தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்க்கு தமிழகத்தை போல் கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அவரின் தீவிர ரசிகர்கள் கேரளாவின் சில பகுதிகளில் விஜய்க்கு சிலையும் வைத்துள்ளனர்.
இதில் சரண்யா என்ற விஜய் ரசிகை தன் தோழிகளிடம் தான் விஜய் அண்ணாவை நேசிப்பதாக கூறியுள்ளார். அடிக்கடி அவர் விஜய்யை பற்றியே பேசிக் கொண்டிருப்பாராம்.
எப்படியாவது ஒருநாள் விஜய் அண்ணனுடன் நான் போட்டோ எடுத்துக்கொள்வேன் என்றும் கூறினாராம்.
அதெல்லாம் உன்னால சத்தியமா முடியாது. என தோழிகள் இவரை நக்கலடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர் போராடி விஜய்யுடன் ஒரு போட்டோவை ஒன்றை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில்… விஜய் அண்ணாவை பார்த்தபோது ஒருநிமிடம் ஷாக் ஆகிவிட்டேன்.
அவர் என்னை அவர் அருகில் வரச் சொன்னார். பின்னர் அழகாக சிரித்துக் கொண்டே கேமராவிற்கு என்னை போஸ் கொடுக்கச் சொன்னார்.
அப்போது நான் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது” என பதிவிட்டுள்ளார்.