அமலாபாலுடன் இணையும் விவேக்-ரோபா சங்கர்

அமலாபாலுடன் இணையும் விவேக்-ரோபா சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek robosankarசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், விவேக், மாளவிகா உள்ளிட்டோர் நடித்த படம் திருட்டு பயலே.

பெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த கூட்டணியில் அண்மையில் அமலா பால் ஒப்பந்தம் ஆனார்.

தற்போது இவர்களுடன் விவேக் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் இணைய உள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

‘கமல்ஹாசனை பிரிகிறேன்…’ கௌதமி அதிரடி அறிவிப்பு!

‘கமல்ஹாசனை பிரிகிறேன்…’ கௌதமி அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal gautamiநடிகர் கமல்ஹாசன் வாணி கணபதி என்பவரை 1978ல் திருமணம் செய்தார். பின்னர் 1988இல் விவாகரத்து பெற்றனர்.

அதன்பின்னர் சரிகாவை காதலித்து அதே ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு ஸ்ருதி, அக்ஷராசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் பணியாற்றி வருகின்றனர்.

பின்னர் சரிகாவை 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் நடிகை கௌதமியுடன் கடந்த 12 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார் கமல்.

இந்நிலையில் தற்போது கமலை பிரிய உள்ளதாக கௌதமி தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பக்கம் இதோ…

நானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்க போவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன்.

13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதை கருதுகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.

ஒரு குழந்தைக்கு தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அந்த கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்து, எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்கு தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.

சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து, அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன்.

சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாக கருதுகிறேன்.

அவருடையை படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்று கொண்டு, அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.

இதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்து, அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளை புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால் அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்து தெரிவிக்க நான் காத்திருக்கிறேன்,

பல வகைகளில் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் நடப்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

Life and decisions

It is heartbreaking for me to have to say today that I and Mr. Haasan are no longer together. After almost 13 years together, it has been one of the most devastating decisions that I have ever had to make in my life. It is never easy for anyone in a committed relationship to realise that their paths have irreversibly diverged and that the only choices in front of them are to either compromise with their dreams for life or to accept the truth of their solitude and move ahead. It has taken me a very long time, a couple of years at the very least, to accept this heartbreaking truth and come to this decision.

It is not my intention to seek sympathy or assign blame. I have understood through my life that change is inevitable and human nature will define that change for each individual. Not all of these changes might be what we expect or anticipate but that does not, in any way, negate the very real impact of these diverging priorities in a relationship. This decision to set forth on my own at this stage in my life is perhaps one of the most difficult decisions any woman will ever have to make but it is a necessary one for me. For I am a mother first and foremost and I have a responsibility to my child to be the best mother that I can be. And to do that, it is essential that I am at peace within myself.

It is no secret that I have always been a fan of Mr. Haasan’s since before I came to the film industry and I continue to admire and cheer on his monumental talent and achievements. I have stood by him through all his challenges and they have been precious moments for me. I have also learned a great deal from working with him as costume designer on his films and I’m proud that I was able to do justice to his creative vision in those films. Along with all of his accomplishments to date, I know that there is much more to come from him for his audience and I look forward to applauding those successes.

I would like to say that I am sharing this monumental happening in my life because I have always lived my life in your midst, with dignity and grace to the best of my ability at all times, and all of you have been a part of my life’s journey in so many ways. I have received so much of love and support from you through the past 29 years and I would like to thank you for the many ways in which you kept me going through the darkest and most painful times in my life.

With love and regards,

Gautami

கேரளாவிலும் கேப்டன்… விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா ஜெயசூர்யா?

கேரளாவிலும் கேப்டன்… விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா ஜெயசூர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanth and jayasuriyaதமிழகத்தில் கிரிக்கெட் பேமஸ் என்றால், கேரளத்தில் புட்பால்தான்.

பெரும்பாலான இளைஞர்கள் அங்கு ஓடிஆடி கால்பந்து விளையாடுவதை பார்க்கமுடியம்.

இந்நிலையில், கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் அவர்களின் வாழ்க்கை பற்றி ஒரு படம் உருவாகவிருக்கிறது.

பிரஜேஷ் சென் இயக்கவுள்ள இப்படத்தில் நாயகன் ஜெயசூர்யாதான்.

ஜெயசூர்யாவை வைத்துதான் கதையை எழுதினேன் என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர்.

கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக போகிறார்களாம்.

தமிழ்நாட்டுக்கு கேப்டன் என்றால் அது விஜயகாந்துதான். அதுபோல் கேரளாவின் கேப்டனாக ஜெயசூர்யா ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷின் ‘பவர் பாண்டி’யில் கூடுதல் பவராக செல்வராகவன்

தனுஷின் ‘பவர் பாண்டி’யில் கூடுதல் பவராக செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaraghavan joins with dhanush in Power Paandiதனுஷ் முதன்முறையாக இயக்கி வரும் படம் பவர் பாண்டி.

இதில் அவரும் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மடோனா நடிக்கிறார்.

இவர்களுடன் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இணைந்திருக்கிறார்.
அவர் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறாராம்.

அதுவும் பத்தே நிமிடத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எந்திரனை மிஞ்சும் ‘2.ஓ’… ரஜினி ரசிகர்களுக்கு அதிரடி தகவல்கள்

எந்திரனை மிஞ்சும் ‘2.ஓ’… ரஜினி ரசிகர்களுக்கு அதிரடி தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ.

ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் முதல் பாகமான எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என இருவேடங்களில் ரஜினி நடித்திருப்பார்.

ஆனால் தற்போது அதனை மிஞ்சும் வகையில் இதில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறாராம்.

முதல் பாகத்தில் இறந்த வில்லனின் மகனாக சுதன்ஷூ பாண்டே நடித்திருக்கிறார்.

இவர் சிட்டி ரோபோவின் CODE-களை வைத்து புதிதாக ஒரு பவர்புல் ரோபோவை உருவாக்குகிறார்.

அதன்பின்னர் கெட்ட சிட்டி மற்றும் அக்‌ஷய்குமார் ஆகிய இரு ரோபோக்களை நல்ல ரஜினி ரோபா எப்படி அழிக்கிறார்?

அதற்கு சயின்ஸ்ட் வசீகரன் எப்படி உதவுகிறார் என்பதுதான் இதன் கதைக்களம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதில் ஆறு பாடல்கள் இடம் பெற்றாலும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க ஒரே ஒரு பாடலைதான் படத்தில் வைக்கவிருக்கிறார் ஷங்கர் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo movie stillsபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் 25வது நாளை இவரது ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் இந்த வெற்றியை கருணை இல்லங்களில் கொண்டாடி உள்ளனர்.

அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் தீபாவளி பட்டாசுகளை வழங்கியுள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் நிச்சயம் அவர்களது அபிமான நடிகர்களை பெருமையடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More Articles
Follows