மீண்டும் மோகன் லாலுடன் இணைந்தார் அஜித் பட வில்லன்

மீண்டும் மோகன் லாலுடன் இணைந்தார் அஜித் பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlalமலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்திவிராஜ் மோகன்லாலை ஒரு படத்துக்காக இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ‘லூசிஃபர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதில் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், மம்தா மோகன் தாஸ், சான்யா, மற்றும் பிருத்திவிராஜின் சகோதரர் இந்திரஜித் ஆகியோர் நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

விவேக் ஓபராய் சமீபத்தில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே மோகன்லாலும், விவேக் ஓபராயும் ராம்கோபால் வர்மா ஹிந்தியில் இயக்கிய ‘கம்பெனி’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அந்த படம் 2002-ல் வெளியானது. இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘லூசிஃபர்’ மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

பொலிடிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் ‘லூசிஃபரி’ன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

ஆசிரியையாக நடிப்பது சவால்தான்; பயப்படாத *பைரவா* நாயகி அபர்ணா !

ஆசிரியையாக நடிப்பது சவால்தான்; பயப்படாத *பைரவா* நாயகி அபர்ணா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aparna vinodஅபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின.

ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது பரத்தின் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

“நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது.

அது தான் ‘ஞான் நின்னோடு’, ‘கோஹினூர்’ போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜயின் பைரவாவில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த 22 வயதான அபர்ணா வினோத்.

பரத் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க எவ்வாறு தேர்வானார் என்று அவரே விவரிக்கும்போது,..

“இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர்.

இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான்
நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது.

இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

கடவுளுடைய சொந்த தேசத்தில் அவரது சக நடிகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதை அவரே விசேஷமாக விவரிக்கவும் தவறவில்லை. ”

அவரது ‘4 தி பீப்புள்’ வெற்றி பெற்றதிலிருந்தே, அவர் அங்கு மிகவும் பிரபலமான நடிகர்.

கண்டேன் காதலை படத்தில் அவரது நடிப்பை நான் பார்த்திருந்தேன், அவர் காட்சிகளுக்கு தேவையான மிகவும் யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார்.

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் பெயரிடப்படாத இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் நடிகர் ஷரண் (இனிது இனிது மற்றும் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க இருக்கிறது.

கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்

கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanne kalaimaaneதிரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல்.

அத்தகைய படைப்புகள் ஒவ்வொரு சினிமா துறையிலும் இருக்கும், அவை அவர்களுக்கு பெருமையையும் மரியாதையையும் கொண்டுவரும். சந்தேகமே இல்லாமல், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எப்பொழுதும் அந்த தளத்திலேயே உயரிய திறமையோடு இருக்க முயற்சிப்பவர் என்று சொல்லலாம்.
மிகவும் குறிப்பாக, அத்தகைய படைப்புகள் இசை என்னும் மந்திரத்தால் மிகவும் அழகாக இருக்கின்றன.

தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை தன் முந்தைய படங்களில் நமக்கு பரிசாக அவர் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது.

குறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த தர்மதுரையை சொல்லலாம்.

அதே கூட்டணி ‘கண்ணே கலைமானே’ என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் வேளையில், தமிழ் சினிமாவில் இருந்து அந்த படம் ஒருபோதும் மங்காது, எதிர்பார்ப்புகள் மிகப்பெரியவை.

ஏன் என்றால், பாடல் வரிகளின் பேரரசர் கவிப்பேரரசு வைரமுத்துவாக இருந்தால். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த கூட்டணியின் காரணிகள், இயற்கையாகவே அனைவரின் எதிர்பார்ப்பையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளன. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

நல்ல குழுவுடன் இணைந்து மிகச்சிறந்த இசை ஆல்பங்களை வழங்குவதற்காக நன்கு அறியப்பட்ட இந்த நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.

தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என் குடும்பத்திலிருந்து வந்த டார்ச்சர் பிரேம்ஜிதான்… – வெங்கட் பிரபு

என் குடும்பத்திலிருந்து வந்த டார்ச்சர் பிரேம்ஜிதான்… – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabhuரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் “பேய் பசி” இதில் யுவனின் சகோதரர் ஹரிகிருஷ்ணா நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் கருணாகரன்,டேனியல் பாலாஜி, அம்ருதா, ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

“ஒரு ஷாப்பிங் மாலில்” நாயகன் மற்றும் நாயகி மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு இரவில் அவர்களுக்கு அங்கு நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களே படத்தின் திரைக்கதை.

இதில் பேய் இல்லை. ஆனால் திரில்லிங்கான சம்பவங்கள் இருக்கிறது. இது ரசிகர்களை ஈர்க்கும்.’ என்றார்.

இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன். ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர்கள் நலன் குமாரசுவாமி, வெங்கட்பிரபு, கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர் காரகட்ட பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்..

“ஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம்.

ஏற்கெனவே எங்கள் குடும்பத்தில் இருந்த டார்ச்சர் பிரேம்ஜி வந்துவிட்டார். அது போதும்.

அதன் பிறகு ஹரி தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்த பேய்பசி படம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி.

இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விஷுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.” என்று பாராட்டினார்.

நயன்தாரா-அனிருத் கூட்டணியில் ரஜினி ரசிகன் *பிஜிலி ரமேஷ்*

நயன்தாரா-அனிருத் கூட்டணியில் ரஜினி ரசிகன் *பிஜிலி ரமேஷ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

coco posterநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‘கபீஸ்கபா’ என்ற பாடலின் புரமோ வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார்.

இதில் சமீபகாலமாக யூ-டியூபில் மிகவும் பிரபலமான ரஜினி வெறியர் பிஜிலி ரமேஷ் நடனமாடியுள்ளார்.

அவருடன் லொள்ளு சபா மனோகர், தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடனமாடியுள்ளனர்.

இனி இந்த பாடலும் வைரலாகும் என்பதில் ஐயமில்லை.

தல-தளபதிக்கு இப்படி செய்வீர்களா சித்தார்த்..?; சூடான பிரபாஸ் ரசிகர்கள்

தல-தளபதிக்கு இப்படி செய்வீர்களா சித்தார்த்..?; சூடான பிரபாஸ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharthசினிமாவில் சைலண்டாக நடித்தாலும் அவ்வப்போது பொது வாழ்க்கையில் சில சர்ச்சையான கருத்துக்களை பேசுபவர் நடிகர் சித்தார்த்.

அண்மையில் ‘பாகுபலி’ புகழ் பிரபாசுக்கு அவரது ரசிகர்கள் இன்னும் 100 நாட்களில் பிறந்தநாள் வரவுள்ளதாக கூறி ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.

இதை பார்த்த சித்தார்த் சும்மா இல்லாமல் பிரபாசின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை பகிர்ந்தார்.

இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர்.

பிரபாஸைக் கிண்டல் செய்வதைப் போல தல தளபதிக்கு இப்படி கூற முடியுமா? என கேட்கத் தொடங்கினர்.

அதற்குப் பதிலளித்த சித்தார்த், “இது வெறும் காமெடிக்காக போட்ட பதிவுதான். நகைச்சுவையை நகைச்சுவையாகவே கருத வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.

More Articles
Follows