‘தெய்வ மச்சான்’ விமலுக்கு கை கொடுத்த ‘விடுதலை’ நாயகர்கள்

‘தெய்வ மச்சான்’ விமலுக்கு கை கொடுத்த ‘விடுதலை’ நாயகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர்.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’.

இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார்.

தெய்வ மச்சான்

எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘தெய்வ மச்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

முன்னோட்டத்தில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பி வி ஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இதனிடையே விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ எனும் இணையத்தொடர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

vimal’s Deiva Machan trailer released

மக்களுடன் ‘எவன்’ படம் பார்த்து ரசித்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன் திலீபன்

மக்களுடன் ‘எவன்’ படம் பார்த்து ரசித்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன் திலீபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’.

அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

நாயகியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஜே கே சஞ்சீத், உஜ்ஜைனி, ராய், கானா பாலா, பாண்டி, ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எவன்

ஜி. சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசை யமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன் விவேகா கானா பாலா ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 7 தேதியான இன்று படம் திரையரங்கில் வெளியானது. மக்களுடன் மக்களாக நடிகர் திலீபன் புகழேந்தி ஆல்பட் தியேட்டரில் படம் பார்த்தார்.

எவன்

Pulaimaipithan grand son Dhileepan watched Yevan movie with Public

‘விக்ரம்’ டைட்டிலை அடுத்து ‘ரஜ்னி’ டைட்டிலில் நடிக்கும் காளிதாஸ்

‘விக்ரம்’ டைட்டிலை அடுத்து ‘ரஜ்னி’ டைட்டிலில் நடிக்கும் காளிதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர் ரஜ்னி”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.

அவள் பெயர் ரஜ்னி

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவள் பெயர் ரஜ்னி

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான கச்சிதமான போஸ்டராக ஆவலை தூண்டும் வகையில் இப்போஸ்டர் அமைந்துள்ளது.

சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அவள் பெயர் ரஜ்னி

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வெளியாகும்.

எழுத்து இயக்கம் : வினில் ஸ்கரியா வர்கீஸ்
தயாரிப்பு : ஸ்ரீஜித் K.S மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித்
ஒளிப்பதிவு : RR விஷ்ணு
இசை : 4 மியூசிக்ஸ்
எடிட்டர்: தீபு ஜோசப்
வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் K ராஜன்
கலை இயக்குனர்: ஆஷிக் S
கிரியேட்டிவ் டைரக்டர்: ஸ்ரீஜித் கோடோத்
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஆக்‌ஷன் நூர், K கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள்
புரடக்சன் கண்ட்ரோளர் : ஜாவேத் செம்பு
முதன்மை இணை இயக்குநர்கள்: வினோத் PM, விஷக் R வாரியர்
இணை தயாரிப்பாளர்: அபிஜித் S நாயர்
தயாரிப்பு நிர்வாகி: K சக்திவேல்
ஒலி வடிவமைப்பாளர்: ரெங்கநாத் ரவி
DI : ரமேஷ் C P
ஸ்டில்ஸ்: ராகுல் ராஜ் R
புரமோஷன் ஸ்டில்ஸ் : ஷஃபி ஷக்கீர்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
டிஜிட்டல்: ரஞ்சித் M
டிசைன்ஸ்: 100 டேஸ்

அவள் பெயர் ரஜ்னி

Aval Peyar Rajni First Look Revealed

தென் ஆப்ரிக்கா ரயிலில் சண்டை போடும் ‘இந்தியன்’

தென் ஆப்ரிக்கா ரயிலில் சண்டை போடும் ‘இந்தியன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தைவான் நாட்டிற்கு கமல்ஹாசன், ஷங்கர் உள்பட படக்குழுவினர் சென்று இருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் தைவான் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தைவான் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 2’ பட குழுவினர் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு அதிரடி ஆக்சன் ரயில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், தென் ஆப்பிரிக்க படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal’s ‘Indian 2’ movie Taiwan schedule completes

விக்ரம் ரசிகர்களே.. தங்களுக்கு தங்கலானின் தங்கமான அப்டேட் இதோ..

விக்ரம் ரசிகர்களே.. தங்களுக்கு தங்கலானின் தங்கமான அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’.

இப்படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தங்கலான்

தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் என்று கூறப்படும் கோலார் தங்க வயலில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

இந்த நிலையில், கோலார் தங்க வயலில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது என கூறப்படுகிறது.

தங்கலான்

Vikram starrer ‘Thangalaan’ KGF schedule wrapped up

BREAKING மருத்துவமனையில் குஷ்பூ அட்மிட்.; மக்களுக்கு அட்வைஸ்

BREAKING மருத்துவமனையில் குஷ்பூ அட்மிட்.; மக்களுக்கு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை, தயாரிப்பாளர், தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் என பன்முகம் கொண்டவர் நடிகை குஷ்பூ.

நடிகை குஷ்பூ காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக தற்போது ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில், குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், “கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் நிலை கடுமையாக பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளேன். விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால் அது நீண்ட நாட்களாகும் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

குஷ்பூ விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Khusbhu admitted to the hospital

More Articles
Follows