தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வில்லு படத்தில் பணி புரிந்த போது டைரக்டர் பிரபுதேவாவுக்கும் நாயகி நயன்தாராவுக்கும் லவ் ஆனது.
அதன்பின்னர் நயன்தாராவை திருமணம் செய்ய தன் காதல் மனைவியை விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா.
அதன்பின்னர் என்ன ஆனதோ? இவர்களின் காதல் பிரேக் அப் ஆனது.
தற்போது விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் காட்டி வருகிறார் நயன்தாரா.
அவரை தன் வருங்கால கணவர் என்ற முறையிலேயே ஒரு பொது மேடையில் பேசினார்.
இந்நிலையில் விசுவாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள ஒரு படத்தை பிரபுதேவா இயக்கவிருக்கிறாராம்.
இது தொடர்பாக அஜித்தை அடிக்கடி பிரபுதேவா சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.
ஒருவேளை இது உறுதியானால் இப்பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
சிம்பு உடன் காதல் முறிவுக்கு பின்னர் அவருடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.
எனவே பிரபுதேவா உடன் அவர் நிச்சயம் இணைந்து பணி புரிவார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அதெல்லாம் சரிதான். விக்னேஷ் சிவன் ஒத்துக் கொள்வாரா பாஸ்..?
Will Vignesh Shivan accept Prabudeva Nayanthara new project