காதலி-தோழி இடையே சிக்கிய யாழன் யார்.? பிருந்தா மாஸ்டர் சொல்லும் ‘ஹே சினாமிகா’

காதலி-தோழி இடையே சிக்கிய யாழன் யார்.? பிருந்தா மாஸ்டர் சொல்லும் ‘ஹே சினாமிகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர்.

குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) வெளியிடப்பட்டுள்ளது.

உற்சாகமிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது.

ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலலையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா, காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை டிரைலர் வெளிப்படுத்துவோடு படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

படம் குறித்து பேசிய பிருந்தா,….

“இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும்,” என்று கூறினார்.

‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ், உள்ளிட்ட பலர்

ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி

இசை: கோவிந்த் வசந்தா

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

எழுத்து & பாடல்கள்: மதன் கார்க்கி

கலை இயக்கம்: எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன்

சண்டை பயிற்சி: அஷோக்

நிர்வாக தயாரிப்பு: ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம்

இணை தயாரிப்பு: குளோபல் ஒன் ஸ்டூடியோஸ்

தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்

இயக்கம்: பிருந்தா

Youthful trailer of Brinda Master’s directorial debut ‘Hey Sinamika’ produced by Jio Studios launched

விஜய் அஜித் பெயரை இணைத்து புது ஹீரோ.; தன் மகனுக்காக கிராமத்து பாணியை தவிர்க்கும் தங்கர்பச்சான்

விஜய் அஜித் பெயரை இணைத்து புது ஹீரோ.; தன் மகனுக்காக கிராமத்து பாணியை தவிர்க்கும் தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்” படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாடல்களை கேட்டதும் வாங்கி கொண்டு பரபரப்பாக வெளியிட்டுள்ளது சோனி ஆடியோ நிறுவனம்.

தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

முதல் முறையாக தனது பாணியில் இருந்து மாறுபட்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்தவர் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது.

படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது.

இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளால் முதன் முறையாக வித்தியாசமாக எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் தங்கர் பச்சான்.

“தக்கு முக்கு திக்கு தாளம்
போடப்போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறன்டா!
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!

புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!.. என்று தங்கர் பச்சான் எழுதிய
இப்பாடல் வெளியானவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கர் பச்சானா இப்படி ஒரு பாட்டை எழுதினார் என்று வியந்து கேட்கிறார்கள். இப்பாடலை , பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். செம குத்து பாடலாக தரண்குமார் இசை அமைத்துள்ளார்.

தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள் .

ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவபாஸ்கரன். படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சக்தி செல்வராஜ்,நடனம் தினேஷ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா கையாள்கின்றனர்.
Pro:ஜான்சன்.
பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

விரைவில் அடுத்தடுத்த பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகும்.
சம்மர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார்கள்.

பாடல்:
PSN ENTERTAINMENT PVT. LTD
தங்கர் பச்சானின்
டக்கு முக்கு டிக்கு தாளம்

பாடல் 1
பாடல் ஆசிரியர்: தங்கர் பச்சான்
பல்லவி :
டக்கு, முக்கு, டிக்கு-டிக்கு
டக்கு, முக்கு, டிக்குத்தாளம்

ஏய் டக்கு, முக்கு, டிக்கு தாளம்
போடப்போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறன்டா!

கொஞ்சம் பவுடரத்தான் போட்டு
​​பளபளப்ப சேத்து!
எம்புஜ்ஜிப்பொண்ணு வந்துப்புட்டா
​​சுருசுருப்ப ஏத்து!

– டக்கு, முக்கு, டிக்கு தாளம்
போடப்போறேன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறேன்டா!

அனுபல்லவி :
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!

சரணம் :
ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்புப்போடுது
​கவ்வச்சொல்லி வெறிய ஏத்திப்பாக்குது
வெள்ள வவ்வா இடுப்பு துடுப்புப்போடுது
​கவ்வச்சொல்லி வெறிய ஏத்திப்பாக்குது

இப்போ கிஸ்சொன்னு தள்ளு,
​வடியுது ஜொள்ளு
என்னக் காயவச்சிப் பாக்காதடி
​எகிறிடும் பில்லு

இப்போ கிஸ்சொன்னு தள்ளு,
​வடியுது ஜொள்ளு
என்னக் காயவச்சிப் பாக்காதடி
​எகிறிடும் பில்லு
இப்போ கிஸ்சொன்னு தள்ளு,
​வடியுது ஜொள்ளு
என்னக் காயவச்சிப் பாக்காதடி
​எகிறிடும் பில்லு

ஏய் நண்பனுங்க ஒண்ணா இருந்தா போதுண்டா
சொத்து சொகம் வேற எதுக்கு வேணுண்டா
நீ போவ சொல்ல என்னாத்த எடுத்து போவடா
நாட்ட ஆண்டாலுமே பிரண்ட்ஷிப் இல்லாட்டி வேஸ்ட்டுடா
இதப்புரிஞ்சிட்டா மவுசு திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு
இதப்புரிஞ்சிட்டா மவுசு திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு

டக்கு டக்கு
டக்கு, முக்கு, டிக்குத்தாளம் போடப்போறேன்டா!
நம்ம நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு மாத்தப்போறேன்டா!

கொஞ்சம் பவுடரத்தான் போட்டு
​​பளபளப்ப சேத்து!
எம்புஜ்ஜிப்பொண்ணு வந்துப்புட்டா
​​சுருசுருப்ப ஏத்து!

சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!

Director Thangar Bachan’s next directorial is with his son

ரஜினி 169 படத்தில் ‘பீஸ்ட்’ பட பிரபலம்.; சிவகார்த்திகேயனும் இணைவாரா.?

ரஜினி 169 படத்தில் ‘பீஸ்ட்’ பட பிரபலம்.; சிவகார்த்திகேயனும் இணைவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு ரஜினியை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யார்? என்பதே கோலிவுட்டின் கேள்வியாக இருந்தது.

தேசிங்கு, பாண்டியராஜ், சிவா, கேஎஸ் ரவிக்குமார், பாலிவுட் இயக்குனர் பால்கி என பல இயக்குனர்களின் பெயர்கள் பேசப்பட்ட நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்குவது முடிவானது.

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படம் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தை இயக்கினார் நெல்சன்.

இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெறும் முன்னரே விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.

அதுபோல் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாகும் முன்னரே ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

‘தலைவர் 169’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பு இணையத்தில் வெளியான வீடியோவோ பெரும் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவே இதிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளாராம்.

இத்துடன் ரஜினி ரசிகரும் நடிகருமான சிவகார்த்திகேயனும் ‘தலைவர் 169’ படத்தில் இணைவார் என தகவல் வந்துள்ளன.

நெல்சனின் வழக்கம்போல பாடலாசிரியராக சிவா வருகிறாரா.? அல்லது நடிகராக வருகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Sivakarthikeyan be part of Thalaivar 169 ?

சாருஹாசன் & நிகில்முருகன் ஹீரோ..; ரீஎன்ட்ரி மோகனுக்கு மீண்டும் ஜோடியாகும் குஷ்பூ..; வித்தியாசமான விஜய்ஸ்ரீ

சாருஹாசன் & நிகில்முருகன் ஹீரோ..; ரீஎன்ட்ரி மோகனுக்கு மீண்டும் ஜோடியாகும் குஷ்பூ..; வித்தியாசமான விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு அறிமுக இயக்குனராக இருந்தாலும் பிரபல நடிகர்களின் படத்தை தான் முதலில் இயக்க ஆசைப்படுவார்கள். அப்போதுதான் தன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் தனக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என நினைப்பதுண்டு.

ஒருவேளை டாப் ஹீரோ கால்ஷீட் கிடைக்காவிட்டால் மற்ற நாயகர்களுடன் இணைவார்கள். ஆனால் எவரும் எதிர்பாராத நிலையில் 87 வயதான சாருஹாசனை (கமல் அண்ணன்) வைத்து கடந்த 2019ல் தாதா 87 என்ற படத்தை இயக்கினார் விஜய்ஸ்ரீ ஜி.

அதற்கு முக்கிய காரணம் இவர் தன் கதை மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. மேலும் இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இத்துடன் மேலும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.

அண்மையில் தாதா 87 படத்தை தழுவி ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’ என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அடுத்த அதிசயத்தை திரையுலகில் நிகழ்த்தவுள்ளார் விஜய்ஸ்ரீ.

பிரபல மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) நிகில் முருகனை ஹீரோவாக்கி ‘பவுடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார்.

இந்த படம் மார்ச் மாதம் 2வது வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் ‘பப்ஜி’ என்ற படமும் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் 1980களின் பிரபல ஹீரோவான மோகனுக்கு ரீஎன்ட்ரி கொடுத்து ‘ஹரா’ என்ற படத்தை இயக்கவுள்ளார் விஜய்ஸ்ரீ. அதிலும் மோகனை ஒரு ஆக்சன் ஹீரோவாக காண்பிக்கவுள்ளார்.

மோகனுக்கு ஜோடியாக குஷ்பூவை ஒப்பந்தம் செய்யவுள்ளார். விஜய்ஸ்ரீ கூறிய கதையும் அவர் சொன்ன விதமும் தன்னை கவர்ந்துவிட்டதாக குஷ்பூவும் தெரிவித்திருந்தார்.

மோகன் குஷ்பூ இருவரும் தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் தெலுங்கில் (1988) ஆத்ம கதா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இத்துடன் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை வித்தியாசமான கோணத்தில் படமாக்கவிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ.

நிஜமாகவே வித்தியாசமான சிந்தனை கொண்டவர் தான் டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி என்று சொன்னால் அதுமிகையல்ல.

Kushboo to pair up with Mohan for the second time

அனிருத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அனிருத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தன் கணவரும் நடிகருமான தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி தற்போது ஒரு மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே தனுஷ் நடித்த 3 மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முஷாஃபிர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள மியூசிக் ஆல்பத்தின் டீஸரை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழில் அனிருத் பாடியுள்ளார். தெலுங்கில் சாகர் மற்றும் மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர்கள் பாடியுள்ளனர்.

இந்த ஆல்பத்திற்கு அன்கித் திவாரி என்பவர் இசையமைக்க பே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.

Anirudh and Aishwarya Rajinikanth joins for music album

ஒருவழியாக விக்ரமின் ‘கோப்ரா’ ஓவர்..; அஜய் ஞானமுத்து ஹாப்பி

ஒருவழியாக விக்ரமின் ‘கோப்ரா’ ஓவர்..; அஜய் ஞானமுத்து ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்க தொடங்கிய படம் ’கோப்ரா’.

இதில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், கனிகா, மிருளாணி ரவி, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு சூழ்நிலையால் இப்பட சூட்டிங் தள்ளிக் கொண்டே போனது.

சில நாட்களுக்கு முன் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் இல்லாத காட்சிகளையும் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளில் என் மேல் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

’கோப்ரா’ பட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

Chiyaan Vikram’s Cobra Shoot Completed

More Articles
Follows