தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இந்த உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSI க்கு நடிகர் ரஜினி 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார். மற்ற சினிமா சார்ந்த சங்கங்களுக்கு அவர் உதவி தொகை எதுவும் வழங்கவில்லை.
மேலும் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் PM Cares நிதிக்கும் அவர் நிவாரணம் எதையும் இன்று வரை வழங்கவில்லை.
இந்த நிலையில் சினிமா சார்ந்த 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியிருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
இந்த உதவி தகவலை எந்த மீடியாவுக்கும் செய்தி கொடுக்க வேண்டாம் என்று தான் கூறியிருந்தாராம்.
ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் ரஜினிக்கு நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது பற்றி இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.
“ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!
இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.
அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!” என பேரரசு தெரிவித்துள்ளார்.
We Disobeyed Rajinis order says director Perarasu