தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தன் உடல்நிலை காரணமாகவும் அரசியல் பிரவேசத்தில் இருந்து பின் வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.
தன் உடல்நிலையை கவனிக்கும் மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கையாக தெரிவித்தார் ரஜினி.
இதனால் தங்களின் 25 ஆண்டு கனவு கோட்டை நொறுங்கிவிட்டதாக ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
தங்களுக்கு அரசியல் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாகவும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைக்கவும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வருகிற ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டம் “அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள்” அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் விடுத்துள்ள அறிக்கையில்:
”ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினருக்கு வணக்கம்.
நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல்.
*இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.*
நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு சுதாகர் தன் கைப்பட கடிதம் எழுதி அறிக்கையாக வெளியிட்டார்.
இது வெளியான சில மணி நேரங்களில்… “தலைவரை அரசியலுக்கு அழைக்கும் நாங்கள் நிதி வசூல் செய்கிறோமா? என ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.
இதனையடுத்து.. “நிதி வசூல் என்கிற எனக்கு வந்த செய்தியை அறிக்கையாக வெளியிட்டேன். அது அனைத்து ரஜினி ரசிகர்களையும் குறிப்பிடுவதாக சிலர் திசை திருப்புகின்றனர்.
யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்” என தன் ட்விட்டரில் மன்னிப்பு கடிதம் வெளியிட்டார் சுதாகர்.
ஆனாலும் “ஜனவரி 10ல் அறவழிப் போராட்டம்” நடந்தே தீரும் என ரஜினி ரசிகர்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் போராட்டம் வேண்டும் எனவும் மறுபக்கம் ரஜினி மன்றத்தினர் போராட்டம் வேண்டாம் எனவும் பிளவுப்பட்டு நிற்கின்றனர்.
தானா சேர்ந்த ரஜினி சாம்ராஜ்யம் சரிந்து விழுகிறதா? என்கிற சந்தேகம் தற்போது நடுநிலையார்களுடன் எழத் தொடங்கியுள்ளது.
45 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ரஜினி இமேஜ் தற்போது டேமேஜ் ஆகி வருவதை சூப்பர் ஸ்டார் சரி் செய்வாரா? என்பதை பார்ப்போம்.
Wll rajinikanth breaks his silence ?