நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை.; யாரை பற்றி சொன்னார் விஜய்சேதுபதி.?

நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை.; யாரை பற்றி சொன்னார் விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம்.

இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது…

கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன்.

நீங்கள் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது.

தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றி தான். திரையரங்குகளில் இந்தப்படம் நன்றாகவே போனது ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது.

அந்த நேரத்தில் தான் ஆஹா ஓடிடி வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரும் பார்த்து பாராட்டுகிறார்கள்.

இதற்காக தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் கண்டுகளிக்ககலாம்.

திரையரங்கில் என்ன குவாலிட்டியில் படம் இருந்ததோ அதே போல் ஓடிடியிலும் உள்ளது. தயாரிப்பாளர் யுவன் அவர்களுக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது…

இந்தப்படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகிவிடுவான்.

மாமனிதன் குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை.

சீனு ராமசாமி சார் போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப்படம் நான் டப்பிங் பண்ணும் போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப்படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும். இந்தப்படத்தை ஆஹாவில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

ஸ்டூடியோ 9 பிரசாத் பேசியதாவது… ஆர்.கே. சுரேஷ் அவர்கள் ஷீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. மாமனிதன் ஒரு அருமையான படைப்பு. மக்கள் செல்வன், மக்கள் இயக்குநர், யுவன் ஆகியோர் தான் இந்தப்படத்தை வெளியிட முக்கிய காரணம்.

தர்மதுரை போல் இந்தப்படத்தையும் மக்களிடம் சேர்த்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தான் ஆர் கே சுரேஷ் இந்தப்படத்தை வெளியிட்டார். திரையரங்கில் மக்கள் கொண்டாடிய ஒரு படத்தை ஆஹா இப்போது உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறது. ஆஹாவிற்கு மிகப்பெரிய நன்றி.

Vijay Sethupathi speech at Maamanithan Success Meet

வசனகர்த்தா பிருந்தா சாரதியின் வாழ்க்கையை மாற்றிய ‘வாரியர்’ லிங்குசாமி

வசனகர்த்தா பிருந்தா சாரதியின் வாழ்க்கையை மாற்றிய ‘வாரியர்’ லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமியின் ‘வாரியர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

படம் வரும்வரை அச்செய்தியை வெளிப்படுத்தாமலேயே வைத்திருந்தேன்.

நேற்று திரையரங்குகளில் ‘வாரியர்’ படம் பார்த்த முகநூல் நண்பர்கள் பலரும் வாட்ஸ் ஆப்,, மெசஞ்சர் மூலம் வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர். அனைவருக்கும் நன்றி.

எனக்குள் ஒரு நடிகனைப் பார்த்த இயக்குனர் நண்பர் லிங்குசாமிக்கு என் பிரத்யேக நன்றி. தயக்கத்துடன்தான் நடிக்கத் துவங்கினேன்.

நடிகருக்கான திரைத்தோற்றம் – screen presence – நன்றாக இருக்கிறது என்று நாயகன் ராம் கூறியது நம்பிக்கை அளித்தது. வில்லனாக நடித்த ஆதி அவருடன் நடித்த காட்சியில் சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.

பொதுவாகக் காட்சிகளைப் படமாக்கும் முன் ஒரு வசனகர்த்தாவாக நான் போய் நடிகர்களுக்குக் காட்சிகளை விளக்கி வசன உச்சரிப்பு கூறி பயிற்சி அளிப்பது வழக்கம். ஆனால் நானே ஒரு நடிகனாக கேமரா முன் நின்றதும் வார்த்தைகள் சரளமாக வராமல் தந்தி அடித்தன.

இணை, உதவி இயக்குநர்கள் அனைவருமே நண்பர்கள். கிண்டலடித்துக்கொண்டே உற்சாகத்தையும் கொடுத்தார்கள். நண்பரே இயக்குனர் என்பதால் டென்ஷன் ஆகாமல் இருந்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடித்தேன்.

முதல் ஷாட் நடித்து முடித்ததும் கட் சொல்லிவிட்டு ‘குட்’ என்று கைகொடுத்தார் லிங்குசாமி . அது நண்பராகவா? இயக்குனராகவா? என்று தெரியவில்லை. ‘உண்மையிலேயே நல்லா பண்றீங்க’… என்றார். நம்பிக்கை வந்தது.

இப்படியாக ஒரு நடிகன் எனக்குள் இருந்து பிறந்திருக்கிறான். படம் பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்திலும், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் ‘பீச்’ படத்திலும் நடித்து வருகிறேன்.

இது ஒரு புதிய பாதை…. புதிய பயணம்… வேறொரு மனிதனாக வாழும் அனுபவம் நன்றாகத்தான் இருக்கிறது. கூடு விட்டுக் கூடு பாயும் அனுபவம் இது. தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ஒரு மருத்துவராக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

‘வாழ்க்கை ஒரு நாடகமேடை நாம் அதன் பாத்திரங்கள்’ என்ற ஷேக்ஸ்பியர் வாசகத்தை இன்று நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.
*
அன்புடன்,
பிருந்தா சாரதி
*
வாரியர் திரைப்படத்தில் நாயகன் ராமுடன் பிருந்தா சாரதி.

Brindha Sarathy

Dialogue writer Brindha Sarathy talks about Warriorr movie

‘சந்திரமுகி-2’ சூட்டிங் அப்டேட் : ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்ற லாரன்ஸ்

‘சந்திரமுகி-2’ சூட்டிங் அப்டேட் : ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்ற லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்த படத்தையும் இயக்குகிறார்.

முதல் பாகத்தில் ரஜினியுடன் நயன்தாரா ஜோதிகா பிரபு விஜயகுமார் வடிவேலு நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்து இருந்தார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கும் மறுத்துவிட்டதால் நடிகர் ராகவா லாரன்சை நாயகனாகியிருக்கிறார் பி வாசு.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் நாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் இன்று மைசூரில் தொடங்கப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raghava Lawrence starrer ‘Chandramukhi-2’ shooting update

JUST IN மீண்டும் ரஜினி பட தலைப்பில் சிவகார்த்திகேயன் படம்.; ‘மண்டேலா’ கூட்டணியின் மாஸ் டைட்டில் வீடியோ

JUST IN மீண்டும் ரஜினி பட தலைப்பில் சிவகார்த்திகேயன் படம்.; ‘மண்டேலா’ கூட்டணியின் மாஸ் டைட்டில் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் உருவாகி வருகிறது.

இந்தப் படம் மூலம் நேரடி தெலுங்கு சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆகிறார்.

இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை வெங்கடேஸ்வரா நிறுவனத்துடன் சாந்தி டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த நிலையில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22-வது படமாக உருவாகிறது.

மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

வித்யூ அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மேயாத மான் ஓ மை கடவுளே மண்டேலா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். இவர் மண்டேலா மாநகரம், கைதி, மாஸ்டர் விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார்.

மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

பிரின்ஸ் படத்தைத் தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர்.

தற்போது இந்தப் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டைட்டில் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் ஆக இருக்கும் என்று தெரிகிறது.

சிவகார்த்திகேயன் தீவிரமான ரஜினி ரசிகர் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே ரஜினியின் ‘வேலைக்காரன்’ என்ற படத் தலைப்பில் நடித்திருந்தார்.

தற்போது 1980களில் வெளியான ரஜினயின் ‘மாவீரன்’ என்ற பட தலைப்பை தன் படத்திற்கும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மாவீரன்
#Maveeran

Here’s the announcement video of @Siva_Kartikeyan’s next #Maveeran/#Mahaveerudu Directed by @madonneashwin Produced by @ShanthiTalkies @iamarunviswa

Sivakarthikeyan’s next gets Rajini film title again

JUST IN நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் மரணம்.; ராதிகாவின் முன்னாள் கணவரின் வாழ்க்கை பதிவு..

JUST IN நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் மரணம்.; ராதிகாவின் முன்னாள் கணவரின் வாழ்க்கை பதிவு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்தார் பிரதாப் போத்தன்.

இந்த நிலையில் இன்று காலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அவரின் வாழ்க்கைப்பதிவு இதோ..

ஆகஸ்ட் 3 – 1952ல் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் – பொன்னம்மா போத்தன் தம்பதிக்குப் பிறந்தவர் பிரதாப் போத்தன்.

1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர்.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான மம்மூட்டி நடித்த ‘சிபிஐ 5’ படத்திலும் பிரதாப் போத்தன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்தார் பிரதாப் போத்தன்.

ஜீவா, வெற்றிவிழா, லக்கிமேன், மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

இவர் நடிகை ராதிகாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதாப் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்து 1986ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அத்துடன் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த இவர் 2012ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

Pratap Pothen was born on August 13, 1952. Prathap completed his education at Lawrence School, Lovedale in Ooty and Madras Christian College…

Prathap married actress Radhika in 1985 and got separated in 1986. He then remarried Amala Sathyanath in 1990. The couple have a daughter. Their marriage too ended after 22 years, in 2012. His last movie was ‘Barroz’ starring Mohanlal which is yet to be released.

He has won Filmfare Award for Best Actor for Thakara in 1979, Filmfare Award for Best Actor for Chamaram in 1980, Indira Gandhi Award for Best Debut Film of a Director for Meendum Oru Kaathal Kathai in 1985, Filmfare Award for Best Director for Rithubhedam in 1987, Kerala State Film Award – Special Jury Award in 2014.

Malayalam Tamil Actor Prathap Pothen passes away today

‘வானவில்’ போன்ற 7 அழகிய நாயகிகளுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நிரூப்

‘வானவில்’ போன்ற 7 அழகிய நாயகிகளுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நிரூப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் படம் ‘ரெயின்போ’.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பமானது,

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் S. P. ஹோசிமின் .

பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர்.

இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் “சுமோ” விரைவில் வெளியாக உள்ளது.

இந்த புதிய படத்தின் “BIGBOSS” புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன்
நடிக்கிறார்.

இப்படத்தின் ‘வானவில்’ பிரதான கதாபாத்திரமாக வருகிறது.

இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள்.

பிரம்மாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில் FANTASY COMEDY படமாக உருவாகி வருகிறது .

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அயலான் இயக்குனர் R.ரவிக்குமார், இயக்குனர் R. மாதேஷ் , ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், நடிகர் பிக்பாஸ் புகழ் அபினய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

‘சுமோ’ படத்தின் இயக்குனர் S. P. ஹோசிமின் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்த படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளர் வினோத் குமார், இசையமைப்பாளர் சுபாஷ் ஆனந்த், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கூட்டணியில் படப்பிடிப்பு இனிதே ஆரம்பித்தது.

குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக ‘வானவில்’ உருவாகி வருகிறது.

‘Bigg Boss’ Niroop pairing up with 7 beautiful heroines

More Articles
Follows