – Thirumal (rajalingam Appa)
Karthick Prasanna – villiyam
Francis Kiruba – ravichandran (Chithra Appa)
Rajan – Amal father
பெரும்பாலும் எல்லா படங்களிலும் நாயகனுக்கு தான் அறிமுக காட்சிகள் வேற லெவலில் இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்களில் வில்லென்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். தனி ஒருவன் படமே அதற்கு சாட்சி.. வில்லன் அரவிந்தசாமி பிறக்கும் போதும் அவர் உருவாகும் போதும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். அதுபோல இந்த படத்தில் வில்லன் கேரக்டர் நடித்த சுயம்புவுக்கு (வினு லாரன்ஸ்) பயங்கர பில்டப்.. அவரை சமாதானப்படுத்த உள்ளூர் முதல் தேசிய அளவில் பலர் வந்து முயற்சிப்பார்கள். ஆனால் வில்லன் எதற்கும் பிடி கொடுக்க மாட்டார். இவர் யார்? இவருக்கு என்ன பிரச்சனை என்பதுடன் படத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர்.
மேலும் இதில் வில்லுப்பாட்டு வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்.
சையது மஜீத், ரமேஷ் ஆறுமுகம், ஜான் கிலாடி, சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன், விஜி சேகர் என இதுவரை நாம் பார்க்காத புது முகங்கள் தான் பைரி-யின் அடையாளங்கள்..
நண்பனுக்காக எதையும் செய்யத் துணிந்த கோபக்கார இளைஞன் சையத் மஜீத். அதே சமயம் காதலிக்காக உருகுவதும் அம்மாவுக்காக பயந்து நடுங்குவதும் ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்ப்பதும் என நடிப்பில் மிரட்டி இருக்கிறார் சையத் மஜித்.
தனது முதல் படத்திலேயே சில நாயகர்கள் முத்திரை பதித்திருப்பார்கள்.. பராசக்தி-யில் சிவாஜி பருத்திவீரனில் கார்த்தி அதுபோல பைரி-யில் சையது மஜீத்..
நாயகனின் தாயாக சரஸ்வதி கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் அம்மா விஜி சேகர். இவர் சிங்கம் 2, சண்டக்கோழி என 12+க்கும் மேற்பட்ட படங்களின் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் இவரை பெரிய அளவில் கொண்டு சேர்க்கும்.
நாயகனின் முறை பெண்ணாக சித்ரா என்ற கேரக்டரில் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார் சரண்யா ரவிச்சந்திரன். மாமாவின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளிலும் ஒரு கட்டத்தில் மாமா மாமி இருவருக்கும் இடையில் சரண்யா சிக்கிக் கொண்டு தவிக்கும் பாச போராட்டம் ரசிக்க வைக்கிறது.
அமல் என்ற கேரக்டரில் நாயகனின் நண்பனாக மிரட்டி இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஜான் கிலாடி. நண்பனுக்காக வில்லனை எதிர்த்து அதன் பின்னர் பயந்து நடுங்கும் காட்சிகளில் சிரிப்பையும் பரிதாபத்தையும் ஒன்று சேர்க்கிறார்.. இவரின் அப்பா மாற்றுத்திறனாளியாக நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்.
இவர்களுடன் மக்களே மக்களே என்று என்று அழைத்து நம் கவனம் இருக்கிறார் ரமேஷ் ஆறுமுகம்.. இளைஞர்கள் கெட்டுவிடக்கூடாது நல்வழிப்படுத்த வேண்டும் என இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் இதுபோல நம் ஊருக்கு ஒருவர் கிடைக்க மாட்டார்? என ஏங்க வைத்து விடுகிறார்.
சுயம்பு கேரக்டரில் வில்லனாக வினு லாரன்ஸ் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும்.. இவரது உடலும் உடல் மொழியும் நம்மை மிரட்டும்.
இவர்களுடன் சுயம்புவின் மச்சான் லிங்காவின் நண்பர்களும் என ஒவ்வொரு கேரக்டரும் நம் மனதை விட்டு நீங்காது.
டெக்னீசியன்ஸ்…
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான் கிளாடி என்பவர் இயக்கியுள்ளார்.
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் என்பவர் தயாரித்து இருக்கிறார். இயக்குனரைப் போல இவருக்கும் இதுதான் முதல் படம்..
நாயகனின் நண்பராக ஜான் கிளாடி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.. நண்பனுக்காக உசுர கொடுக்கணும் நண்பனுக்கு பிரச்சனை வந்தா உசுர எடுக்கணும் என்பதாக திரைக்கதையை அமைத்து அமல் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்.
புறா காட்சிகளில் கிட்டத்தட்ட படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன..
இயக்குனரின் புறா பந்தய திரைக்கதைக்கு தங்கள் பங்களிப்பை அதிக அளவில் ஐவர் கொடுத்திருக்கின்றனர்.. இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், சண்டை பயிற்சியாளர் மற்றும் படத்தொகுப்பாளர்.
Producer – V.Durai Raj
Director – John Glady
DOP – A.V. Vasantha Kumar
Music director – Arun Raj
Editor – R.S.Sathish Kumar
Fight master – Vicky
Art directer – Anish
Choreography – Srikrish
SFX – Sathish
Sound design – Raja Nallaiah
Costume design – Dinesh ft
Makeup – Kumaresan
VFX – Sekar Murugan
Lyrics – Karthik Netha, Mohan Rajan, Pon manoban
வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நம்மை ஆச்சரியப்படுத்தும்.. முக்கியமாக இரவு நேரத்தில் புறாக்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போது நாயகன் டூவீலரில் சென்று கொண்டிருப்பார். அதை இரண்டையும் அழகாக கோர்த்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
இந்தப் படத்திற்காக நிறைய கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி இருக்கின்றனர். புறாக்களை வேட்டையாடும் பைரி அடித்து செல்லும் காட்சிகள் சிறப்பு..
கலை இயக்குனரும் பைட் மாஸ்டரும் தங்கள் பங்களிப்பை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கின்றனர்.. புறா வளர்க்கும் கட்டிட அமைப்பு அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்க இடம் என ஒவ்வொன்றையும் அழகாக வடிவமைத்து இருக்கின்றார் கலை இயக்குனர் அனீஸ்.
ஃபைட் மாஸ்டர் விக்கியும் ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் அனல் தெறிக்க வீச்சாக கொடுத்திருக்கிறார்.
தடம் படத்தில் அருமையான பாடல்களை கொடுத்து அருண் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல் ரகம்… முக்கியமாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் இவரது இசை நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.
ஜல்லிக்கட்டு – சேவல் சண்டை என பல படங்களில் நாம் பார்த்திருப்போம்.. ஆனால் இதில் புறா பந்தயத்தை வைத்து ஒரு புதுமையான திரைக்கதையை அமைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர் ஜான் கிலாடி.. இரண்டாம் பாகத்திற்கான அவர் வைத்த ட்விஸ்ட் வேற லெவல்..
பாகுபலி கட்டப்பாவை கொன்றது ஏன்? விவாதம் வந்ததைப் போல இந்தப் படத்தில் லிங்கம் வர மாட்டார் வரவே மாட்டார் என்ற கிளைமாக்ஸ் வசனங்கள் நிச்சயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்..
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை தொகுத்து அங்குள்ள மனிதர்களின் நடிக்க வைத்து ஒரு யதார்த்தமான சினிமாவை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதே சமயம் கேரக்டர்களில் நடித்த ஒவ்வொருவரையும் அழகாக பிரேமில் நிறுத்தி மக்கள் மனதிலும் நிற்க வைத்திருக்கிறார். படம் முடிந்து வரும்போது நிச்சயம் லிங்கா, அமல், சுயம்பு, சித்ரா, விஜி அம்மா & ரமேஷ் உள்ளிட்ட பல கேரக்டர்கள் உங்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கும்.
பெரும்பாலும் படத்தின் கதையை மையப்படுத்தி தலைப்பு இருக்கும் ஆனால் இதில் புறாக்களுக்கு எதிரியான பைரி-யை தலைப்பாக்கி ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைத்து விட்டார் ஜான் கிளாடி.
இந்தப் படத்தைப் பார்த்து வாங்கியே தீருவேன் என அடம்பிடித்த விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவர் ஒவ்வொரு படத்திற்கும் பக்கபலமாக இருந்து சக்திவேலன் பங்கேற்று பேசும் பேச்சும் கவனிக்கத்தக்கது.
இவரது முயற்சியால் இன்று பல சின்ன படங்களுக்கு முகவரி கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
எப்போது பைரி பட இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை இந்த பைரி ஒன்று நிச்சயம் ஏற்படுத்தும்.. பைரி படத்தின் மூன்றாம் பாகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..
DI – Get in dream studios
Co Director – Ganga Ram,
Associate Director – S. Panneer Selvam,
First Assistants – Mahesh Casber, Jaiso’n.
Executive producer – Pon Manoban, Dinesh Kumar
stills – A.J.J jovieh
Designs – Design point
Lyric video – Fix it in post Promotion
Production Manager – S.Mariyappan
PRO – Nikil Murukan
BYRI movie review and rating in tamil