தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரள மாநில சபரிமலையில் உள்ள உலக புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
பெண்களின் மாதவிடாய் பிரச்சினை காரணமாக இக்கோயிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீக மரபு இது என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என மகளிர் அமைப்புகள் பெரும் போராட்டங்கள் நடத்தினர்.
மக்களில் ஒரு பிரிவினர் இதற்கு ஆதரவு அளித்தாலும் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மலையாளத்தில் அண்மையில் வெளியான ‘மாளிகாப்புரம்’ என்ற படத்தில் பெண்கள் கோயிலுக்குள் செல்வது குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பிரச்சனை தொடர்பாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..
“பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்.
ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை.
அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது தான்.”
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
Which god said that.? Actress Aishwarya Rajesh bold reply