தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மற்றும் வைரங்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து வைரங்களும் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.் மேலும் அவர் 1 கோடியில் வாங்கிய வீடும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு சினிமா பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு தென்னிந்தியாவில் முன்னணி பாடகராக இருப்பவர் யேசுதாஸின் 2வது மகன் விஜய் யேசுதாஸ்.
இவர் சில படங்களில் நடித்தும் வருகிறார். ‘மாரி’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் யேசுதாஸ்.
இந்த நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள, பாடகர் விஜய் வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் நகைகள் கடந்த டிசம்பர் மாதம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திருட்டு விவகாரம் பிப்ரவரியில்தான் தெரியவந்ததாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தில் வீட்டு பணியாளர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vijay Yesudas house burgled 60 sovereign gold stolen