தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வெள்ளியன்று விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, விஜய் யேசுதாஸின் ‘படை வீரன்’, சண்முகப் பாண்டியனின் ‘மதுர வீரன்’, சமுத்திரகனியின் ‘ஏமாலி’ ஆகிய படங்களோடு புதுமுக நடிகர்கள் நடிப்பில் ‘விசிறி’ என்ற படம் வெளியானது.
இப்படத்தை ‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் என்பவர் இயக்கியிருந்தார்.
தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் ரசிகர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.
இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைத்தாலும், போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என இப்பட இயக்குனர் வெற்றி மகாலிங்கம் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது.. எங்கள் ‘விசிறி படத்தை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட திட்டமிட்டு அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கினோம்.
ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
சின்ன படத்துக்கு ஆதரவு அளிப்போம் என பல சங்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். ஆனால், யாருமே உதவவில்லை.” என்றார்