தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடெங்கிலும் அமலில் உள்ளது.
இதனால் சாலையோர மக்கள் மற்றும் தினம் வருமானத்தை நம்பியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தேவையை அறிந்து உணவளிப்பதும், காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களை சில தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
மேலும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
ஆனால் தன்னார்வலர்கள் நேரிடையாக உதவ கூடாது. அவர்கள் பொருட்கள் கொடுக்கத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஒரு நல்ல யோசனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகரும்
இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.
அவரின் அறிக்கையில்…
கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்!
அதே சமயம், கொரேனா ஊடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு
“இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ, உணவுப் பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது” என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில்……
அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களைத் தந்திட இயலாது என்பதே எதார்த்தம்
அவ்வகையில், ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் எனும் நல்லெண்ணத்திலேயே, நான் கடந்த வாரம் கரோனா தடுப்பு நிவாரண நிதியை அளித்த கையோடு அடுத்த கட்டமாக வருகிற 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு முதல் நானும் எனது நண்பர்களும், தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சில சேவை திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறோம்.
இந்த தடை உத்தரவு என் போன்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம், தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருட்களை வழங்குகிற நடைமுறையில் இன்னும் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதனை காவல்துறையினரின் துணையோடு கடைப்பிடிக்குமாறு உத்தரவிடலாம்!
காய்கறி பழங்களை இலவசமாகக் கொடுக்கக் கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிறவர்கள் இருக்கிற இதே நாட்டில்தான், அன்பை அளவில்லாமல் கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அதனால்…..
தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்களை மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Volunteers must stop helping Lawrence refuse and request to Govt








